Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் விளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை

மீறல்களின் விளைவு

அண்மைக் காலங்களில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்வேறுபட்ட கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிடுகின்றது என்ற வகையில் அமைந்திருந்த கண்டனங்கள் இப்போது அரசு - அரசபடைகளுமே மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன என்று மாற்றம் பெருமளவுக்கு உலகம் உண்மையை உணர ஆரம்பித்துவிட்டது.

இதன் பிரதிபலிப்பாக இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பிலிருந்து வெளியேற்றப்படக்கூடிய ஒரு சூழல் தோன்றியிருக்கிறது. இவ்வமைப்பில் உள்ள 37 நாடுகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு உதவி வழங்கும் ஒப்பந்தத்தை தொடர்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யும் நிலை தோன்றியுள்ளது. அதாவது இந்த ஒப்பந்தம் இரத்துசெய்யப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படும்.

இன்று வருடமொன்றுக்கு 38,000 மில்லியன் பெறுமதியான தைக்கப்பட்ட ஆடைகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் போது இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதுடன். ஆடை உற்பத்தி தொழிலும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்படும். இதன் மூலம் வேலையற்றோர் தொகை அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான ஒரு சூழலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சர் மகிந்த சமரசிங்கவை அவ்விடயம் தொடர்பாக பேச்சுகளை நடாத்தி ஐக்கிய நாடுள் மனித உரிமைகள் அமைப்பிலிருந்து இலங்கை வெளியேற்றப்படுவதை தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும்படி அனுப்பியுள்ளார். இவ்வகையில் ஆரம்ப முயற்சியாக அமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஜோன் ஹோம்ஸ் அவர்களை சந்திக்கவுள்ளார். ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு பயணம் செய்த பின்பு அவர் சில கருத்துக்களை வெளியிட்டபோது. இலங்கை அரசதரப்பால் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார் என குற்றம் சாட்டப்பட்டவராவார். இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பை சேர்ந்த லூயிஸ் ஹாபா அவர்கள் மேல் சுமத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்த சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மீது சேற்றை அள்ளி வீசிய அரசதரப்பு தங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும்போது அவர்களின் கால்களிலே விழும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கை அரசாங்கம் இப்படியான மனித உரிமை மீறல்கள் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும்போது விசாரணைக் குழுக்களை நியமிப்பதும், நியாயமான விசாரணைளை நடத்துவது போன்ற தோற்றப்பாடுகளை காட்டி ஏமாற்றுவதும் வழமையான வியடங்கள்தான். தற்சமயம் கூட திருமலையில் இருந்து மாணவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இவ்விசாரணைகளில் சாட்சியமளிப்போர் சுதந்தரமாக சாட்சியளிக்க முடியாதவாறு நடத்தப்படுவது சாட்சிகளுக்கு பாதுகாப்பற்ற இடங்களில் விசாரணைகளை நடத்துவது போன்ற நடைமுறைகளால் குற்றவாளிகள் தப்பிக் கொள்ளும் நிலையும் ஏற்படுத்தப்படுகிறது. இதேவேளையில் விசாரணைகளை நடத்துபவர்கள் நியாயமாக நடந்துகொள்வார்கள் என்பதை நம்பக்கூடிய சூழ்நிலையும் இங்கு இல்லை.

அது மட்டுமன்றி இப்படியான நெருக்கடிகள் தணிந்த பின்பு இவ்விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டு விடும். இன்றுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் , புத்தி ஜீவிகள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் படுகொலை செய்யப்பட்ட போதிலும் எந்தவொரு ாெலையாளியும் தண்டிக்கப் படவில்லை என்பவது கவனத்தில் எடுக்கப்படவேண்டிய முக்கிய விடயமாகும்.

இப்படியான ஒரு நிலையில் ஒரு புறம் அமைச்சர் எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிரட்டல் விடுக்க, இன்னொரு புறம் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் பிரமுகர்களின் காலில் விழுவதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் அங்கு சென்று விடுதலைப்புலிகள் சிறுவர்களைக் கடத்திப் படையில் சேர்ப்பதாகவும் படுகொலைகள், ஆட்கடத்தல் தொடர்பாக அரசு நீதியான விசாரணை நடத்தி வருவதாகவும் பழைய புராணத்தையே மீண்டும் பாடுவர் என்பது நிச்சயம். ஆனால் இந்த முறை இவ்விதமான பம்மாத்துகள் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே.

இதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று சிறுவர்களை விடுதலைப்புலிகள் படையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பொய்மை பற்றி ஏற்கனவே "யுனிசெப்' நிறுவனம் தெளிவான அறிக்கையை விடுத்துள்ளது. அது மட்டுமன்றி கருணா குழுவினரே சிறுவர்களை கடத்துகிறார்கள் என்பதை ஜோன் ஹோம்ஸ் தெளிவாக கூறிவிட்டார்.

அடுத்து நீதிக்கு புறம்பான கொலைகள். ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளை கண்காணிக்கவென அமைக்கப்பட்ட இந்திய முன்னாள் நீதிபதி பகவதி தலைமுறையிலான நிபுணர்கள் குழு விசாரணையின்போது இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் முறையற்ற தலையீடுகளை கண்டுத்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டது. இன்னொரு புறம் அமெரிக்காவும் இலங்கையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து மிலேனியம் உதவித் திட்டத்தை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இப்படியாகச் இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் சர்வதேச அளவில் அம்பலப்பட்டுள்ள. வேளையில், கண்டனங்கள் என்றளவில் இருந்த எதிர்ப்புகள் இப்போது நடவடிக்கைகள் என்றளவுக்கு விரிவடைந்து விட்டன.

இத்தகைய ஒரு நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையை மீட்பதற்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்பயணம் வெற்றி பெறுவதற்கான சகல சாத்தியக்கூறுகளும் அற்றுப்போய்விட்ட நிலைமையிலும் இம்முயற்சி இவரால் மேற்கொள்ளப்படுகிறது.

இப்படி ஒரு பகீரத முயற்சி மேற்கொள்ளப்படும்போது அதைப் பலவீனப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் அரச தரப்பாலேயே செய்யப்படுகின்றன. இதில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களும் இடம்பெறவுள்ள மாகாணச் சபைத் தேர்தல்களும் முக்கியமானவையாகும்.

கிழக்கில் இடம் பெற்று உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் துணை இராணுவக் குழுவினரான பிள்ளையான் குழுவினர் போட்டியிட்டனர். இவர்களின் ஆயூதங்கள் களையப்பட வேண்டும் என பல தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோது அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அவர் ஆயுதங்களுடன் போட்டியிடுவதை எதிர்த்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தேர்தலை பகிஸ்தரித்தன. அதாவது மக்கள் ஆயுத முனையில் வாக்களிக்க வேண்டிய அளவுக்கு அங்கு பகிரங்கமாகவே மனித உரிமைகள் மீறப்பட்டன.

அது மட்டுமின்றி இடம் பெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும் இக்குழுவினர் ஆயுதங்களுடனேயே போட்டியிடவுள்ளனர். இவர்களின் கோரிக்கையின் பேரிலேயே மட்டகளப்பு, அம்பாறை மவாட்டங்களிலிருந்து இலங்கை அதிரடிப்படையினர் வெளியேற்றப்படுகின்றனர் என்ற செய்தியும் வந்துள்ளது.

இப்படியான அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஒரு புறம் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறம் ஜோன் ஹோம்ஸ் போன்றவர்களிடம் காலில் விழுந்து சமாளிக்க முயல்வது முழு உலகையே ஏமாற்ற முயலும் ஒரு மோசடிதான். ஆனால் இம்முறை இந்த ஏமாற்று வித்தை பலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்பதே பலரின் அபிப்பிராயமாகும்.

இந்நிலையில் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும். இது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற் சாதகமான சர்வதேச நிலைமைகளை உருவாக்கும் என்பதனை நம்பலாம்.

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.