Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிந்தனையை ஆன்மீகம் மழுங்கடித்துவிடும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிந்தனையை ஆன்மீகம் மழுங்கடித்துவிடும்

நடிகர் கமலஹாசன் கருத்து

சென்னை, மே 5- ஆன்மீகம் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகிறது; அத்தகைய ஆன்மீகத்தை ஒரு போதும் தன் மனம் நாடாது என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது.

நான் ஆன்மீகத்தை வெறுக்கிறேன். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மீகம் நம்மை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்துவிடுகிறது.

ஆனால் நான் சாகும் வரை இயங்க விரும்புகிறேன். என்னையே கேள்வி கேட்டு, எனது வாழ்க்கை முறையை கவனித்து, காலத்திற்கு ஏற்ப புதிய சிந்தனைகளைச் சேர்த்துச் செயல்பட விரும்புகிறேன். எனது உடலைப் புதைக்கும் போதோ அல்லது எரிக்கும்போதோதான் நான் அமைதியாவேன்

சிந்தனையை ஆன்மீகம் மழுங்கடித்துவிடும்

நடிகர் கமலஹாசன் கருத்து

:lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D

வெற்றிவேல் :D

வெற்றிவேல் :lol:

பகுத்தறிவு! :D:D:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தத்துவங்கள் - புதிய சிந்தனைகள்

ஆத்மா - ஆன்மீகம்; கற்பனை - புரட்டே!

- கி. வீரமணி

ஆன்மீகம் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகிறது; அத்தகைய ஆன்மீகத்தை ஒருபோதும் தன் மனம் நாடாது என்று கலைஞானி நடிகர் கமலஹாசன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,

நான் ஆன்மீகத்தை வெறுக்கிறேன். கடவுள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மீகம் நம்மை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது; தேடுதலைக் குறைத்துவிடுகிறது.

என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால், எனது வாழ்க்கையில் தலையிட முடியாது.

நான் சாகும்வரை இயங்க விரும்புகிறேன்.

- இவை மிகவும் பாராட்டி வரவேற்கப்படவேண்டிய ஒரு பகுத்தறிவுவாதியின் புரட்சிகரமான சிந்தனைகளாகும்.

ஆன்மீகம் என்ற சொற்றொடரை பிற்கால சில தமிழ்ப் புலவர்கள்தான் உருவாக்கினார்கள்.

இதற்குமுன் நமது பழைய இலக்கியங்களில் ஆத்மா - ஆன்மா என்ற சொற்றொடர்கள் ஏதும் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை.

கடவுள், மதம், சமயம் போன்ற சொற்களேகூட கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு அதாவது ஆயிரத்து ஏழு நூறு ஆண்டுகளுக்கு (1700) முற்பட்ட நூல்களில் வருதல் கிடையாது என்று தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தமிழர் மதம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆன்மீகம் என்ற சொற்றொடர் எதிலிருந்து உருவாக்கப்பட்டது?

ஆத்மாவைத் தமிழ்படுத்தியதால் வந்த மிகப் பெருங்கேடு இது!

ஆத்மா என்பது தமிழ் அல்ல. தமிழர் இலக்கியங்களில் கிடையாது.

தமிழர் இலக்கியங்களைக் கூட நோக்காமல் இதன்மூலம் - வேர் எதிலிருந்து என்று ஆராய்வோமேயானால்,

ளுயீசைவை என்ற ஆங்கிலச் சொல் - இதுவே லத்தீன் என்ற மொழியில் மூச்சு என்பதற்காகவே வழங்கப்பட்டது. அதே பொருளுடையது. சுவாசிப்பதை - காற்றை உள்வாங்கி வெளியே விடுவதையே குறிப்பிடுவது.

அதிலிருந்து மூச்சு விடுவதை ஒட்டியேதே இது. உயிர், உடம்பு என்று பகுத்துள்ளது “Body and the Spirit” என்பதுதான்.

இதனை ஆத்மாவாக்கியது, ஏனென்றால், அவனவன் கர்மவினைப் பயன், மறு பிறப்பு என்பது போன்றவற்றைப் பாதுகாப்பு அரண்களாக்குவதற்கு ஒரு கருவி தேவைப்பட்டது. அப்படிக் கிடைத்ததுதான் ஆத்மா என்ற கற்பனைச் சரக்கு. கடவுள் என்பது எப்படி ஒரு கற்பனையோ அதுபோன்றே ஆத்மா என்பதும் கற்பனையே! ஆத்மா - தான் தமிழ்ப்படுத்தப்பட்டு ஆன்மா என்ற தமிழ்ப் புலவரால் வழக்கத்திற்குக் கொணரப்பட்டு, அதிலிருந்து முளைத்ததுதான் ஆன்மீகம் என்பது!

ஆத்மாவே கற்பனை, அடிப்படையற்றது எனும்போது, ஆன்மா - ஆன்மீகம் என்பது ஆகாயத்தில் கட்டப்பட்டு எட்டு வாசல்களுடன் உள்ள கோட்டை என்பது போன்ற கற்பனை அல்லாமல் வேறு என்ன? ஆன்மீகம் என்பதை சமயம் என்பதற்கு மாற்றுச் சொல்லாக சில மதவாதிகள் - சமயவாதிகள் சில நேரங்களில் பயன்படுத்துகிறார்கள்.

இதுவும் சரியானதல்ல; காரணம் எல்லா சமயங்களும் ஆத்மாவை ஒப்புக்கொள்ளவில்லை.

பவுத்தம் ஏற்பதில்லை. இதிலும் சில திரிபுவாதிகள் பிற்காலத்தில் நுழைந்து தவறான வியாக்கியானம் தந்தனர்! தொல்காப்பியர், வள்ளுவர் குறளில் ஆத்மா, மதம், சமயம், கடவுள் என்ற எந்தச் சொற்களும் இடம்பெறவில்லையே ஏன்?

காபி (Coffee) குடிக்கிறோம்; அதைக் காபி என்றே அழைக்கிறோம். அதைத் தமிழ்ப் படுத்தினால் அது தமிழர்களுக்கு உரியது என்று ஆகிவிடுமா? தென் அமெரிக்கா பிரேசிலில் இருந்து காபி இறக்குமதியான ஒன்று; அதனை "Coffee" என்றே அழைப்பதுதானே சரியானது! அதைத் தமிழ்ப்படுத்தி, அதிலிருந்து இன்னொரு சொற்றொடரை உருவாக்கினால் எப்படி சரியானதாகும்?

நம்முடையது அல்ல; வெளியிலிருந்து இறக்குமதியான அந்நியச் சரக்கை, அச்சொல்லைக் கொண்டே அழைத்தால்தான் நம்முடையது அல்ல என்ற உணர்வினை தமிழர்கள் எப்போதும் பெற முடியும்!எனவே, ஆத்மாவை ஆன்மா ஆக்கி - அதிலிருந்து முளைத்ததே ஆன்மீகம் என்ற இல்லாத ஒரு கற்பனை. எந்தப் பகுத்தறிவாளனும் இதை ஏற்க முடியாது!

சமயவாதிகள், மதவாதிகள் என்று அழைப்பதை ஏதோ பொதுமைப்படுத்துவதாக தங்களுக்குத் தாங்களே ஒரு வரைபடம் வரைந்துகொண்டு சிலர் ஆன்மீகம் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது பொய்மைக்குப் பூண்போட்டு மக்களின் அறிவைக் கெடுப்பது ஆகும்!

இவ்வுலகம் பொய் - காண்பதெல்லாம் பொய். வேறு உலகம் மேல் உலகம் உள்ளது, அதுதான் மெய். இவ்வுலக வாழ்க்கை பொய்யானது அந்த மேல் உலக வாழ்க்கையே மெய்யானது என்றெல்லாம் கூறும் சாக்குருவி வேதாந்தம் மனிதனை வாழ, வளர வைக்காது!

கடவுளைக் கண்டுபிடித்தவனைக் கூட மன்னிக்கலாம்; ஆத்மாவைக் கண்டுபிடித்தவனை மன்னிக்கவே முடியாது என்றார் பெர்ட்ரண்ட் ரசல் போன்ற அறிஞர்கள்!

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்ற தந்தை பெரியார், ஆத்மாவைக் கண்டுபிடித்தவனை அயோக்கியன் என்றார்.

முன்னவன் மன்னிக்கப்பட வேண்டியவன்; பின்னவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்ற கருத்து அதில் உள்ளடக்கம்.

ஆன்மீகம் என்ற சொற்றொடரை உருவாக்கியவனைவிட தலைசிறந்த தமிழின விரோதி வேறு யாரும் இல்லை.

எனவே, இல்லாத ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுவோர் தெரிந்தோ தெரியாமலோ புரட்டுக்காரர்கள்தாம்!

புரட்டுகள் உடையட்டும்

புதிய சிந்தனைகள் வளரட்டும்!

கி.வீரமணி.

500 கோடியில் எத்தனை சுழியம் (சைபர்)

ஆன்மீகத்தில் சென்றால் என்ன மிஞ்சும் சுழியம் தான் மிஞ்சும்.

கண்மணிகளே கழகப்பணி செய்யுங்கள்!

அய்யா உங்கள் வாரிசுகள்?!

ஏய் முட்டாளே அவர்களுக்கு அமெரிக்க காற்றும் மலேசிய காற்றும் பழக்கப்பட்டு விட்டது

என் செல்வங்கள் சேரியில் இறங்கி சேவை செய்வதா? :mellow:

தத்துவங்கள் - புதிய சிந்தனைகள்

ஆத்மா என்பது தமிழ் அல்ல. தமிழர் இலக்கியங்களில் கிடையாது

அப்படியென்றால் அப்பனே வேட்டி என்பதும் தமிழ் கிடையாது என்று எவராவது சொல்லி விடப்போகிறார்கள்!

வேஷ்டி என்றால் வடமொழியில் சுற்றிக்கட்டுவது என்று பொருள். போகிற போக்கில் தமிழனை நிர்வாணமாக்கி விட போகிறீர்கள் போலிருக்கிறது :mellow::D:(

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.