Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்குத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். - த.தே.கூட்டணி

Featured Replies

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், இவர்கள் என்ன தான் தலை கீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென த.தே.கூட்டமைப்பின் திகாமடுல்ல பா.உ கே. பத்மநாதன் தெரிவித்தார்.

பாரளுமன்றில் செவ்வாயன்று அவரச கால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் :

'கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றெயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் செய்யத் தயாரகியுள்ளது. கிழக்குப்பக்கமே எட்டிப் பார்க்காத அமைச்சர்கள் எல்லாம் தற்போது கிழக்கில் முகாமிட்டுள்ளனர். கிழக்கை அபிவிருத்தி செய்யப் போவதாக முழக்கமிடுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் தலைவிதி தமிழ், முஸ்லிம்களின் கைகளிலேயே உள்ளது. இம்மக்களை எதிர்த்துக் கொண்டு எந்த சக்தியாலும் வெற்றி பெற முடியாது. எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இதனை அரசுக்கு தமிழ் மக்கள் உணர வைப்பார்கள் அரசு தோற்கடிக்கப்படும்.

ஏற்கனவே தமிழ் மக்களால் நிராகரிக்கபட்டதொரு திட்டத்துடன் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் முட்டாளாக்கப் பார்க்கின்றது. இதற்கு ஒருபோதும் தமிழ் மக்கள் இடமளிக்க மாட்டார்கள்.

துரைரெட்ணசிங்கம்

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகளவிலான இளைஞர்கள் கைது செய்யபடுகின்றனா. இவர்கள் பின்னர் மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கே வாக்களிக்க வேண்டுமென அச்சுறுத்தப்பட்டு நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்த நிலையிலுள்ளனரென த.தே.கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பா.உ துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டததில் பல கூத்துகள்,நாடகங்கள், யுக்திகள் அரசினால் அரங்கேற்றபட்டடுக் கொண்டிருக்கன்றன. தமிழ் மக்களின் வாக்குகளை பலவந்தமாகப் பெறுவதற்கு அரசு முயன்று வருகின்றது.

திருகோணமலையில் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய முயற்சித்த போதும முடியவில்லை. இறுதியில் அப்பிரதேசத்தின் அரச கட்சி அமைப்பாளர் மூலம் அந்த இளைஞர்கள் நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கபட்டு;ளளனர்.

இது இவ்வளவு கேவலமாதொரு செயல். இதேபோன்று திருகோணமலை நகரசபைத் தலைவர், உப தலைவரை திருகோணமலை ஹோட்டலொன்றிலுள்ள அமைச்சர்கள் சிலர் சந்திக்க விரும்புவதாகக் கூறி அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அங்கே சென்றபோது திருகோணமலையில் தாம் செய்த சில அபிவிருத்தித் திட்டங்ளை தொடர்பாக நன்றி கூறுமாறு வற்புறுத்தப்பட்டனர்.

அந்த ஹோட்டல் அறையில் ஏற்கனவே, ஊடக படப்படிப்பாளர்கள் சில அரச ஊடுகச் செய்தியாளர்கள தயார் நிலயில் இருந்துள்ளனர். அவ்வாறு வலியுறுத்திப் பெறப்பட்ட நன்றி இன்று அரச ஊடகங்களில் பெரிதாக வெளியிடப்டபட்டுள்ளன.

திருகோணமலையில் மழை. வெள்ளங்கள் பல அனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்பட்ட நிலயில் அங்கு வந்து அவர்களைப் பார்த்து ஆறுதலல சொல்லக்கூட மறுத்த அமைச்சர்கள் பலர் இன்று வாக்கு வேட்டைக்காக அப்பகுதிகளெங்கும் கும்பிட்டவாறு திரிகின்றனர்.

தமிழ், முஸ்லிம்கள் நிறைந்த எமது பிரதேசத்தில் சிங்கள வேட்பாளரையே முதன்மை வேட்பாளராக அரசு நியமித்துள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் ஒரு கடற்படைத் தளபதி. திருமலை மாவட்ட அரச அதிபர் ஒரு இராணுவத் தளபதி. இதுதான் அரசின் மக்களாட்சியா எனக் கேட்க விரும்புகிறேன்.

ஜெயானந்தமூர்த்தி

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்ட தமிழ் மக்கள் காத்திருப்பதால் அரசு தேர்தலில் படுதோல்வியை சந்திக்குமென த.தே.கூட்டமைப்பு எம்.பி. எஸ்.ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தை அரசு விடுவித்துள்ளதாக கூறுகிற போதிலும் அங்கு கெடுபிடிகள் அதிகரித்து பெரும் எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகளையும் அதிகரித்திருப்பதன் மர்மமம் என்னவெள்று எமக்குப் புரியவில்ல.

இப்பொது கிழக்கு மாகாண சபைத தேர்தல குறித்து பேசப்படுகிறது. 10 ஆம் திகதி தேர்தலில் எவ்வாறு, எவருக்கு வாக்களிக்க வேண்டுமெனள்ற உறுதியான தீர்மானத்துடன் தமிழ் மக்கள் உள்ளனர். ஆம் தமிழ் மக்கள் வெற்றிலைச் சின்னத்தை தோற்கடிக்க உறுதிபூண்டுள்ளனர்.

கிழக்கினை சிங்கள மயமாக்கி தமிழர் தாயகத்தை கூறுபோட அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் சிங்களமய திட்டத்திற்கு சில தமிழ் குழுக்களும் ஒத்துழைப்பு நல்கின்றன. எனினும் இது நிரந்தரமானதல்ல, கிழக்குக்கு புலிகள் எந்தநேரத்திலும், எவ்வுருவிலும் வருவார்கள். இதனை தடுக்க முடியாது.

முகமாலைச் சமரில் இராணுவத்தினருக்கு பலதத இழப்பு ஏற்பட்டது. இதனை மூடி மறைப்பதற்காக கடந்த ஒரு மாதத்தில் 121 இராணுவத்தினரே கொல்லப்பட்டதாக பிரதமர் கூறினார். இது தவறான அறிக்கையாகும்.

புலிகளை இராணுவ ரீதியாக ஒரு போதுமே வெற்றி கொள்ள முடியாது. இது கடந்த கால வரலாறாகும். இராணுவத்தில் இணைந்து அரசின் கபடத்தனத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாமென நாம் சிங்கள இளைஞர்களை கோருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

நன்றி தினக்குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பாடம் புகட்ட தமிழ் மக்கள் காத்திருப்பதால் அரசு தேர்தலில் படுதோல்வியை சந்திக்குமென த.தே.கூட்டமைப்பு எம்.பி. எஸ்.ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார்

கிழக்கில் கூட்டணியினர் போட்டியிடாமல் எப்படி அரசு தோற்கடிக்கப்படும் என கூறுகிறார்கள்? முஸ்லிம் கட்சிகள், ஐ தே க போன்ற கட்சிகள் வெல்லுமா?. அரசு தோற்கடிக்கப்பட வேண்டுமானால் ஓட்டு மொத்த மக்களும் வாக்களிக்காமல் விட வேண்டும். இதுவும் சாத்தியமில்லை. :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.