Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் யாருடைமை

Featured Replies

உலகம் யாருடைமை

உலகில் ஆத்திகசமயங்கள் பல. அவற்றுள் எதுவும் இவ்வுலகை இன்ப நிலயமெனச் செல்லாது. இது துன்ப நிலயம் என்பதுதான் அவற்றின் ஒருமித்த கருத்து. பெளத்தமும் சமணமும் நாத்திகங்கள். அவையும் உலகைவெறுத்தே பேசும். ஆனால் உலகாயதம் என்றொரு சமயம் உளது. அது பச்சை நாத்திகம். உலகு இன்ப நிலயம் எனக் கொள்வது அதுதான்.

அந்த வாடை இப்போது எங்கும் வீசுவதாயிற்று. ஆத்திக சமயத்தவருள்ளும் அவ் வாடையில் அகப்படாத வரைத் தேடித்தான் காண வேண்டும்.

உலகில் அரசுகள் பல உள. அவற்றுள் தன் மக்களுக்கு உலகு துன்பநிலயம் என்பதை உறுத்தி வருவது எது? எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

தனிப்பட்டவர், சமூகத்தினர், அரசினர் தம்முள் மோதிக் கொள்கின்றனர். அம்மோதல்கள் எப்போதோ நடந்தன. இப்போது ஓய்ந்தன. இனி நடக்கவே மாட்டா எனச் சொல்ல முடியாது. அவற்றில் உபயோகமாகும் போர்க் கருவிகள் பலவகையின. விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்கு நாள் புதியன புதியனவாகக் கண்டு பிடிக்கப்பட்டன. வெகு பயங்கரமானவை. சிங்கம் புலி பாம்பு முதலியன பொல்லாதவை எனப்படும். அவற்றின் நகம் பல் நஞ்சு முதலியன தானும் அவ்வளவு பயங்கரமான தல்ல. மேலே சொன்ன வாடையே அம்மோதல்களுக்குக் காரணம்.

  • தொடங்கியவர்

உலகம் இன்ப நிலயம். அவ்வின்பம் எல்லார்க்கும் சமமாக உரியது. ஆதிக்ககாரர் சிலர் அதிகமான இன்பத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அதனால் பெரும்பாலார்க்குத் தம்பங்கு கிடைப்பதில்லை, அவர் துன்பமே யடைகின்றனர். அவ்வின்பம் எல்லார்க்கும் சமமாகக் கிடைக்க வேண்டும், அதற்கு வழி உலகை அதாவது உலக வளத்தைச் சமமாகப் பங்கிட்டுவிடுவதேயாம். இப்படி உலகம் எல்லார்க்கும் பொதுவுடைமை எனப் பேசப்படுகின்றது.

அப்பேச்சு செவிக்கு இனிப்பது. ஆனால் உலகு மனிதர்க்கு உடைமையாதல் உரிமை, தகுதி ஆகியவற்றுள் எது பற்றியது? உரிமைபற்றியது எனின், உரிமையாவது யாது? உலகில் மனிதர் பிறந்தனர். அதனால் உலகு அவருக்குப் பிறப்புரிமை யாயிற்று. அதுவா? ஆமெனின், அவர்போல் மற்றப் பிராணிகளும் உலகிற் பிறந்துள்ளன. அதனால் உலகின் பிறப்புரிமைப் பங்கு அவற்றிற்கும் உண்டு. அதை மனிதர் அபகரிக்கலாமா? அபகரிக்கவில்லையா? இல்லையெனின் ஈயொழிப்பு இயக்கம், மூட்டுப் பூச்சி மருந்து, முதலிய வேட்டைகள் ஏன்? தகுதிபற்றியது எனின், தகுதியாவது யாது? மனிதன் பகுத்தறிவுடையான், படித்தவன், பட்டதாரி, பதவி வகிக்கிறான், அற்புத எந்திரங்கள் பல காண்கிறான், மாடமாளிகை கட்டிக் குடிபுகுகிறான், நடக்கிறான், ஊர்கிறான், மிதக்கிறான், பறக்கிறான், இவை தகுதி. மனிதருடைய அத்தகுதி மற்றப் பிராணிகளின் உரிமையைக் கெடுக்கலாமா?

  • தொடங்கியவர்

சாத்தன் தனவான். அவனுக்கு மகன் ஒருவன். அவன் அத்தனத்துக்குப் பிறப்பால் உரியன்; ஆயினும் முட்டாள். அடுத்த வீட்டுக்காரன் கொற்றன். அவன் சமர்த்தன். சாமர்த்தியமாகிய தகுதி பற்றி அவனுக்கு அம்முட்டாளின் உரிமையைப் பறித்துக் கொடுத்திடலாமா? அம்முட்டாளைத் திருத்துக, கூடிய வரை தகுதிப்படுத்துக. அதுவே நியாயம். உரிமையைப் பறிப்பதற்குத் தகுதியைக் காரணமாக்குவது நல்லதன்று. தமிழனுக்கு தமிழ்நாடு பிறப்பாலுரியது, வேறெதனாலுமன்று. அவன் தகுதியற்றவனா யிருக்கலாம். அதனால் அவனுரிமையைப் பிடுங்கி முடியாது. அவனைத் தகுதிப்படுத்துவது தான் நேர்மை. அந்நாட்டின் ஓட்டுரிமை அவனுக்கேயுண்டு. பிற நாட்டவரிடம் தகுதி காணப்படலாம். ஆயினும் அவருக்கு தமிழனின் ஓட்டுரிமை கிடையாது. இன்னும் உரிமையுடைமை சுலபத்தில் நிச்சயமாம். தகுதியுடைமை அங்ஙனமன்று. தகுதியை நிச்சயிக்கும் தகுதியுடையான் எவன்? நான் என எவனும் முன்வரான். வெறுங் கழுத்தை விட அரைப்பண நகையே மேல் என்பது பழமொழி. அப்படித்தான் தகுதியும் இருப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்டவர், சமூகத்தினர், அரசினர் தம்முள் மோதிக் கொள்கின்றனர். அம்மோதல்கள் எப்போதோ நடந்தன. இப்போது ஓய்ந்தன.

ஆறுமுகநாவலர் ஐயா, அவர்களே மேலே நீங்கள் கூறிய வரி எனக்கு விளங்கவிலை.

தயவு செய்து விளக்கமாக கூறுவீர்களா ?

  • தொடங்கியவர்

இது இவ்வுலகத்தில் நடந்த சண்டைகள் பற்றி பொதுவாக் குறிக்கப்பட்டது.

  • தொடங்கியவர்

மேலும் உலகில் மற்றப் பிராணிகள் ஏன் வந்தன? மனிதர் ஏன் வந்தனர்? அவ்விரண்டு வரவுகளுக்கும் இலட்சியம் உண்டா? அ·தெது? அதில் வித்தியாசம் இல்லையெனின், உலகு மனிதருள் படச் சர்வபிராணிகளுக்கும் சமமான பொதுவுடைமையே. மனிதருக்கு அதில் விசேடவுரிமை சிறிதுமில்லை.

இனி, உலகு இன்பமுந் துன்பமுங் கலந்தது. அ·தனுபவம். ஆயுள் முழுவதும் இன்பமே யனுபவிப்பவனும், துன்பமே யனுபவிப்பவனும் இலர். இன்பத் துன்பங்கள் அளவிறந்தனவு மாம். இன்பத்தை எல்லாரும் விரும்புகின்றனர், தேடிச் செல்கின்றனர். துன்பம் வெறுக்கப்படுகிறது, ஆனால் வந்தடைகிறது. தேடுகிற இன்பம் கிடையாமலும் போம். வந்தடைகிற துன்பத்தை விலக்கவு முடியாது. அதனால் இன்பத் துன்பங்களுக்கு மனிதன் அதிகாரி யல்லன் என்பது அறியப்படும்.

இன்பந் தருவதே துன்பமாயும் முடியும். மின்சாரம் விளக்கைத் தருகிறது, உயிரையும் வாங்குகிறது.

நாய் எலும்பைக் கடிக்கிறது. அதன் பற்களுக்கிடையில் ஒழுகுகிறது இரத்தம். அதனைச் சுவைக்கிறது அப்பிராணி. எலும்பில் ஒன்றுமில்லை. அவ்வெலும்பு போல்வதுதான் உலகும். அப்படிச்சொல்வர் ஆத்திக சமயிகள்.

  • தொடங்கியவர்

சொரி சிரங்கள் அச்சிரங்கைச் சொரிவான். அவனுக்கது பரமானந்தமா யிருக்கும். பிறகு அதில் இரத்தம் ஒழுகும். அப்பொழுது அவன் அடைவது துன்பம். அச்சிரங்கு போல்வதே இவ்வுலகும்.

மனிதன் மாடா யுழைகிறான். சோறுந் துணியும் சிறிது கிடைக்கின்றன. அ·தின்பம். உழைப்புக்கு வழியில்லாமலும் போகிறது. அப்போது துன்பமே அவனுக்குப் பலன். அவ்வுழைப்பின் கஷ்டத்தையும், கிடைக்கும் இலாபத்தையும் ஒப்பிடுக. முன்னது அதிகம். பின்னது கொஞ்சந்தான்.

விரலுக்குத் தகுந்த வீக்கம் என்பது பழமொழி. கூழுக்கு உப்பில்லை என்கிறான் ஒருவன். பாலுக்குச் சர்க்கரையில்லை என்கிறான் இன்னொருவன். இருவருக்கும் விசனம் ஒன்றே. வாழ்க்கை வசதியுள்ளோரையுந் துன்பந் தொடராமலிருப்பதில்லை.

இன்பமுந் துன்பமும் எதிர் மறைகள். ஆகலின் அவை உலகின் இயற்கையாகா. அவற்றிற்குக் காரணம் வேறு; உலகு சாதனமா யிருப்பதே.

  • தொடங்கியவர்

நேரிய முறையில் அவசியத் தளவில் உலகைப் பயன்படுத்திக் கொள்பவன் சிஷ்டன். (நல்லவன்) அக்கிரமமாய் அநாவசியமாய் உலகில் ஆசைகொள்பவன் துஷ்டன். (கெட்டவன்) இத்துஷ்ட நிக்கிரகமும் அச்சிஷ்ட பரிபாலனமுமே அரசுகளுக்கு இலக்கணமாகும்.

மனிதனின் வாழ்க்கை லட்சியமும், மற்றப் பிராணிகளின் வாழ்க்கை லட்சியமும் ஒன்றுதானா? வேறு வேறா? அதனைப் பகுத்தறிவதே பகுத்தறிவு. அது சோறு போல்வது. மற்றைப் பகுத்தறிவுகளெல்லாம் துணைக்கறிகள் போல்வனவே. மனிதன் மற்றப் பிராணிகள் போல் உண்டு உறங்கிச் சாவதற்காக இங்கு வரவில்லை.

புறம்போக்கு நிலங்கள் கூட அரசினுடையது. அதன் அனுமதியின்றி அந்நிலங்களில் ஒரு சதுர அங்குலங் கூட யாருங் கைவைக்க முடியாது. அங்ஙனமாக உலகுக்கு மாத்திரம் உடையான் ஒருவனுமிலனா? உலகு தானே உண்டான தன்று, ஒருவனால் உருவாக்கப்பட்டது. அவ்வொருவனும் மனிதருள் எவனு மிலன். அதனை உண்டாக்கிய வொருவன் ஈசுரன். ஆகலின் அவனுடைமையே அதுஎன்க. அவ்வுடைமை அவனுக்கு அநாதியே உரியது.

ஈசுரன் தந்தை. அவனுக்கே சொந்தவுடைமை உலகு. உயிர்கள் அவனுக்குப் புத்திரர். அவற்றைப் பலபல வுடம்புகளிற் புகுத்தி உலகில் அவன் அனுப்புகிறான். அதற்குக் காரணமுண்டு. அதனை அவன் சொல்லாம லில்லை; தெரியாமலிருப்பவர் தான் பலர்.

  • தொடங்கியவர்

மனிதவுடம்பைப் பெற்ற வுயிர்கள் மனிதரெனப் படுவர். தந்தை பணக்காரன். அவனுக்குப் புத்திரர் நாலைந்து பேர். தந்தை சீவித்திருக்கும்போதே அப்பணத்தைப் பங்கிட முனைகின்றனர் அப்புத்திரர். அவர் எப்படி மதிக்கப்படுவர்? அப்படி ஈசுரனிருக்கும்போதே உலகை மனிதர் பங்கிட முயல்வது அவர்க்கு மதிப்புத் தருவதாகுமா? ஈசுரன் சாகான், நித்தன், அவனைக் கருதாமல் உலகைப் பங்கிட்டாலும் மனிதன் துயரம் மாறப்போவதேயில்லை. ஆகலின் அவனைக் கருதுவதே மனித வாழ்க்கையின் இலட்சியம். அந்த இலட்சியம் மற்றப் பிராணிகளிடமில்லை. ஏன்? அவை பகுத்தறி வில்லாதன.

மனிதன் அறிகிறான், அறியாமலுமிருக்கிறான். உலகில் அறியாமை யில்லாத அறிஞன் எவனுமிலன். அவ்வறியாமை அவனுக்கு எப்படி வந்தது? அ·தொன்று. இன்பமுந் துன்பமும் உலகின் இயல்பல்ல. உலகு வெற்றெலும்பே போல்வது. ஆயினும் மனிதன் சுகிக்கிறான், துக்கிக்கிறான். அவ்விரண்டு மில்லாதவன் எவனுமிலன். அவை அவனுக்கு எப்படி வந்தன? அ·தின்னொன்று. உலகு மனிதனுக்கு வாழ்விடம். அதனை அவன் தனக்கென ஆக்கிக் கொள்ளவில்லை. அவன் அதில் தள்ளப்பட்டான். ஏன்? அது மற்றொன்று, ஆக மனிதன் தன் அறியாமை, இன்பத்துன்பம், உலகு ஆகிய மூன்றன் வரலாறும் தெரிய வேண்டும் அ·தவனுக்குக் கடன். மனிதப் பிறவி பயனுடையதாவத் அப்போது தான்.

உலகில் மொழிகள் பல. ஒவ்வொரு மொழியிலும் மனிதர் எழுதிய புத்தகங் களுள, அத்தனை மொழிகளிலு முள்ள அத்தனை புத்தகங்களும் எண்ணிறந்தன. ஆயினும் அவற்றுள் ஒன்றிலாயினும் அம்மூன்றன் வரலாறு காணப்படாது. ஏன்? எவ்வளவு அறிவுள்ள மனிதனுக்கும் அவ்வரலாற்றைக் காணும் ஆற்றல் இருக்க முடியாது. அவ்வாற்றலுடையான் ஈசுரன் ஒருவனே. அவன் ஆக்கிய புத்தகங்களிற்றான் அவ்வரலாறு பிரசித்தம். அப்புத்தகங்களே இருக்கு முதலிய 4 வேதங்களும், காமிக முதலிய 28 சிவாகமங்களுமாம்.

  • தொடங்கியவர்

மனிதன் அறியாமை முதலிய அம்மூன்றிலிருந்தும் விடுபட வேண்டும். அதற்கான மார்க்கங்களையும் அவ்வீசுரனே அந்நூற்களில் வகுத்துள்ளான். மனிதன் அவற்றைக் கசடறக் கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க. நின்றால் அவன் தன்முன்பிறப்புக்கள் வீணானமை கண்டு கவல்வான், உலகை உவர்ப்பான், இனிப் பிறக்க விரும்பான், என்றும் பிறவாமையையே வேண்டுவான். அத்தனையிலும் அவனுள்ளிருந்து துணைபுரிவான் அவ்வீசுரன். அவனே அப்பிறவாமையைத் தரவல்லான், தருவான். அது ஈடு செய்ய முடியாத நன்றி. அதனை மனிதன் ஓர்க. அவ்வீசுரனைக் கணமும் மறவாது ஏத்துக. அது தான் செய்ந்நன்றி யறிதல் எனப்படுவது. அந்நன்றியைக் கொன்றல் பாதகம். ஈசுரன் மனிதனை அம்மூன்றிலிருந்தும் விடுவித்துப் பிறவிநீக்கி அறிவை விரிவாக்கித் தன்பாலுள்ள நிரந்தர வின்பத்தில் வைத்து ஆள்வான். அவ்வின்பச் செல்வமே தன் புத்திரர்க்கென அவன் வைத்துள்ளது.

அதனைப் பெறுதர்கான சூழ்நிலை உலகிற் பெருகி யமையவேண்டும். அச்சூழ்நிலையைப் பெருக்கி அதனில் மனிதன் வாழ்வதே வாழ்வு. அதனையே 'வாழ்வாங்கு வாழ்'வது என்றார் வள்ளுவர். அவன் உலகின்பத்தை நாடிச் செல்லான். உலகத் துன்பம் அவனை நாடி வராது. 'Live and let live' என்பதை விட்டு 'Let live and live' என்பதைக் கடைப்பிடிப்பா னவன். அதனாற் பொதுவுடைமைப் பிரசாரம் மனித சமூகத்தை விட்டு ஒழியும். உலகம் போக்கள மாதலுங் குறையும். இன்றேல் பச்சை நாத்திகம் உலகைப் படுகள மாக்கவே செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.