Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி [ குமுதம் ரிப்போர்ட்டர் ]

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைப் பலவீனப் படுத்தினால் அது வரலாற்றுத் தவறாகி விடும்! - இலங்கை தமிழ் எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பேட்டி

pg12ek9.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒன்றே முக்கால் மணி அளவில் புலிகளின் வான்படைப்பிரிவின் இரண்டு விமானங்கள் பறந்து சென்று, இலங்கை ராணுவ முகாம் இருந்த மணலாற்றுப்பகுதியில் குண்டு வீச்சு நடத்தி விட்டுத் திரும்பியுள்ளன. இந்தச் சூழலில், புலிகளின் தலைமையகமும் பிரபாகரனின் இருப்பிடமும் கொண்ட வன்னித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் சென்னை வந்திருந்தார். இவர் சிறீ சபாரத்தினத்தின் ‘டெலோ’ இயக்க ராணுவத் தளபதியாக இருந்தவர். சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பிறகு இப்போது டெலோ இயக்கத் தலைவர் பொறுப்பை வகிப்பதோடு வன்னித் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். அவரைச் சந்தித்தோம்.

இலங்கையிலுள்ள பதற்றமான சூழ்நிலையில் நீங்கள் சென்னை வந்திருப்பதன் நோக்கம் என்ன?

pg12aft4.jpg

‘‘மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்று மூன்று மாவட்டங்களைக் கொண்டது வன்னித் தொகுதி. இதை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று சிங்கள ராணுவம், அளவுக்கு அதிகமான ஆயுதப் பிரயோகம் செய்து வருகிறது. தினம் தினம் குண்டுவீச்சு, துப்பாக்கிச் சண்டை! இதில் அப்பாவித் தமிழ்மக்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி அப்பாவித் தமிழர்களைத் தாக்குவதன் மூலம் புலிகளின் மனவலிமையை பலவீனப்படுத்தி அதன் மூலம் வன்னிப்பகுதிக்குள் உள்ளே நுழைந்து விடலாம் என்று சிங்கள ராணுவத்தினர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருந்துகளும் இல்லை. மருத்துவர்களும் இல்லை. தடைசெய்திருக்கிறார்கள். கூடவே, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் தடை. இப்படியான சூழ்நிலையில் மக்கள் பாடு எப்படியிருக்கும்? இனியும் போர் நீடித்தால் அபாயகரமான சூழ்நிலையே ஏற்படும். அதனால்தான் தமிழகம் வந்தோம். எனக்கு முன்பே இங்கு வந்த சிவாஜிலிங்கம் எம்.பி. தலைமையில் மற்ற தமிழ் எம்.பி.க்களும் சேர்ந்து, தமிழக அரசியல் கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து இலங்கைப் போரில் இந்தியா தலையிடுவதற்கான ஓர் அழுத்தத்தைக் கொடுக்க தமிழகக் கட்சிகள் முனைய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள். நானும் அதற்காகவே வந்தேன்.’’

இங்கு வந்ததன் நோக்கம் எந்தளவிற்கு நிறைவேறியுள்ளது?

‘‘நிறையவே! அ.தி.மு.க.வின் தலைமையகம் சென்றோம். ‘இது விஷயத்தில் மேடத்திடம்தான் நீங்கள் பேச வேண்டும்’ என்றார்கள். பிறகு ‘கார்டன்’ சென்று விளக்கமாக கோரிக்கையைக் கொடுத்தோம். அடுத்து ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலரிடம் பேசினோம். காங்கிரஸ் சார்பில் சுதர்சனத்தைச் சந்தித்து விளக்கினோம். கூடவே சில காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்தோம். எப்படியாவது தமிழக சட்டப்பேரவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். அதாவது மைய அரசு தலையிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு அ.தி.மு.க., காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்புக் காட்டாமலிருக்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை. அதோடு மருத்துவர் ஐயா, வைகோ, தொல்.திருமாவளவன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட பலரையும் சந்தித்து நிலைமையை விளக்கினோம். அதன் பலன்தான் தமிழக சட்டமன்றத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேறியிருக்கிறது எனக் கருதுகின்றோம். இது மட்டுமல்ல. டெல்லி நாடாளுமன்றத்திலும் இப்படியரு ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்ற வழி செய்ய வேண்டும். அதற்காகவும் தமிழக மற்றும் டெல்லிப் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளோம்.’’

ஈழத்தமிழ் மக்களுக்காக, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து, நீங்களும் தமிழீழ மக்களும் என்ன நினைக்கிறீர்கள்?

‘‘எங்களிடையே பெரிய அளவில் உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையின் எதிரொலிதான் நான்கு தினங்களுக்கு முன்பு முகமாலையில் வைத்து புலிகள் சிங்களப் படையை பின்வாங்கி ஓட வைத்திருக்கிறார்கள். சுமார் நூறு ராணுவத்தினர் வரை பலியாகியிருக்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு மணலாற்றுப் பகுதியிலிருந்த சிங்கள ராணுவ முகாம் மீதே விமானத்தில் பறந்து சென்று தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தமிழகத்தின் இந்தத் தீர்மான ஆதரவுக்கு வாழ்த்துச் சொல்கிறோம். நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’’

தமிழ் எம்.பி.க்களான நீங்கள் இலங்கையில் சுதந்திரமாக நடமாட முடிகிறதா?

pg12bbb9.jpg

‘‘இதுவரை அங்கே ஆறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் சிங்கள ராணுவமேதான். அந்த ராணுவத்தில் ‘ஆழ ஊடுருவித் தாக்கும்’ பிரிவு என ஒன்று இருக்கிறது. தமிழர்கள் பகுதியில் வந்து எப்படியாவது எங்களது போக்குவரத்து நடமாட்டத்தைத் தெரிந்து கொண்டு, நாங்கள் போகும் பாதையில் ரிமோட் மூலம் இயக்கி குண்டுகளை வெடிக்க வைத்துக் கொல்கிறார்கள். வாய்ப்பாக உள்ள இடத்தில் துப்பாக்கிப் பிரயோகமும் செய்கிறார்கள். அப்படிப்பட்டதொரு தாக்குதலில்தான் சிவனேசன் எம்.பி. இறந்தார். எந்த நேரத்திலும் எங்களுக்கு மரணம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் தவணை முறையில்தான் எங்களுடைய வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.’’

இந்தக் கேள்வி உங்களுக்கு நெருடலாக இருக்கும். உங்களின் ‘டெலோ’ தலைவராக இருந்த சிறீ சபாரத்தினத்தைக் கொன்றதே விடுதலைப் புலிகள் இயக்கம்தான். கூடவே பல டெலோ போராளிகளையும் கொன்றுள்ளது. இந்த நிலையில் நீங்கள் எப்படி அவர்களோடு...?

‘‘உண்மைதான். மறுக்கவில்லை. அதே நேரத்தில் மற்றொரு விவரத்தையும் விளக்க வேண்டும். இன்று புலிகள் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வலுப்பெற்று இருக்கின்றார்கள். கொள்கை அடிப்படையில் அன்று அவர்கள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். நாங்கள் அதை மனதில் நிறுத்திக்கொண்டிருக்க முடியாது. கூடாது. காரணம், இன்று அங்கே தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு அரணாக நின்று வாதிட்டு வருகிறது புலிகள் அமைப்பு. அவர்கள் இல்லை என்றால் தமிழீழ மக்களின் பாதுகாப்பு நிலை மேலும் மோசமாகும். சிங்கள அரசு, தான் நினைக்கும் திட்டத்தை தமிழ் மக்கள் மீது வலியத் திணிக்கும். தமிழ் இனத்தின் உரிமைகளை அது மேலும் நசுக்கும் விதமாக அமையும். இந்த நேரத்தில் புலிகளுக்கு எதிரான கருத்தில் நின்று அவர்களை பலவீனப்படுத்துவது தமிழ் இனத்திற்கே செய்யும் துரோகம். புலிகளை பலவீனப்படுத்தினால், அதுவொரு வரலாற்றுத் தவறாகும் என்பதை அறிந்தே ஆதரவாக நிற்கின்றோம். அதனால் அனைத்தையும் மறந்துள்ளோம். அதேபோல புலிகளும் முன்பு போன்று இல்லாமல் எல்லோரையும் அரவணைத்துச் செயல்படுகிறார்கள்.’’

பா. ஏகலைவன்

படம் : ம. செந்தில்நாதன்

- குமுதம் ரிப்போர்ட்டர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் சில பகுதிகளில் டெலோ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவு நாளைக் குறிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அதில் புலிகளை கொச்சைப் படுத்தியிருந்ததாகவும் நண்பர் ஒருவர் சொன்னார். தற்போதைய டெலோவுக்கும் புலிகளுக்கும் இடையில் நல்லுறவு இருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அரசாங்கத்தால் தான் ஒட்டப்பட்டிருக்கும் என நான் நினைக்கின்றேன். பரவலாக தமிழர்கள் வாழ்கின்ற வெள்ளவத்தை மட்டக்குளி கொட்டாஞ்சேனை பகுதிகளில்தான் இவற்றை கண்டதாக நண்பர் கூறினார். இவ்வளவுகாலமாக அதாவது 2002 இன் பின்னர் முதல் தடவையாக ஸ்ரீக்கு அஞ்சலி என்ற போர்வையில் இந்த சுவரொட்டி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.