Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(இணைப்பு-03) கிழக்கு தேர்தல் நிலவரம் ஒரு பார்வை

Featured Replies

அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது.

தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆயுததாரிகள் சிலர் ஜேஎப.-3114, கேடி-3787, 32-3387 ஆகிய இலக்கமிடப்பட்ட வாகனங்களில் சென்று வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சித்த போது காவற்துறை அத்தியட்சகர் சமரசேகரவினால் கைது செய்யப்பட்டதாகத் தெரியவவருகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கண்காணிப்பு குழு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் ரிஸாட்பதியுதீன், மற்றும் கே.ஏ பாயிஸ் ஆகியோர் மூதூரில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக முஸ்லீம்காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் ரிஸாட்பதியுதீன், மற்றும் கே.ஏ பாயிஸ் ஆகியோர் மூதூரில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக முஸ்லீம்காங்கிரஸ் முறையிட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையாளர்டம் நேரடியாக முறையிட்ட கட்சியின் தலைவர் றவூவ்ஹக்கீம் குறித்த அமைச்சர்கள் தர்காநகர், பாலநகர், மற்றும் நரித்தீவு பகுதிகளில் வயோதிப பெண் உட்பட சிலரைத் தாக்கியதாகவும் வாக்காளர்களை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூதுர் பகுதிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சிரேஸ்ட்ட காவற்துறை அதிபரை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளதாக ஐக்கியதேசியக் கட்சி முறையிட்டுள்ளது.

இவர் இன்று வரை தனது கையடக்கத் தொலைபேசியை இயக்க மறுப்பதாக தெரிவித்துள்ள ஐ.தே.க பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் வன்முறைகள், அதில் அமைச்சர்களும் அவர்களது அடியாட்களும் சம்பந்தப்படுகின்றமை என்பவற்றை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் இல்லை என தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கம் திட்டமிட்டே இந்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஐக்கியதேசியக் கட்சி முறையிட்டுள்ளது.

(2nd lead)கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது ‍‍பிள்ளையான் அதிகாரிகளை மிரட்டல்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாக சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத முறையில் சுமுகமானமுறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாதென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேர்தல் அதிகாரிகளை மிரட்டியிருப்பதாக தேர்தல் வன்முறைச் சம்பவங்களைக் கண்காணிக்கும் நிலையத்திடம் தேர்தல் அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

களுதாவெல பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் அட்டைகளைப் பலவந்தமாகப் பறித்துச்சென்றிருப்பதாக புளொட் அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.

கிழக்குமாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் வாழைச்சேனைப் பகுதிக்குச் சென்று விபுலாந்தா வித்தியாலயத்தில்

தனக்கு வாக்குச்சீட்டுக்களைப் போடுமாறு போடுமாறு வேண்டுகை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெறும் தேர்தல்களின் போது வாழச்சேனை பகுதியில் 30 லொறிகளில் பிள்ளையான் குழுவினர் மதுபானப் போத்தல்களை இறக்கி தமக்கு வாக்களிக்குமாறு கூறி மதுப்போத்தல்களை மக்களுக்கு இன்று வழங்கிவருகின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு நகரப்பகுதியில் இன்று பிள்ளையான்குழுவினர் முஸ்லீம் இளைஞர்கள் இருவரை தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த க.தஸ்ரின் வயது 27 நவாஸ் வயது 32 ஆகிய இருவருமே பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காவல்பணிமனையில் இன்று முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தெஹியத்தகண்டிய பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவரைக் கைதுசெய்திருப்பதுடன் அவருடைய வாகனத்தை மீட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளைப் பறித்தமை தொடர்பாகவே இவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

http://isoorya.blogspot.com/

space.gif

  • தொடங்கியவர்

கிழக்கு தேர்தல் வெறிச்சோடிய வாக்குச்சாவடிகள்

படங்கள் இணப்பு.......................

http://isoorya.blogspot.com/2008/05/east-poll-fotoes.html

  • தொடங்கியவர்

அமைச்சர் ரிசாட் பதியூதினின் அடியாட்கள் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிண்ணியா தோப்பூர் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் ஆதரவாளர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

space.gif

  • தொடங்கியவர்

வன்முறைகளுடன் கூடிய கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவுற்றிருக்கின்ற நிலையில், அங்கு வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்த முடிவு ஒன்று தொடர்பாகக் கண்ணோட்டம் தேவையா?

இத் தேர்தலில் பிள்ளையான் வெல்லுவான் அதில் என்ன சந்தேகம்.. ஆனால் இதை சனநாயக தேர்தல் என்று சொல்லவ்துதான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையாக நடக்கும் தேர்த்தலுக்கு தான் ஒரு ஆய்வு தேவை. சுத்துமாத்து தேர்த்தலுக்கு ஆய்வு ஒரு கேடா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.