Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த விக்கட் விழுந்தது

Featured Replies

உலகின் 8 கோடி தமிழ் பார்வையாளர்கள் படு உசாராக பார்த்து கைதட்டி ரசித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை அணியினரால் தமிழக மீனவ அணியின் அடுத்த விக்கட் விழுந்தது இதுவரை 300 குமேற்பட்ட விக்கட்டுகள் விழுந்தாலும் வாழ்கை என்னும் ஆட்டத்தில் துடுப்பாட இந்திய தமிழ் மீனவ அப்பாவிகள் தயாரகவே உள்ளனர்.

விஜபி பார்வையாளர்களும் சாதாரண பார்வையாளர்களும் இலங்கை கடற்படையினரின் அட்டகாசமான பந்துவீச்சு மன்னிக்கவும் குண்டுவீச்சின் துல்லியத்தினை கண்டு மெய்சிலிர்த்து போய் அமைதியாகினர் இந்த அமைதியினை இலங்கை கடற்படை அணியினரும் இலங்கை சிங்கள ரசிகர்களும் தமிழ் ரசிகர்கள் மற்றும் 100 கோடி இந்திய அணியினரின் ரசிகர்களின் தமக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் தமது பந்துவீச்சின் திறமையை பாராட்டும் வகையில் எண்ணியதாக வர்ணணையாளர் தெரிவித்தார்

விக்கட்டினை விழுத்தியபின்னர் கருத்து தெரிவித்த இலங்கை கடற்படை அணியின் தலைவர் இந்திய மற்றும் தமிழ் ரசிக பெரூமக்களின் அமைதியும் ஆதரவும் தம்மை உற்சாகமூட்டுவதாகவும் இதன் மூலம் மேன்மேலும் விக்கட்டுகளை சரமரியாக வீழ்த்த தமக்கு உத்வேகம் ஊட்டுவதாகவும் தெரிவித்தார்

இலங்கை கடற்படை வெறித் தாக்குதல் - தங்கச்சி மடம் மீனவர் பலி

செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து வந்த 45 நாள் மீன் பிடித் தடை நீங்கி கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது.

ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளிரவில் தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடையே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் விரைந்து வந்தனர். வந்த வேகத்தில் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் சந்தியாகு உடலில் குண்டு பாய்ந்தது. அவர் அலறித் துடித்தபடி கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் அவரது கை உடைந்து போனது. பின்னர் கடற்படையினர் அங்கிருந்து போய் விட்டனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் சந்தியாகுவுடன் கரைக்கு விரைந்தனர். பின்னர் அவரை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சந்தியாகு உயிரிழந்தார்.

இந்த படுகொலையால் ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளன். மீன்பிடி தடை நீங்கி இப்போதுதான் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ள இந்த வெறியாட்டத்தால் அவர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.

தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய நாட்டு மக்களை அயல் நாட்டு இராணுவம் கொன்று குவிக்கும் போது ,

அதற்கு ஆயுதமும் , போர்ப்பயிற்ச்சியும் கொடுக்கும் ஒரு சொரணையற்ற அரசை உலகில் வேறெங்கும் காணமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதமும் பயிற்றியும் மட்டுமல்ல சுடச்சொல்லி ஏவியும் விடுறாங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.