Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரும் தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகள் தமது இலகுகாலாட் படையினருடன் ஈரூடகப்படையினரையும் பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகriத்துள்ளன-- வேல்ஸிலிருந்து அருஷ்

Featured Replies

பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த முறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.

மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, சோமாலியா, சூடானின் டார்பர் பகுதி, பலஸ்தீனத்தின் காசா பகுதி, கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் போரினால் கடுமையான பாதிப்புக்களை அனுபவித்து வருவதாக தெ?வித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் , நீதிக்கு புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் என்பன 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் மோசமடைந்து காணப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மக்கள் பலவந்தமாக காணாமல்போகின்றனர் என்றும் படையினரோடு இணைந்துள்ள ஆயுதக்குழுவினரே இந்த கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருகையில் அரசின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களும் தலை தூக்கி வருகின்றன.

இலங்கை அரசு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளது முக்கியமானது.

அரசின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை வடபோர்முனையில் உள்ள சிறுத்தீவு பகுதியில் அமைந் திருந்த இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்படை காவல்நிலை மீது விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறுத்தீவு, மண்டைதீவுக்கும் குருநகருக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவாகும்.

அதற்கு அண்மையாக பூநகரியின் முனைப்பகுதி அமைந்துள்ளது. பூநகரியின் இந்த இந்த காவல்நிலையின் பாதுகாப்புக்கள், கடந்த வருடம் மே மாதம் நெடுந்தீவில் அமைந் திருந்த கடற்படையினரின் முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினரின் தாக்குத லுக்கு இலக்கானதை தொடர்ந்து அதிகரிக்கப் பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் நகர்வுகளை கண் காணிப்பதற்காக சிறிய ராடார் நிலை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டதுடன், ஏறத்தாள 2000 மீ. தூரவீச்சுக் கொண்ட 50 கலிபர் துப்பாக்கி, இலகு காலாட்படையினர் பயன்படுத்தும் 60 மி.மீ மோட்டார் என்பனவற்றுடன் இரண்டு பிரிவுக்குரிய தளமாக இந்த தளம் மாற்றமடைந்தது (பிரிவு என்பது இராணு வத்தின் மிகச்சிறிய பிரிவு, இது 7 தொடக்கம் 8 படையினரை கொண்டிருப்பதுண்டு) பூநகரி யின் கல்முனை புள்ளியில் உள்ள விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலையிடம் தொடர்பான தகவல்களை திரட்டும் மையமாகவும் இது தொழிற்பட்டு வந்தது.

அதிகாலையில் சமர் ஆரம்பித்ததும், சிறுத் தீவுக்கு அருகில் உள்ள மண்டைதீவு மற்றும் யாழ்.நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தளங் கள் உசார்படுத்தப்பட்டன. 2007 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அமைந்திருந்த கடற்படையின ரின் முகாமை விடுதலைப்புலிகள் தாக்கிய போதும், 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டை சேர்ந்த இரு பற்றாலியன்கள் தரையிறங்கிய புலிகளுக்கு எதிரான நடவடிக் கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்தன.

ஆழம் குறைந்த யாழ்.கடல்நீரேரியில் நீருந்து விசைப்படகுகள் மற்றும் சாதாரண படைத்துறை அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பெரும் தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகள் தமது இலகுகாலாட் படையினருடன் ஈருடகப்படையிரையும் பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. ஈரூடகப்படையினரை பொறுத்தவரையில் விரைவாக தரையிறங்கி எதிர்த்தரப்பு பாதுகாப்பு அரண்களை தாக்கி அழிப்பதன் மூலம் இலகுகாலாட்படையினரின் நகர்வை இலகுவாக்கும் தன்மை கொண்டவர்கள்.

இந்த நோக்கத்திற்காகவே உலகின் வலிமை மிக்க நாடுகள் ஈரூடகப்படையினரின்ன் நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தி வரு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது போரியல் குற்றம், இனஅழிப்பு போன்ற குற்றங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான கருத்துக்களை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மனிதாபிமான பணிகளுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் உலகளாவிய ரீதியில் மக்களை பாதுகாப்பதற்காக உத்தியோகப்பற்றற்ற நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.

போரில் பாதிக்கப்படும் பல மில்லியன் மக்களுக்கு உதவும் முகமாக இந்த நிபுணர் குழு அமைப்பது முன்னேற்றகரமானது என கோல்ம்ஸ் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துவரும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தனது 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் முனைப்பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் வந்த புலிகளின் ஈரூடகப்படையினர் அதிகாலை 1.30 மணியளவில் சிறுத்தீவில் அமைந்திருந்த படை நிலை மீது தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதாகவும், 3 படையினரின் சடலங்களும், ராடார் சாதனங்கள், 12.7 மி.மீ கனரக இயந்திரத் துப்பாக்கி, 60 மி.மீ மோட்டார் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் வெடிபெருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் கைப்பற்றிய ஆயுத தளபாடங்களில் ஏறத்தாள ஒரு டசின் நச்சுவாயு பாதுகாப்பு முகமூடிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாள 12 தொடக்கம் 18 பாதுகாப்பு தரப்பினர் இந்த சிறிய முகாமில் பணியாற்றுவது வழமை. யாழ்.குடாநாட்டின் தென்மேற்குபுற நுளைவாயிலில் சிறுத்தீவு அமைந்திருப்பதனால் விடுதலைப்புலிகள் கடல் வழியாகவோ அல்லது ஆகாயவழியாகவோ யாழ்.நகர பகுதிக்குள் ஊடுருவுவதை கண்காணிப்பதே இந்த முகாமின் பிரதான நோக்கம்.

முதலில் சிறிய காவலரணாக காணப்பட்ட கண்ணாடி இழைப்படகுகளையே கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதுண்டு.

எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குருநகரை அண்டிய பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் 3 உட்கரை யோர ரோந்து படகுகள் கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ள கியதைத் தொடர்ந்து நீருந்து விசைப்படகுகள் மண்டைதீவு கடற்படைத் தளத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவதுண்டு.

விடுதலைப்புலிகளின் தாக்குதலின்போது மண்டைதீவு கடற்படைத்தளத்தில் இருந்து நீருந்து விசைப்படகுகள் எவையும் உதவிக்கும் வரவில்லை.

தாக்குதல் ஆரம்பித்ததும் இந்த காவல்நிலையத்துடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவு

தலையங்கம் செம தூக்கல்... கீப்பிட்டப்...

  • தொடங்கியவர்

நன்றி சூறாவளி

தலையங்கம் செம தூக்கல்... கீப்பிட்டப்...

உங்கட உண்மை பெயர் சூறாவளியா.? இல்லை திருகுவலியா.?

போர் முழுமையாக நடைபெறும் தருணத்தில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும் என தமிழ்ச்செல்வன் ஒருதடவை கூறியுள்ளார். அது நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.