Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் உலகுக்கு உணவளிக்கிறோம்!

Featured Replies

சப் டைட்டில்கள் போடப்படும் உலகத் திரைப்படம் என்றாலே நமக்கு அலர்ஜி. ஆயினும் எப்போதாவது பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி ஹவுஸ்புல் ஆகும்போது மழைக்கு பள்ளிக்கூடத்தில் ஒதுங்குவதைப் போல உலகத் திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகள் பக்கமாக ஒதுங்குவதுண்டு. கடந்த வாரம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த படவிழா பக்கம் இதுபோல ஒதுங்க வேண்டியிருந்தது.

அன்று திரையிடப்பட்டிருந்த படம் "WE FEED THE WORLD". உலகமயமாக்கல், பொருளாதார சீர்த்திருத்தங்கள், நவீன விவசாயமுறைகள் ஆகியவை இயற்கையையும், இயற்கையோடு இயைந்து வாழ்தவர்களையும் அச்சுறுத்துகிறது என்ற தனது வாதத்தை அழுத்தமாக பதிவுசெய்த ஆவணப்படம் இது. 'உலகம் சுற்றும் வாலிபன்' ஸ்டைலில் நாம் உண்ணும் உணவு எங்கெல்லாம் தயாராகிறது என்று தேடிப்புறப்பட்டு உலகெல்லாம் பயணிக்கும் படம் இது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோமானியா, ஸ்விட்சர்லாந்து, பிரேஸில், ஆஸ்திரியா நாடுகளில் இப்படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.

தனது தந்தை காலத்தில் இருந்ததைப் போன்ற நிலை இன்று இல்லை என்று ஐரோப்பிய விவசாயி ஒருவர் புலம்பிக் கொண்டே சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். வியன்னாவில் விற்கப்படாமல் குப்பையில் கொட்டப்படும் ரொட்டிகளால் வீணாகும் கோதுமையை பற்றி கவலைப்படும் படம், அதே நேரத்தில் பசிக்கொடுமையால் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பலியாகும் முரண்பாடையும் சுட்டிக் காட்டுகிறது. இந்தியா (நிஜமாத்தான்!) போன்ற நாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதி பெரிய அளவில் நடைபெறுவதால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஒரு வணிகர் சொல்லுகிறார்.

உலகின் மிகப்பெரிய தானிய விதை உற்பத்தி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் எதிர்கால சமுதாயத்துக்கு உண்மையான தக்காளி, ஆப்பிள் போன்றவற்றின் சுவையோ, வடிவமோ நினைவுக்கு இருக்கப் போவதில்லை. ரசாயன முறையில் உருவாக்கப்படும் விதைகளில் விளைச்சலாகும் காய்கறிகள் அவற்றின் இயற்கையான குணத்தில் இருக்காது என்கிறார்.

அரசுகள் தங்களை தந்திரமாக ஏமாற்றுவதாக ஐரோப்பிய விவசாயிகள் குமுறுகிறார்கள். முதல் வருடம் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தானிய விதையை வாங்க அரசு மானியம் அளிக்கிறதாம். பெரிய நிறுவனங்களிடமிருந்து வாங்கும் விதைகளை வைத்து விவசாயம் செய்தால், அடுத்தாண்டும் அதே நிறுவனத்திடமிருந்து தான் விதைகளை வாங்க வேண்டும். (விதை நெல் போன்று இந்நிறுவனங்கள் விற்கும் விதைகளை சேமித்து வைக்க முடியாதாம்) அரசாங்கங்கள் உஷாராக அடுத்தாண்டிலிருந்து மானியத்தை நிறுத்திவிடுகிறார்களாம். அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேறுவழியில்லாமல் விவசாயிகள் அடிமைகளாக வேண்டியிருக்கிறது. இவ்வாறாக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிவருடி, விவசாயிகள் நலனை புறந்தள்ளுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு பதில் தரும் விதமாக“நிறுவனம் என்பது வெறும் நிறுவனம். அதற்கு மனசாட்சியெல்லாம் கிடையாது” என்கிறார் ஒரு கார்ப்பரேட் நிறுவன அதிகாரி.

மீன்பிடித் தொழில் செய்யும் சிறிய மீனவர்கள் EU என்றழைக்கப்படும் ஒன்றிணைந்த ஐரோப்பிய பொருளாதாரத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். பிரான்ஸில் 40 ஆண்டுகளாக மீன் பிடிக்கும் மீனவர் ஒருவர் சொல்லுகிறார். “நான் சிறுவயதிலிருந்தே கடலில் பயணித்து என் அறிவை பெருக்கி வைத்திருக்கிறேன். இப்போதெல்லாம் மீன் பிடிக்க செல்லும்போது ஒரு லெட்ஜரில் எவ்வளவு தூரத்தில், எத்தனை மீட்டர் ஆழத்தில் மீன் பிடிக்கிறேன். என்ன மீனெல்லாம் பிடித்தேன். எவ்வளவு மீன் பிடித்தேன் என்றெல்லாம் எழுத வேண்டுமாம். நான் கடினப்பட்டு சேர்த்த அறிவை எவனோ ஒருவனுக்கு இலவசமாக நான் ஏன் சொல்லித் தரவேண்டும்?”

அதுவுமில்லாம் சிறு மீன்பிடி படகு வைத்திருப்பவர்கள் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்குள்ளாகவே தாங்கள் பிடிக்கும் மீன்களை விற்பனைக்கு வைத்து விடுகிறார்கள். மாறாக இத்தொழிலும் கால்பதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை பதப்படுத்தி ஓராண்டு கழித்தும் கூட விற்கிறார்கள். இதனால் நுகர்வோருக்கு மீனின் உண்மையான சுவையே மறந்துப் போகும் என்கிறார்கள் ஐரோப்பிய மீனவர்கள்.

பிரேசில் நாட்டில் வனம் தரும் காடுகளையும், விவசாய நிலங்களையும் அழித்து பெரிய பெரிய நிறுவனங்கள் ‘சோயா' பயிரிடுகின்றனவாம். இதனால் அந்நாட்டில் உணவுப் பொருளுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஏழை பிரேசில் குடும்பத்தில் நடக்கக்கூடிய அன்றாட நிகழ்வாக அந்நாட்டை சேர்ந்த ஒருவர் சொல்லும்போது அடிவயிறெல்லாம் கலங்குகிறது. குழந்தைகள் பசிக்காக அழுமாம். அந்த குழந்தையை சமாதானப்படுத்த வேண்டி ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி சில கற்களை போட்டு அடுப்பில் வைத்து விடுவாளாம் தாய். பசி பசியென்று அழும் குழந்தைக்கு சமையல் நடக்கிறது பார். சீக்கிரம் சாப்பிட்டு விடலாம் என்று சமாதானப்படுத்துவாளாம். தண்ணீரில் போடப்பட்ட வெறும் கல் எங்கிருந்து உணவாகப் போகிறது. பசிக்களைப்பில் பசி பசியென்று கதறும் குழந்தை ஒன்றும் சாப்பிடாமல் அப்படியே உறங்கிவிடுமாம். கேட்கும்போதே கண்கள் கலங்குகிறதல்லவா?

பிரேஸில் போன்ற நாடுகளில் உணவுக்கான விளைநிலங்களை அழித்து கால்நடைத் தீவனமான சோயா பயிரிடப்படுகிறது அல்லவா? அந்த சோயா ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கிருக்கும் உணவுக்கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணவுக்கோழி தயார் செய்யும் தொழிற்சாலை எப்படி இயங்குகிறது என்று சுமார் பத்து நிமிடங்களுக்கு காட்டுகிறார்கள். அந்த காட்சியை காணும் எவருமே வாழ்க்கையில் 'சிக்கன் 65' சாப்பிட ஒரு கணம் யோசிப்பார்கள்.

கடைசியாக உலகின் நெ.1 உணவு நிறுவனமான நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான பீட்டர் பிராபெக்கின் பேட்டியோடு நிறைவடைகிறது திரைப்படம். “தண்ணீர் என்பது மனிதனின் உரிமை என்று சில அறிவுகெட்டவர்கள் சொல்கிறார்கள். அதை விற்கக்கூடாதாம். உலகில் இருக்கும் ஒவ்வொன்றும் மனிதனின் உரிமைதான். எல்லாமே மனிதனின் உரிமை என்று எடுத்துக் கொண்டால் நாங்களெல்லாம் எப்படி வர்த்தகம் செய்வது? எங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் கதியென்ன?” என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்கிறார். கடைசியாக தண்ணீர் என்பதும் விற்கக்கூடிய உணவுப்பொருள் வகையில் சேர்த்து தொலைத்துவிட்டார்கள். அது சரி!

இப்படம் குறித்த மற்ற தகவல்களை இங்கே சுட்டி பார்த்துக் கொள்ளலாம்! ட்ரைலரும் உண்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.