Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய கள முனைகளை திறப்பதற்கு முயற்சி?

Featured Replies

விதுரன்

மடுமாதாவின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. இதனால் மடுவைக் கைப்பற்ற முன்னர் திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டு வந்து வைக்கச் செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கவும், இல்லையேல் திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வரச்செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன.

மடுவைக் கைப்பற்றும் அரசின் நோக்கம் அரசியல் காரணம் கொண்டதென்பது தெளிவு. கிளிநொச்சியை புலிகளிடமிருந்து கைப்பற்றுவதுதான் அரசின் நோக்கமென்றால் அதற்கான பாதையில் இல்லாத மடுவை கைப்பற்ற ஏன் முயலவேண்டுமென்ற கேள்வி எழுந்தது. அரசின் அரசியல் நோக்கமானது தேவாலயத்திற்கே ஆபத்தாகவும் திருச்சொரூபத்திற்கு பாதிப்பாகவும் அமைந்துவிடலாமென்பதாலேயே திருச்சொரூபத்தை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு குருமார்கள் கொண்டுசென்றனர்.

குருமார்களின் இந்த நடவடிக்கை அரசின் நோக்கத்திற்கு பெரும் அடியாகிவிட்டதால், திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் மடுவை நோக்கிய இராணுவ நடவடிக்கையும் ஸ்தம்பிதமடைந்துவிட்டது. திருச்சொரூபமில்லாத மடுவைக் கைப்பற்றுவதால் எதுவித பலனுமில்லையென்பதால் குருமாரின் நடவடிக்கையால் அரச தரப்பும் படைத் தரப்பும் கடும் அதிருப்தியடைந்துள்ளன.

திருச்சொரூபத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவரச் செய்வதற்கான அழுத்தங்களை குருமார்களுக்கு கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் அழுத்தத்தாலேயே குருமார்கள் திருச்சொரூபத்தை பாலம்பிட்டிக்கு கொண்டு சென்றதாகக் கூறி அவர்களைச் சினமடையச் செய்து சொரூபத்தை மீண்டும் மடுத் தேவாலயத்திற்கு கொண்டு வரச்செய்துவிட வேண்டும் அல்லது, தற்போது தேவன்பிட்டி பகுதியில் பாதுகாப்பாக உள்ள சொரூபத்தை மன்னாரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு வரச்செய்துவிட வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது.

திருச்சொரூபத்தை மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டு வந்துவிட்டால் அதன் பின் மடுவை கைப்பற்றும் முயற்சியில் அரச படைகள் மீண்டும் இறங்கும். அல்லது திருச்சொரூபத்தை இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்துவிட்டாலும் மடுவைக் கைப்பற்றும் முயற்சியை மீண்டும் தொடங்கி மடுவை கைப்பற்றிய பின், திருச்சொரூபத்தை மீண்டும் மடுத் தேவாலயத்தில் கொண்டு சென்று வைத்து தென்பகுதி பக்தர்களை அழைத்து வந்து அதன் மூலம் அரசியல் இலாபத்தை தேட அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

திருச்சொரூபம் மீண்டும் பழைய இடத்திற்கு வந்தால் அல்லது திருச்சொரூபத்தை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்தால் மடுவை நோக்கிய படைநகர்வை ஆரம்பிக்குமாறு அரசு படையினருக்கு உத்தரவிடும். இவையிரண்டும் சாத்தியப்படாது போனால், மடுவை நோக்கி நேரடியாக நகராது வேறொரு நகர்வு மூலம் மடுவைக் கைப்பற்றி விட்டு பின் திருச்சொரூபத்தை பழைய இடத்திற்கு கொண்டு வருமாறு திருச்சபைக்கு அழுத்தம் கொடுக்கலாமென்றும் அரசு கருதுகிறது. தற்போதைய நிலையில் மடுவை எப்படியாவது கைப்பற்றி குருமார்களுக்கு அழுத்தம் கொடுத்து திருச்சொரூபத்தை பழையபடி தேவாலயத்திற்கு கொண்டு வந்து அரசியல் இலாபம் தேட அரசு தீவிர அக்கறை காட்டி வருகிறது.

இதனால் மடுவை அண்டிய பகுதியில் நிலைகொண்டுள்ள 57 ஆவது படையணி வேறொரு படைநகர்வை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மடுவிலிருந்து வடக்காக 4 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாலம்பிட்டியை கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப் புலிகளின் விநியோக வழிகளைத் தடைசெய்து மடுப்பகுதி மீதான படை நடைவடிக்கையை இலகுவாக்குவதே படையினரின் தற்போதைய உத்தியாகும்.

இதற்கமைய 57 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் முள்ளிக்குளத்திலிருந்து பாலம்பிட்டியை நோக்கி முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது அது பாலம்பிட்டியிலிருந்து மூன்று கி.மீ.தூரத்திற்கு அப்பாலுள்ளது. பாலம்பிட்டியை கைப்பற்றி அங்கிருந்து முன் நகர்ந்து பெரிய மடு பின்னர் பள்ளமடுவுக்குச் சென்று விட்டால், மடுவுக்குச் செல்லாமலே புலிகளிடமிருந்து மடுப்பகுதியை முழுமையாகக் கைப்பற்றிவிடலாமென படைத்தரப்பு கருதுகிறது. நீண்ட தூரம் சென்றும் சுற்றிவளைத்துச் செல்வதன் மூலமூமே மடுவுக்கு நேடியாகச் செல்லாது மடுப்பகுதியிலிருந்து புலிகளை அப்புறப்படுத்த வேண்டுமென படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

மடுவை எப்படியாவது கைப்பற்றி திருச்சொரூபத்தை மீண்டும் அங்கு கொண்டுவந்து விட வேண்டுமென்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது. இதனால்தான், அரச படைகள் மடுவை நோக்கிச் சென்ற போது திருச்சொரூபம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விட்டதால் மடுவை நோக்கிய படைநகர்வும் நின்று விடுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஒரு புறம் மடுவை நோக்கிய நகர்வை மேற்கொண்டவாறு மறுபுறம் மடுத் தேவாலாயத்திற்கு திருச்சொரூபத்தை மீண்டும் கொண்டு வருமாறு அல்லது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சொரூபத்தை கொண்டு வருமாறு குருமார்களுக்கு அரசு மிகக் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

மேலும் வாசிக்க : http://www.thinakkural.com/news%5C2008%5C4...s_page49478.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரைக்கிற நாய் கடிக்காது. செய்யிறவன் முதல்ல சொல்லமாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

திறந்த களமுனைகளே அல்லாடிக்கொண்டிருக்கிறது. இதற்குள் புதிய களங்கள் திறக்கப்போகிறார்களா? :D

அரசு திறந்த களமுனைகள் எல்லாமே பிசுபிசுத்துவிட்டன. அதிலிருந்து தப்புவதற்குத்தான் பாலம்பிட்டி நடவடிக்கை என்று சொல்லப்படுகிறது. ஆகவே இனி ஒருவருடமாக இழுபட்ட மடுவைக் கைப்பற்றும் படைநகர்வு வேறு பெயர் கொண்டு செய்யலாம் செய்யப்படலாம் செய்தாகணும் என்றெல்லாம் கட்டுரையாளர் சொல்லுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.