Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளுடனான போரில் இலங்கை தோற்றால் பயங்கரவாதத்திடம் உலகம் தோற்றதாகும் - மஹிந்தர்

Featured Replies

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அரசு தோற்குமானால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்;ஜனநாயகம் பலியானதாகிவிடும். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய விளக்கம் ஒன்றை அளித்திருக்கின்றார். லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

உலகில் ஜனநாயகமும் மனித வாழ்வியலுக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனியான போராட்டத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நெருக்கடிக்கு பேச்சு மூலமான தீர்வைக் காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை அங்கு வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை மேற்கொள்வதற்குத் தாம் மூன்று முறை முயற்சிகளை மேற்கொண்டனர் எனவும் எனினும் அவர்கள் அதற்குச் சாதகமான விதத்தில் செயற்படாமல் போலியான சாக்குப் போக்குகளை முன்வைத்துச் பேச்சுகளிலிருந்து விலகிக்கொண்டனர் எனவும் குற்றம் சாட்டினார்.

அரசியல் தீர்வில் விடுதலைப் புலிகள் நேர்மையான விருப்பம் கொண்டுள்ளனர் என்பதும், ஆயுதங்களைக் கைவிட அவர்கள் தயார் என்பதும் உறுதியான பின்னரே அவர்களுடன் இனிப் பேச்சு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பாதுகாப்பு என்பது இலங்கைக்கும், உலக நாடுகளுக்கும் கடும் சவாலாக அமைந்துள்ளது.

இலங்கையில் ஊடக சுதந்திரம் காணப்படுகின்றது. ஊடகங்கள் என்னைத் தாக்காத ஒருநாள்கூடக் கிடையாது.

இலங்கையில் பட்டினி நிலை என்பது கிடையாது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கும் தொடர்ந்து உணவு, மருந்து போன்றவற்றை நாம் அனுப்பி வைத்துள்ளோம். அங்குள்ள சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் அரசே சம்பளம் வழங்குகின்றது.

சர்வதேச அளவில் சக மனிதர்கள், அவர்களது தேவைகள் ஆகியன குறித்து இலங்கை அக்கறை கொள்ளாத நாடு எனக் காட்டுவதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

எவ்.பி.ஐயினால் உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத இயக்கமென வர்ணிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சவாலை துரதிஷ்டவசமாக நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

பெண்களையும், குழந்தைகளையும் கூட தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்துவது அவர்களுக்கே உரிய பாணியாகக் காணப்படுகின்றது.

தற்கொலைக் குண்டுதாரி அணியும் அங்கியை உருவாக்கியது இந்த அமைப்பே. இதில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளனர். இது தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது.

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சனநெரிசல் மிக்க பகுதிகளில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுகளாலும், மூளைச்சலவை செய்யப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தப் பயங்கரவாதக் குழுவிற்கு உத்வேகத்தை அளிக்கின்ற கொடூரத்தை உணர்வதற்கு எரியுண்ட தசைகளையும், துண்டிக்கப்பட்ட உடற்பாகங்களையும் நாம் பார்க்கவேண்டும்.

இவர்கள் ராஜீவ் காந்தியைக் கொலை செய்தார்கள், ரணசிங்க பிரேமதாஸவைக் கொலை செய்தார்கள், சமீபத்தில் தமிழ் பேசும் கத்தோலிக்கரான எனது அமைச்சர் ஒருவரைக் கொலை செய்தனர்.

எம்மால் முடிந்தவரை இந்தக் குழுவை எதிர்கொள்வதும், இலங்கை மக்களையும் அவர்களது ஜனநாயக வாழ்க்கை முறைமையையும் பாதுகாக்க அரசின் சகல வளங்களையும் பயன்படுத்துவதும் மிக முக்கியமானவையாகவுள்ளன.

நான் இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட நாடுகள் முன்னர் எடுத்த நடவடிக்கைகளில் இருந்தும் தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்தும் வேறுபட்டவையல்ல.

உலகம் இதுவரை சந்தித்துள்ள மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகளே என்பதையும் அதனைத் தோற்கடிப்பதற்கு சர்வதேச ஆதரவு தேவை என்பதையும் நாம் தெரிவிக்க வேண்டும்.

உலகில் ஜனநாயகமும் மனித வாழ்க்கைக்கான கௌரவமும் தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இந்தப் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகப் தனியாகப் போராடுகின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் தோற்றால் பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் உலகம் தோற்றதாகிவிடும்; ஜனநாயகம் பலியாகினதாகிவிடும். இதுவே வெளிப்படையான உண்மை.

எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் துரதிஷ்டவசமாகத் தடைகளை எதிர்கொண்டுள்ளன. இதில் முக்கியமானது பயங்கரவாத அச்சுறுத்தலாகும். இதன் காரணமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடு என்ற வகையில் நாம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.

உலகம் காட்டுமிராண்டித்தனமான தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஒருமித்த குரலில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

தமது அரசியல் உணர்வுகளை இவ்வாறான விதத்தில் வெளிப்படுத்துவது நாகரிக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

அப்பாவி மக்களையும் அவர்களது சாதாரண வாழ்க்கை முறையையும் பாதுகாக்கும் நோக்குடன் செயற்படும் எனது நாட்டின் பாதுகாப்புப் படையினர் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

எமது படையினர் அப்பாவிகளைத் துன்புறுத்துகின்ற அல்லது சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இதனைத் தவிர்ப்பதற்காக அவர்கள் தமது உயிரையே பணயம் வைக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் உருவாகியுள்ள அச்ச சூழ்நிலை காரணமாக சிலவேளைகளில் கணிப்பீடுகள் பிழைக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கென சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வுகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும். எங்கு தாக்குவது என முதலில் தீர்மானிப்பது பயங்கரவாதிகளே. இடத்தையும், சந்தர்ப்பத்தையும் தீர்மானிப்பதும் அவர்களே.

ஜனநாயக அரசைக் கட்டுப்படுத்தும் விழுமியங்களும், நடைமுறைகளும் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இப்படிக் கூறினார் ஜனாதிபதி

நன்றி சுடரொளி இணையம்

Edited by thamizhanpan

இலங்கையில் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டியை உலகம் இப்போது நம்ப மறுக்கின்றது. இருந்தாலும் அப்பன் புதுசா இப்போது புலம்புகின்றார். வெல்ல முடியவில்லையா? அல்லது தோற்றுவிட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இல்லை, இல்லை. அவர் சொல்ல வந்தது என்னவென்றால், புலிகளிடம் தோற்றால் பயங்கரவாதம் தோற்றதாகிவிடும் என்பதைத்தான். வாய் தடுமாறி பயங்கரவாதத்திடம் தோற்றதாகி விடும் என்று சொல்லியிருக்கிறார்!!!!!!!

அதுசரி, சிறிது சிறிதா பயம் பற்றிக்கொள்ளுது போல. தோற்றுவிடுவோம் என்று நினைக்கிற அளவுக்கு வந்திட்டார் மகிந்த. எல்லாம் முகமாலையிலும், மன்னாரிலும் வேண்டுற அடியாலதான் எண்டு நினைக்கிறன்.

நகைச்சுவையை நகைச்சுவை பகுதியில மட்டும் இடவும்

  • கருத்துக்கள உறவுகள்

அரசு புலிகளுடன் தோற்றால் அரச பயங்கரவாதம் உலகில் தோற்கும் என்பதை மகிந்த வாய் தடுமாறி கூறிவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.