Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்ணே நீ வாழ்க.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sukhisivamop-inner.jpg

அந்தக் காலத்துப் பெண்கள், எத்தனையோ சிக்கல்களுக்கு மத்தியிலும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் ன்றைய படித்த, சம்பாதிக்கிற, அனுசரணையான கணவன் இருக்கிற பெண்களால் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த முடிவதில்லையே... ஏன்?

நான் காரணம்தான் சொல்கிறேன். அது சரியா தவறா என்று பேச விரும்பவில்லை.

ஒரு பெண் தன் கணவனை விரும்பும் பட்சத்தில், நேசிக்கும் பட்சத்தில், அதிகக் கேள்விகள் இன்றி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதபட்சத்தில் அவளால் நிம்மதியாக வாழ்ந்து முடிக்க முடியும். ஆனால், அவனைப் புரிந்துகொள்ள முயற்சி தொடங்கும் மறுகணமே அவள் தன் நிம்மதியை இழந்து விடுகிறாள். அதிக சிக்கலுக்கு உள்ளாகிறாள். அதிக சங்கடப்படுகிறாள்.

என்னதான் கணவன் - மனைவி ஈருடல் ஓருயிர் என்று வர்ணித்தாலும் அவர்கள் இருவேறு மனி தர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மான அந்நியர்கள். எனவே பு¡¢ந்து கொள்கிறேன் என்ற உரிமையில் இன்னொருவர் மனசின் சகல பிரதேசங்களுக்கும் பிரவேசிக்க நினைப்பது பல சமயங்களில் கடுமையான காயங்களையே ஏற் படுத்தும். இது கணவன், மனைவி இரு வருக்கும் பொருந்தும். ஒருவர், மற்ற வர் அனுமதிக்கிற எல்லை வரை பிரவேசிப்பதே பிரச்னையற்றது.

பழைய காலத்தில் பெண்கள் ஆணைப் பின்பற்ற, ஏற்றுக் கொள்ள, அக்கறை காட்டிய அளவு, அவனைப் புரிந்துகொள்ளும் எந்த முயற்சியிலும் இறங்கியது இல்லை. அநாவசியம் என்று நினைத்திருக்கலாம். அல்லது அவர்கள் வளர்ந்த சூழ்நிலையில் இந்த எண்ணமே தோன்றாமல்கூட இருந்திருக்கலாம். அல்லது தன் சிற்றெல்லையில் கணவன் புரிந்து கொள்ள முடியாத அளவு பெரியவர் என்ற மிகையான எண்ணம்கூட இருந்திருக்க லாம். மீண்டும் சொல்கிறேன். இது சரியா, தவறா என்று விவாதிக்க நான் விரும்ப வில்லை. எல்லாவற்றையும்விட நிம்மதி முக்கியம் என்று வாழ்வைப் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டும்தான், இந்த இரகசியம் புரியவரும்.

இராமாயணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரி, ஏறத்தாழ சீதா பிராட்டி மாதிரியே இருந்தார் என்று வால் மீகியும், கம்பரும் எழுதி −ருக்கிறார்கள். கிட்டத்தட்ட சீதை போலவே தன் மனைவி மண்டோதாரி இருக்கும்போது இராவணன் சீதையிடம் எதைக் கண்டு இப்படி மோகம் அடைகிறான்; உயிரையே விடுகிறான். −துதான் ஆண்களின் விபாரீதமான போக்கு. விளங்கிக் கொள்ள முடியாத மர்மம். இப்படி எந்தப் பெண்ணும் கணவனைப் போலவே இருக்கும் வேறொரு ஆண் மகனை அடைய உயிர் விட்டதாக வரலாறே இல்லையே!

ஒரு சின்ன கதை.

sukhisivamp.jpg

உலகின் புகழ்பெற்ற வைர வியாபாரிஒருவர். ரத்தினங்களைப் பற்றி சிரமப்பட்டு ஆய்வு செய்து ஏகப்பட்ட தகவல்கள் திரட்டி வைத்திருந்தார். இருந்தாலும் சில சமயங்களில் ரத்தினத்தின் தரத்தில் அவர் ஏமாந்து போனார். ரத்தினங்களின் ரகசியங் களை நன்கு அறிந்த ஒரு பெண் திபெத்தில் இருப்பதாகவும் அவளிடம் சென்று கற்றுக் கொண்டால் கோடி கோடியாகச் சம்பாதிக்க லாம் என்றும் அவருக்கு யோசனை சொன் னார்கள்.

அவளது சரியான முகவரி கிடைக்க வில்லை... என்றாலும் படாதபாடுபட்டு மாதக்கணக்கில் அலைந்து வெகு சிரமப் பட்டு திபெத்தை அடைந்து அந்தப் பெண் ணின் இருப்பிடத்தை அறிந்து கொண்டார். பல துன்பங்களைத் தாண்டி அவள் வீட்டைக் கண்டுபிடித்து ஒருவழியாக உள்ளே போனவருக்குப் பேரதிர்ச்சி.

அத்தனை இளமை.. அத்தனை அழகு... “என்ன வேண்டும்?” என்றாள் அந்தப் பெண். நாக்கு ஒட்டிக் கொண்டு பேசவே தடுமாறியவர், தாம் வந்த காரணத்தைச் சொன்னதும்... “என் கணவர் வெளியில் போய் இருக்கிறார். அவருக்குச் சமைக்க வேண்டும். உன்னோட பேச நேரமே இல்லையே...!” என்றவள் “போனால் போகி றது... உன்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறேன். அவசியமான ஒரு கேள்வி மட்டும் கேள்” என்றாள்.

வந்தவர் கண்களில் காமம் பொங்க, “உன் கணவர் திரும்பி வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?” என்ற ஒரே கேள்வி கேட்டு வைத்தார்.

இராமாயணக் காலத்தில் மட்டு மல்ல எல்லாக் காலத்திலுமே ஆண்களின் போக்கு விபரீத மாகவே இருக்கிறது. இருந்து தொலைக்கிறது.

மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை, புதிர்கள் நிறைந்தது. எல்லாப் புதிர்களையுமே விடு வித்து விட முடியும். விடு வித்துவிட வேண்டும் என்று போராடுகிறவர்கள் சங்கடப் படுவார்கள். குறிப்பாக மன அமைதி இழந்து துன்பப் படுவார்கள். சலிப்பும் கோப மும் உள்ளவர்களாகத் தங் களது நரகத்தைத் தாங்கள் போகும் எல்லா இடங்களுக் கும் எடுத்துச் செல்வார்கள். அவ்வளவுதான்.

இன்னும் ஒரு கதை. குழந்தைகள் விளையாட் டுப் பொருட்கள் விற்கும் கடைக்குப் போனார் ஓர் அப்பா. தமது மகனது ஐந்தாவது பிறந்த நாளுக்குப் பரிசாக என்ன வாங்கலாம் என்று கடைக் காரரி டம் கேட்டார். விளையாட்டு மூலம் ஏதேனும் கல்வி கற்றுத் தரக்கூடிய பொருள் கிடைத்தால் நல்லது என்றார். பலவித புதிர்கள் அடங்கிய விளையாட்டுச் சாதனத்தை எடுத்துக் கொடுத்தார் கடைக் காரர். அதில் இருந்த முதல் புதிரைப் பார்த்துவிட்டு புதிரை விடுவிக்க முயன்றார் அப்பா. அவர் எம்.ஏ., பி.எச்டி., பல்கலைக் கழக முதல் மாணவர் என்று தங்க மெடல் வாங்கிய அறிவாளி. அரைமணி நேரம் முயன்றும் முதல் புதிரையே அவரால் விடு விக்க முடியவில்லை. எரிச்சல் அடைந் தார். கடுங்கோபம் அவர் கண்ணை மறைத் தது. ஆத்திரத்துடன் அந்த விளையாட்டுப் பொருளைக் கடைக்காரர் மீது விட்டெறிந்தார்.

“இவ்வளவு படித்து வளர்ந்த என்னாலேயே இந்தப் புதிரை விடுவிக்க முடியாத போது என் ஐந்து வயது மகனால் எப்படி முடியும்? எங்கே நீ விடு வித்து விடு பார்ப்போம்” என்று சவால் விட்டார்.

கடைக்காரர் பொறுமை யாக, “ஐயா... நானல்ல... கடவுளே வந்தாலும் இந்தப் புதிரை விடுவிக்கவே முடியாது. எப்படிப் போட் டாலும் தப்பான விடை கள்தான் வரும்” என்றார். “அப்படியானால் இந்த விளையாட்டுப் பொருளைக் கொண்டு என் மகன் என்ன கற்றுக் கொள்ள முடியும்?” என்று சீறினார் தந்தை.

“மிகப் பெரிய உண்மையைக் கற்றுக் கொள்ள முடியும் ஐயா. இந்த உலகில் எல்லாப் புதிர்களுமே விடைகாணக் கூடியவை அல்ல. விடைகாண முடியாத புதிர்கள் நிறைந்த அதிசய மர்மம்தான் வாழ்க்கை என்கிற உயர்ந்த உண்மையை அவன் புரிந்து கொள்ள முடியும்” என்றார் கடைக் காரர்.

ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள முடியாத புதிர் என்பதைப் பழைய தலை முறைப் பெண்கள் புரி ந்து வைத்திருந்தார்கள். வரலாற்றில் இருந்து நான் ஒரு பட்டியல் தருகிறேன். பெண்ணைப் பற்றி, காதலைப் பற்றி, காம நுகர்ச்சி பற்றி என்ன தான் நினைத்திருக்கிறான் என்பதை முடிந் தால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

http://www.mangayarmalarmonthly.com/

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கணவன் - மனைவி ஈருடல் ஓருயிர் என்று வர்ணித்தாலும் அவர்கள் இருவேறு மனி தர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அந்தரங்க மான அந்நியர்கள். எனவே பு¡¢ந்து கொள்கிறேன் என்ற உரிமையில் இன்னொருவர் மனசின் சகல பிரதேசங்களுக்கும் பிரவேசிக்க நினைப்பது பல சமயங்களில் கடுமையான காயங்களையே ஏற் படுத்தும். இது கணவன், மனைவி இரு வருக்கும் பொருந்தும். ஒருவர், மற்ற வர் அனுமதிக்கிற எல்லை வரை பிரவேசிப்பதே பிரச்னையற்றது.

சிந்திக்க தூண்டிய அருமையான வரிகள் குமாரசாமியண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.