Jump to content

கண்ணப்பன் ஆனார் விக்ரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கன்னத்தை பிடித்து "கண்ணே.." என்று கொஞ்சலாம் விக்ரமை! வேறொன்றுமில்லை. தனது கண்களை தானம் செய்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்ல, தனது ரசிகர்கள் சுமார் 1300 பேரையும் தன்னை போலவே கண்தானம் செய்ய வைத்திருக்கிறார்.

இதற்கான முறையான பத்திரத்தை ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் அவர். இல்லாத ஒருவருக்கு கண் கிடைத்தால் அவர் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவார்? அங்கேயே, அதே மேடையிலேயே அந்த அனுபவத்தை பெற்ற இருவரை பேச வைத்து பார்ப்பவர்களின் கண்களை குளமாக்க செய்தார் விக்ரம்.

இப்படி ஒரு எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது? காசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி. கண்பார்வையற்ற விக்ரமை கையை பிடித்துக் கொண்டு சாலையை கடக்க உதவி செய்வார் சார்லி. படப்பிடிப்புதான் அது என்றாலும், அந்த நேரம் சாலையை கடக்க நான் பட்ட கஷ்டம் என்னை கண்பார்வையற்றவர்கள் பற்றி சிந்திக்க வைத்தது. இந்த சமுதாயம் எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கு. இந்த சமுதாயத்துக்கு நான் என்ன கொடுத்தேன் என்று அவ்வப்போது நினைச்சுப்பேன். இப்போது விக்ரம் பவுன்டேஷன் என்ற அமைப்பை தொடங்கியிருக்கேன். இதன் முலம் நிறைய நல்லது செய்யணும்னு நினைக்கிறேன் என்றார் விக்ரம்.

தனது ரசிர்களுக்காக ஒரு வெப்சைட்டையும் உருவாக்கியிருக்கிறார் சீயான். இதில் தனது ரசிகர்களுடன் அவ்வப்போது சாட் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். தனது சுற்றுப்பயண விபரங்களில் இருந்து, அடுத்ததாக என்ன படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது வரை உடனுக்குடன் தகவல்களை பரிமாற இருக்கிறாராம். முக்கியமாக சில போட்டிகளை வைத்து வெற்றி பெறுகிற ரசிகர்களுடன் டின்னர் சாப்பிடும் எண்ணமும் வைத்திருக்கிறார். அடிக்கடி www.chiyaanvikram.com விசிட் செய்யுங்கள். இந்த அற்புத விருந்து யாருக்கு காத்திருக்கிறதோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

thatstamil.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.