Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்குக் கடிதம், ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்புக!- பெரியார் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குக் கடிதம்

ஐ.நா. கண்காணிப்புக் குழுவை அனுப்புக!

எஸ்.எம்.ஜி.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்ற குரல் மீண்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலு மிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இலங்கையின் சிங்கள ஆதிக்க சக்திகள் எந்தக் காலத்திலேயுமே இனப்பிரச்சனைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு விரும்பியதில்லை.

தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற ஜனநாயக வழியில் தமிழ் பேசும் மக்கள் உரிமையுடன் வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பெரும்பான்மை ஜனநாயகத்தினரால் ஒடுக்கப்பட்டன. தமிழ் அரசுக் கட்சிக்கு முன்னர் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன் இலங்கையில் நாடாளுமன்ற நாயகம் நாட்டில் செயல்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பொன் அருணாசலத்துடன் சிங்களத் தலைவர் பிரீஸ் தொகுதி உடன்பாடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திட்டானது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை பிரீஸ் கைவிட்டார். இதன்பின் நாடு விடுதலை அடைந்து பெற்றதாகச் சொல்லப்படும் விடுதலை இன்று வரை தமிழ் பேசும் மக்களுக்குக் கிடைக்கவில்லை.

தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வெள்ளைக்காரன் ஆட்சியில் அரசியலமைப்பு ரீதியாக சிறிதளவு பாதுகாப்பு வழங்கிய 29வது ஷரத்து புதிய குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அந்தப் பாதுகாப்புப் பிரிவும் நீக்கப்பட்டது. கல்வியிலும் பிறதுறைகளிலும் சிறந்து புகழ்பெற்று விளங்கிய தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைகளாக்க ஒடுக்குமுறைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சிங்கள ஆதிக்க சக்திகளின் இந்த அடக்குமுறையை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்து நிவாரணம் தேடுவதற்கு தமிழ் மக்கள் எடுத்த நடவடிக்கைகளை பெரும் பான்மை ஜனநாயகம் முறியடித்து இனவாதத்தை வளர்த்தது. இந்நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகம் மூலம் தமிழ் மக்களின் நிலையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லலாமே தவிர நிவாரணம் பெறமுடியாதென்பதை தமிழர்கள் உணர்ந்தனர். நாடாளுமன்ற ஜனநாயகம் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பில் பெரும்பான்மை ஜனநாயகமாகவே இருக்கும் என்பதால், தமது உரிமைகளைப் பெறுவதற்காக மகாத்மா காந்தியின் வழியில் சாத்வீகப் போராட்டங்களை தந்தை செல்வா என்றும் ஈழத்துக் காந்தி என்றும் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தங்களைத் தாங்களே வருத்தி எதிரியின் மனமாற்றத்துக்கு சத்தியாக்கிரகப் போராட்டங்களைத் தமிழ் மக்கள் நடத்தினர். இருபத்தைந்து ஆண்டுகளாக தந்தை செல்வா தலைமையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வழிகாட்டத் தமிழ் மக்கள் தங்களை வருத்தி பல்வேறு வடிவத்தில் சாத்வீகப் போராட்டங்களை நடத்தினர். தமிழ் மக்கள் திரும்பித் தாக்க மாட்டார்கள் என்ற துணிவுடன் தமிழ் இளைஞர்களைப் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சிறைப் பிடித்துச் சித்திரவதை செய்தார்கள். சித்திரவதை செய்துகொண்டு தமிழ் இளைஞர்கள் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியைத் தூண்டுவதாக பிரசாரம் செய்தார்கள். சமஷ்டி ஆட்சி அமைப்புக்கோரிய தமிழ் அரசுக் கட்சியினரையும் நாட்டைப் பிரிக்க எத்தனிக்கும் பிரிவினைவாதிகள் என்றார்கள். 1956ஆம் ஆண்டிலிருந்து காலத்துக்குக் காலம் சிங்களக் காடையர்களைத் தூண்டிவிட்டு தமிழீழத்துக்கு வெளியே வாழுந் தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலவரத்தைத் தூண்டி தமிழர்களை இனப்படுகொலை செய்ததுடன் தமிழர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தும் அழித்தும் தமது ஆதிக்க வெறியை நிலைநாட்டினார்கள். இதே சமயம் தமிழர் பூமியை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்தி சிங்கள மயமாக்குவதில் ஈடுபட்டார்கள். கொசோவா, கிழக்கு, தைமூர் போன்று தமிழீழம் உருவாகாமல் தடுப்பதற்காக 1948ஆம் ஆண்டிலிருந்து சிங்களத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். தமிழர்களின் வேலை வாய்ப்புக்கள், விவசாயம், தொழில் எனச் சகலவற்றிலும் தமிழர்கள் ஒதுக்கப்பட்டு அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயக முறையிலும் சாத்வீகப் போராட்டங்களிலும் ஈடுபட்டபோது பிரிவினைவாதிகள் என்று பழிசுமத்தி இனப்படுகொலையைத் தூண்டிவிட்டு இன்றுவரை இன அழிப்பிலேயே சிங்கள ஏகாதிபத்தியம் செயல்பட்டு வருகிறது. பொறுமை இழந்த தமிழ் இளைஞர்கள் இனியும் சாத்வீக போராட்டங்களில் நம்பிக்கை வைத்தால் தமிழ் இனமே அழிந்து விடும் எனக் கருதி ஆயுதப் போராட்டத்தில் இறங்கினர். இதனால் இனப்படுகொலை தடுக்கப்பட்டது.

ஆனாலும் நாடாளுமன்ற ஜனநாயகமும் சாத்வீகப் போராட்டமும் தமிழன் அழிப்புக்கு உதவியபோது தட்டிக் கேட்காத அயல்நாடுகளும் உலக நாடுகளும் தமிழ் இளைஞர்கள் தம்மையும் தமது மண்ணையும் பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து உயிரைப் பலி கொடுத்து போராடி வருவதை பயங்கரவாதிகள் என்று சிங்கள ஆதிக்க சக்திகள் கூச்சலிடுவதை அந்த நாடுகள் ஏற்று அரச பயங்கரவாதத்துக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகின்றன.

இப்பொழுது மீண்டும் பேச்சுவார்த்தைகள் என்று சிங்கள ஆதிக்க சக்திகள் பேசுகின்றன. அதுவும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வரவேண்டுமாம். புலிகளைப் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்காகத்தான் தாக்குதல் நடத்திப் போர் புரிகிறோம் என்று சிங்கள அரசியல் தலைவர்களும் படைத்தளபதிகளும் சொன்னார்கள்.

போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பைக்குள் போட்டுவிட்டு முப்படைகளும் தமிழர் தாயகப் பகுதியில் தாக்குதல் நடத்துகின்றன. சொந்தமண்ணிலேயே தமிழ் மக்கள் நடமாடமுடியவில்லை. தமிழ் இளைஞர்கள் கடத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். முன்பும் பேச்சு வார்த்தைகள் நடந்து ஒப்பந்தங்களும் செய்யப்பட்டன. இவற்றை அவர்களே கிழித்தெ றிந்தார்கள். புலிகள் கொலை செய்கிறார்கள். ஆயுதங்கள் வாங்கி கடத்துகிறார்கள் என்று அவர்கள் மீது பழியைப் போட்டு அரசுக்கு அடிவருடி தமிழ் இன ஒழிப்புக்குத் துணைபோகும் தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அன்று தொடக்கம் இன்றுவரை தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதானி ருக்கிறார்கள். ஐ.நா. அமைப்புகள் சொன்னாலும் மனித உரிமை அமைப்புகள் சொன்னாலும் ஆட்சி பீடத்திலுள்ள ஆதிக்க சக்திகளும் இனவெறிக் கும்பல்களும் கேட்க மறுக்கிறார்கள். இதற்கு அடிவருடித் தமிழர்ளின் அணுசரணையும் உண்டு.

இனி பேச்சுவார்த்தை என்று குரல் கொடுக்கும் அயல்நாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் தமிழீழத் தாயகத்திலிருந்து cலங்காப் படைகளை அரசு திருப்பியழைக்க வேண்டுமென்றும் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பைத் தூக்கி வீசிவிட்டு இணைப்பாட்சி என்ற சமஷ்டி ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தை விடுதலை செய்து சுதந்திரமாக வாழவும் வழி செய்ய வேண்டும். கொசோவா வழி காட்டியிருக்கிறது. தயங்காமல் ஐ.நா. சபை மூலம் இதற்கு வழிகாண வேண்டும் அதற்கு முன் இலங்கைக்கு ஐ.நா. சபை. கண்காணிப்பு குழுவொன்றை அமைப்பதற்கு அயல்நாடுகளும் உலக நாடுகளும் வற்புறுத்த வேண்டும்.

இந்திய அரசை மாற்ற இராசபக்சே நாடகம்

இந்திய அரசையும் மக்களையும் தன் பக்கம் ஈர்த்து தமிழர்களுக்கு எதிராக தான் நடத்தி வரும் இனவெறிப் படுகொலைகளை மூடி மறைப்பதற்கு சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.

இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டும் இல்லையேல் அய்.நா. பேரமைப்பில் புகார் செய்வேன் என எச்சரித்த அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பிரேமதாசா இந்திய வெறுப்பைக் கக்கினார். அதன் விளைவாக இந்திய அமைதிப்படை அவமானத்துடன் வெளியேற நேர்ந்தது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென ராஜபக்சே அரசு இந்திய அமைதிப்படைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இறந்த இந்திய வீரர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பி வருகிறது. இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் கட்டப்பட்டு வரும் இந்த நினைவுச் சின்னத்தை சூலை மாதம் சார்க் மாநாட்டின் போது இந்தியப் பிரதமரை வைத்தே திறந்து வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழீழப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களையெல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிவரும் சிங்கள அரசுக்கு திடீரென இராமாயணத்தின் மீது ஈடுபாடு பிறந்துள்ளது. இலங்கையின் மத்திய மேற்கு மாநிலங்களில் இராமாயணம் தொடர்பான இடங்கள் இருப்பதாகக்கூறி அவற்றுக்கு 3 வார கால சுற்றுலாத் திட்டத்தை இலங்கை சுற்றுலாக கழகம் தீட்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா கழகத்தின் இந்த திட்டத்திற்கு வரலாற்று அறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இராமாயணம் இடங்கள் என்று சொல்லப்படுவதற்கு எவ்வித வரலாற்று ஆதாரங்களும் இல்லை. புராணக் கருத்துக்களை கொண்டு மக்களுக்கு தவறான கருத்துக்களை தருவது சரியல்ல என்று கூறியுள்ளனர். ஆனால் சிங்கள அரசின் நோக்கம் அதுவல்ல. இந்தியாவில் உள்ள இந்துத்துவா கருத்துடையவர்களை தனக்கு ஆதரவாக மாற்றுவதற்கு இந்த தந்திரத்தை அது கையாளுகிறது.

- பெரியார் முழக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.