Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா 12 மில்லியன் ரூபா நிதியுதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான பொருளாதார உதவியை

கணிசமான அளவு குறைத்தது அமெரிக்கா

இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள அந்த நாட்டின் 2009ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு செயற்பாட்டு நிதித்திட்ட அறிக்கை, அதேவேளை வாஷிங்டன் இலங்கைக்கான ஒட்டுமொத்த பொருளாதார உதவியை பெருமளவுக்கு குறைத்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கை கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை மற்றும் பாதுகாப்பு நிலைவரங்களில் முன்னேற்றம் ஏற்படும் வரை அமெரிக்காவில் மிலேனியம் உதவித் திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டதை இந்த நிதியறிக்கை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் 2007இல் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டமை, அங்கு மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி, அதிகார பன்முகப்படுத்தல், மற்றும் வறுமைக்கு முடிவு காணுதல், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு குறிப்பாக கிழக்கில் முக்கிய ஜனநாயக பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியவை சமாதானத்துக்கான ஆதரவை வலுப்படுத்தும். அதேசமயம், கடும்போக்கு வாதிகளின் கருத்துகளை பலவீனப்படுத்தவும் உதவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான உதவிகள் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளமையையும் இந்த நிதி அறிக்கை புலப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு 2009ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த பொருளாதார உதவியாக 65 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டுமென அமெரிக்க வெளிவிவகார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. 2008இல் பொருளாதார உதவி சுமார் 74 லட்சம் அமெரிக்க டொலராகவும் 2007இல் ஒட்டுமொத்த பொருளாதார உதவி 231 லட்சம் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது.

இலங்கையில் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக அமெரிக்கா 2009இல் 29 லட்சம் டொலர்களை ஒதுக்கியுள்ளது. 2008இல் இது 27 லட்சம் டொலராகவும், 2007இல் 40 லட்சம் டொலராகவும் காணப்பட்டது.

இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவி 2008இல் சுமார் ஒன்பது லட்சம் டொலராக காணப்பட்டது. எனினும் 2009இல் இரண்டு லட்சம் டொலராகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, இலங்கைக்கான மனிதாபிமான உதவி குறித்தோ உணவு உதவி பற்றியோ அந்த அறிக்கையில் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

மனித உரிமைத் துஷ்பிரயோகங்களைக் கண்காணித்தல் மற்றும் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் பொதுஅமைப்புகள் ஈடுபடுகின்றமையை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டவையாகவும்

அத்தகைய மீறல்களைத் தடுக்கத் தவறும் அரசுகளை அதற்குப் பொறுப்பாளியாக்குவதையும், மோதல்கள் மற்றும் பிணக்குகளுக்கு சுமுகத் தீர்வு காண்பதற்காக கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றமையை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டவையாகவும்

அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் அமைகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கை தனது வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. அமெரிக்காவின் உதவி, மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சுக்கு கொண்டு வர உதவலாம். அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உதவியுடனான செயற்பாடுகள் ஸ்திரப்படுத்தும் மற்றும் பாதுகாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் செயற்பாடுகள் இராணுவப் பயிற்சி, கடற்படையின் திறனை அதிகரித்தல், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புக்கான சாதனங்களுக்கு நிதி வழங்குதல் என்பவற்றை உள்ளடக்கி காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் நிதி இலங்கை கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிப்பதன் மூலம் யுத்தம் கடினமானது என்பதை விடுதலைப் புலிகளுக்கு புலப்படுத்துவதை நோக்கமாக கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு மோதல் அந்த நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளையும் பொது அமைப்புகளையும் பலவீனப்படுத்தியுள்ளதுடன் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் சமமாக பிரிக்கப்படுவதே இலங்கையில் நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும். கடந்த 20 வருடங்களில் தொடர்ச்சியான சாதகமான பொருளாதார வளர்ச்சி காணப்பட்டுள்ள போதிலும் இலங்கையின் பெருமளவு மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதற்கு பொருளாதார வளர்ச்சி மேல் மாகாணத்துக்குள் குவிக்கப்பட்டதே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள் பின்தங்கியுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.(உ)

http://www.sudaroli.com/pages/news/today/03.htm

இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு என அமெரிக்க அரசாங்கம் 12 மில்லியன் ரூபா நிதியுதவியை சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

எனென்ன முறையில எல்லாம் பணம் கொடுகிறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.