Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்குலகிற்கு உவப்பில்லாத கொள்கை முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்‌ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் மேற்குலகிற்கு உவப்பில்லாத கொள்கை முடிவுகள்

[15 - May - 2008]

இராவணன்

1970 களில் இலங்கை மூடிய பொருளாதாரத்தையும் ரஷ்யசார்பு வெளிநாட்டு கொள்கையையும் கொண்டிருந்தது. திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவினுடைய வீழ்ச்சியின் பின்னர் 1977 இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவற்றைத் தலைகீழாக மாற்றினார்.

திறந்த பொருளாதாரக் கொள்கையும் தெளிவான மேற்குலகுசார் வெளிநாட்டுக்கொள்கையும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டது. கடந்த முப்பது வருடங்களாக இதேநிலைமையே நீடிக்கிறது.

திருமதி பண்டாரநாயக்காவினுடைய சுதந்திரக்கட்சி கடந்த 1994 இல் இருந்து ஆட்சியிலிருக்கின்றபோதும் ஜே.ஆர்.ஜெயவர்தனவினுடைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளே பெரியளவு மாற்றங்கள் ஏதுமின்றி இன்னும் சொல்லப்போனால் மேலும் கூர்மையாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

ஆனால் கடந்த ஓராண்டாக இந்த நிலைப்பாட்டைத் மகிந்த ராஜபக்‌ஷ மீளவும் தலைகீழாக மாற்றுகிறார். பொருளாதாரத்தைத் திறந்த பொருளாதாரக் கொள்கையிலிருந்து பின்வலித்துக் கொள்ளும் ஆத்மார்த்தமான அல்லது கொள்கை ரீதியான தேவையோ முடிவோ அவரிடம் இல்லாதபோதும் அதன் அழுத்தங்கள், நடைமுறைகளோடு ஒத்தோடுவதற்கு அவருடைய நிர்வாகத்தின் யதார்த்த நிலைமை இடங்கொடுக்காத போக்கைப் பெரு வெட்டாக அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாகக் காலாவதியாகிப்போன யதார்த்தத்திற்கு ஒட்டிவராத பொருளாதார நடைமுறைகள் குறித்து அவரும் அவரது அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆலோசகர்களும் பேசுகிறார்கள்.

இவற்றைச் சுயாதீன ஆய்வாளர்கள் கடும் வார்த்தைகளில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

பொருளாதார ரீதியான தோல்வியின் காரணமாகவும் அரசியல் ரீதியான முன்னோக்கற்ற வறட்டுத்தனமான போக்கின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்கையையே ஒரு விகார வடிவத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு ஏற்பட்டுவிட்டது.

இப்போது அவரது அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை குறித்து வெளிநாட்டமைச்சின் செயலாளர் இராஜதந்திர முதிர்ச்சியற்ற, மிகவும் நேரடியான, பச்சையான வார்த்தைகளில் ஊடகங்களுக்குச் சகட்டுமேனிக்கு பேட்டிகளை வழங்குகிறார்.

அதில் மேற்குலகத்தின் சட்டாம்பிள்ளைத்தனத்தைத் தாம் தொடர்ந்து சகித்துக் கொள்ளமாட்டோம் என்றும், அதன்காரணமாகவே அடுத்தநாடுகளின் உள்விவகாரங்களிற் தலையிடாத, நிபந்தனைகள் விதிக்காத ஆசிய நாடுகளுடனும் புதிய நட்புநாடுகளுடனும் உறவுகளைப் பலப்படுத்தப் போவதாகவும் இது தங்களுடைய வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தெளிவான மாற்றம் என்றும் அவர் முழங்குகிறார்.

உண்மையில் மகிந்த ராஜபக்‌ஷ அவர்கள் நகருகின்ற விதத்தைப் பார்க்கின்றபோது அவருடைய வெளிநாட்டுக் கொள்கை என்பது தீர்க்கமான மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது என்பதைக் கணிப்பது கடினமல்ல. ஆனால் இதன் விளைவுகள் தொடர்பாக சாதகமான தாக்கங்களைக் காண்பது கடினமாக இருக்கிறது.

வெளிநாட்டுக்கொள்கை என்பது ஒரு நாட்டின் வர்த்தக நலனை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாகவே கடந்த நூற்றாண்டின் பின்னரைப்பகுதி தொடக்கம் உலகநாடுகளால் பாவிக்கப்பட்டுவருகிறது.

ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார், "வெளிவிவகார அமைச்சரே உண்மையில் வர்த்தக அமைச்சராவார். வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்பவர்,அவரால் நாடுகளுக்கான தூதர்களாக நியமிக்கப்படுவோர் ஆகியோரது முதன்மைப்பணி குறித்த நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதும், அதற்கான தடைகளை நீக்குவதுமேயாகும். இதற்காக அவர்கள் சகலவிதமான உத்திகளையும் பயன்படுத்துகிறார்கள்.

நாடுகளின் உச்சிமாநாடுகளின்போதும் அமைச்சர் மட்டத்திலான சந்திப்புக்களின் போதும் எட்டப்படும் தலையாய ஒப்பந்தங்கள் இரு தரப்புப் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கானவையே.

இந்த அடிப்படையில் இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கொள்கையைப் பகுப்பாய்வு செய்தால் சூனியத்தை நோக்கி நாடு செல்வதை நன்கு அவதானிக்க முடியும். இலங்கையின் இன்றைய பொருளாதாரக் கட்டமைப்பு, இறக்கி ஏற்றும் பொருளாதாரம் என அடையாளங் காணப்படுகிறது.

விவசாயப் பொருளாதாரம் அல்லது கலப்புப் பொருளாதாரம் என்று சுட்டப்பட்ட காலம் காலாவதியாகி இறக்குமதி செய்யப்படுகின்ற ெபாருட்கள் அடுத்தகட்ட படிமுறைக்கான செயல்முறையோடு மீளவும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகிறது. இதனுடைய பிரதான தொழிற்றுறையாக தைத்த ஆடைகளும் கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்கா விமான நிலையம் ஆகியவற்றின் ஊடாக மேற்கொள்ளப்படும் எரிபொருள் விற்பனையும் அமைகின்றன.

இவற்றுக்குப் பிரதான சந்தையாக அமைவது மேற்குலகமே.

ஆனால் மேற்குலகத்தோடு இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற மோதற்போக்கான வெளிநாட்டுக் கொள்கையினால் இவ்விரண்டு தொழிற்துறைகளுக்கும் ஆப்பு வருகிறது என்று தொழிலதிபர்கள் அலறுகிறார்கள். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரஸல்ஸ் தலைமையகத்தில் தாங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல் குறித்து விளக்கிக் கூறியிருந்தபோது பின்வருமாறு குறிப்பிட்டார்.

"ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நீக்குமாக இருந்தால் தென்னிலங்கையின் வறிய கிராமங்களைச் சேர்ந்த முப்பது இலட்சம் தொழிலாளர்கள் தொழிலை இழந்து வீதிக்குவர நேரிடும்.

இலங்கைக்கு அதிகம் வருவாயைத் தேடித்தருகின்ற தொழிற்றுறையாக கடந்த ஒரு தசாப்தமாகக் காணப்படுவது தைத்த ஆடைகளின் ஏற்றுமதியேயாகும்.

தேயிலை இந்த இடத்திலிருந்து இறக்கப்பட்டு ஆடைக்கைத்தொழில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக இடம்பிடித்துவிட்டது. இந்தத் தொழிற்துறைக்கு முதலிட்டவர்கள் பெரும்பாலும் மேற்குலகத்தவரும் அவர்களது செல்வாக்குக்குட்பட்டவர்களு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.