Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாக் கிழவனின் கொஞ்சநேரம் ...!

Featured Replies

தம்பிகள், தங்கச்சிகள் எண்ட ராசாக்கள், செல்லக்குஞ்சுகள், கற்கண்டுகள் எல்லாருக்கும் கனடாக் கிழவனிண்ட இனிய வணக்கங்கள் பாருங்கோ.

கனடாக்கிழவன் திரும்பவும் அறுக்கவந்திட்டான் எண்டு கோவிக்காதிங்கோ பிள்ளைகள். இப்ப கொஞ்சநாளா இந்தக்கிழவனிண்ட காதில தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் எண்டு சொல்லி சனங்கள் பறமேளம் அடிக்கிடிதுகள் கண்டியளோ! அதான் இண்டைக்கு எண்ட காதுச்சவ்வு வெடிக்கமுன்னம் தமிழ்த்தேசியம் எண்டால் என்ன எண்டு இந்தக்கிழவன் ஆராய்ச்சி ஒண்டுல இறங்கி இருக்கிறன்.

இனி விசயத்துக்கு வருவம் பாருங்கோ.

முதலில, தமிழ்த்தேசியம் பற்றிய ஆராய்ச்சிய தமிழ் அகராதியில இருந்து ஆரம்பிப்பம் எண்டு நினைச்சுப்போட்டு உந்த கதிரவேற்பிள்ளையிண்ட தமிழ் அகராதிய புரட்டிப்பார்த்தால், இந்தக்கிழவனுக்கு பெரிய ஏமாற்றம் கண்டியளோ! அதில தேசியம் எண்டால் திசைச்சொல் எண்டு மட்டும் எழுதி இருக்கிது. வேற ஒண்டையும் காண இல்ல பாருங்கோ. பழைய அகராதிதானே. அந்தக்காலத்து தமிழருக்கு தேசியம் எண்டால் என்ன எண்டு தெரியாது போல.. சரி அத விடுங்கோ..

தாயகத்தில பாருங்கோ எங்கட பிள்ளைகள், உறவுகள் உயிரப்பணயம்வச்சு போராடிக்கொண்டு இருக்கிதுகள். இன்றுவரை இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும், பல்லாயிரம் மக்களும் போராட்டத்துக்கு ஆகுதி ஆகி இருக்கிறீனம் பாருங்கோ. தவிர போராட்டத்திண்ட வலிகள, சுமைகள ஆயிரம் ஆயிரம்பேர் சுமந்து வாறீனம். இப்பிடி ஒருபக்கத்தால கதைபோய்க்கொண்டு இருக்கிது. ஆனால்... மற்றப்பக்கத்தால எப்பிடி எப்பிடி கூத்துகள் எல்லாம் நடக்கிது எண்டு தெரியுமோ உங்களுக்கு?... வேண்டாம் பிள்ளைகள் எங்கட மூஞ்சியயே நாங்கள் கண்ணாடியில பார்த்து விமர்சனம் செய்யுறது சரியில்லத்தானே. எண்டாலும் பாருங்கோ.. எண்டவாய் உண்மைபேசப்போறன் எண்டு ஒற்றக்காலில.. இல்ல நாக்கில நிக்கிது.

இப்ப என்ன நடக்கிது தெரியுமோ? இஞ்ச வெளிநாடுகளில இருக்கிற சனங்கள் தமிழ்த்தேசியம் எண்டுசொல்லிப்போட்டு ஒருத்தரோட ஒருத்தர் முடியப்பிடிச்சு இழுத்து குழந்தப்பிள்ளைகள் மாதிரி சண்டைபிடிச்சுக்கொண்டு இருக்கிதுகள் கண்டியளோ! வழமையா தேசியம் எண்டுற வார்த்தை ஒரு இனத்தவர்கள சேர்த்துத்தான் வச்சு இருக்கிது. பிரிச்சுவச்சதா வரலாறு இல்ல. ஆனா என்னமோ இந்தக்கிழவனுக்கு என்ன பயமா இருக்கிது எண்டால் தேசியம் எண்டுற வார்த்தை வெளிநாடுகளில இஞ்ச இருக்கிற ஒண்டு ரெண்டு தமிழரயும் பிரிச்சு வைக்கப்போகிதோ எண்டுதான் கண்டியளோ!

இந்தக்கிழவனிண்ட கேள்வி எல்லாம் பாருங்கோ யாவாரம் செய்யேக்க ஏனுங்கோ தேசியத்த இழுத்து குளிர்காயவேணும்? கனடாவில பத்திரிகை எண்டு எடுத்தால் எத்தினையோ பக்கத்தால எத்தினையோ எல்லாம் வருகிது. எல்லாமே தமிழ்த்தேசியம் சார்ந்த பத்திரிகைகள் எண்டுதான் சொல்லப்படுகிது. ஆனால்.. உண்மையில என்ன நடக்கிது பாருங்கோ. தமிழ்த்தேசியம் எண்டு சொல்லி வருகிற இந்த ஆயிரத்துஎட்டு பத்திரிகைக்காரங்களுக்கு இடையில ஏதாவது ஒற்றுமை இருக்கிதோ? ஆகக்குறைந்தது பத்திரிகையாளர் எண்டுற அளவிலையாவது தேசிய ஒருமைப்பாடு இருக்கிதோ?

இப்பிடித்தான் பாருங்கோ ஆயிரத்துஎட்டு வானொலிகள் நாலுபக்கத்தாலையும் வருகிது. கனடாக்காற்று அலைகளில தமிழ்நிரம்பி வழியுது. சந்தோசமா இருக்கிது. ஆனால் இஞ்ச வானொலிகள் நடாத்துற ஆக்களுக்கு இடையில ஏதாவது ஒற்றுமை இருக்கிதோ? நாயும், பூனையும் மாதிரி பிடிபட்டுக்கொண்டு இருக்கிறீனம் கண்டியளோ!

இப்பிடித்தான் பாருங்கோ பல தமிழ் தொலைக்காட்சிகளும் இருக்கிது. பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கிது. எல்லாரும் தமிழ்தேசியம் எண்டுதான் சொல்லுறீனம் பாருங்கோ. ஆனால் ஒரு தேசியவாதியால இன்னொரு தேசியவாதியோட ஏன் ஒற்றுமையா இருக்கமுடியவில்ல, ஒரு தேசியவாதியால இன்னொரு தேசியவாதியோட ஏன் புரிந்துணர்வுடன் பழகமுடிய இல்ல எண்டுதான் இந்தக்கிழவனுக்கு விளங்கஇல்லபாருங்கோ.

யாராவரம் எண்டு வந்தால் போட்டி வாறது இயல்புதான் பாருங்கோ. அதற்காக, தமிழ்த்தேசியத்த பகடைக்காயா வச்சு யாவாரம் செய்து விளையாடவேணுமோ பிள்ளைகள்? அது கூடாத பழக்கம்தானே? எத்தின பிள்ளைகள் வாழவேண்டிய வயசில எல்லாத்தையும் தியாகம் செய்துபோட்டு விடுதலை கிடைக்கவேணும் எண்டுற ஒரே ஒரு எண்ணத்தோட செத்துப்போச்சிதுகள். தாயகத்தில நாங்கள் இழந்த, இழக்கின்ற உறவுகள்.. சிந்திய, சிந்துகின்ற கண்ணீர் எல்லாம் எவ்வளவு எண்டு எங்களால கற்பனைபண்ணிக்கூட சொல்லமுடியாது பாருங்கோ. அத்தனை வேதனைகள்...

நிலமைகள் அப்பிடி இருக்க, நானோ நீயோ பெரிய ஆள் எண்டு இஞ்ச வெளிநாடுகளில இருக்கிற தேசியவாதிகள் தங்களுக்குள்ள மல்லுப்பிடிக்கிறது வெட்கக்கேடு கண்டியளோ!

எங்கட திறமைகளைக் காட்ட எத்தினயோ துறைகள் இருக்கிது. வெளிநாடுகளில நாம முன்னேறுறதுக்கு ஆயிரம் வசதிகள் இருக்கிது. அப்பிடி இருக்கேக்க இந்த தமிழ் ஊடகங்களுக்க நுழையுற தேசியவாதிகள் எண்டு தங்கள சொல்லிக்கொள்ளுற ஆக்கள் மட்டும் ஏன் தங்கட திறமைகள தேசியவாதிகள் எண்டு இனங்காட்டிக்கொள்ளுற மற்றைய ஆக்களோட மல்லுப்பிடிக்கிறதில செலவளிக்கிறீனம் எண்டு இந்தக்கிழவனுக்கு விளங்க இல்ல பாருங்கோ.

தமிழ்தேசியம் எண்டுறது பாருங்கோ அழகிய குரல் நெளிவு, சுழிவுகளில இல்ல கண்டியளோ. தமிழ்த்தேசியம் எண்டுறது அழகிய அசைவுகளில, முகவசீகரத்தில இல்லக்கண்டியளோ. தமிழ்த்தேசியம் எண்டுறது முத்து முத்தா எழுதுற அழகிய எழுத்தில இல்லக்கண்டியளோ.. அப்ப அது எதுலதான் இருக்கிது? அது பாருங்கோ உணர்வில இருக்கவேணும். உண்மையான தேசியவாதி எண்டுறவன் ஒருநாளும் இன்னொரு தேசியவாதிய பகைக்கமாட்டான். உண்மையான தேசியவாதி எண்டுறவன் ஒருநாளும் இன்னொரு தேசியவாதிய வெறுக்கமாட்டான். உண்மையான தேசியவாதி எண்டுறவன் ஒரு தாயாக, தந்தையாக, அண்ணனாக, ஆசானாக இருந்து தனது மக்கள, உறவுகள, இனத்த காப்பாற்றுவான். ஆதாரம் கொடுப்பான். அவன் ஆக்களோட சாதி, சமயம், பால், வயது எண்டு வேறுபாடுகள் பார்த்து பழகமாட்டான்.

சரி அப்ப இந்தக்கிழவனப்பார்த்து இப்ப வெளிநாட்டில இருக்கிற நாம என்ன செய்யுறது எண்டுதானே கேக்கிறீங்கள்..? ஓம் பாருங்கோ...

உந்ததேசியங்கள் எண்டு நீங்கள் போடுற கோசங்கள முதலில தூக்கி எறிஞ்சுபோட்டு மனுசரோட மனுசரா பழங்குங்கோ பிள்ளைகள். மனிதாபிமான உணர்வுகள உங்களுக்குள்ள வளர்த்து எடுங்கோ பிள்ளைகள். முதலில நல்ல ஒரு மனுசனா இருக்கப்பாருங்கோ பிள்ளைகள். அந்தப்பக்குவநிலை உங்களுக்கு வந்தாப்பிறகு - அதுக்குபிறகு தாராளமா தேசியவாதியா வரமுயற்சி செய்யலாம்.

ஒற்றுமையே பலம் எண்டு சொல்லப்படுற நிலமை மாறி, தேசியமே பலவீனம் எண்டு சொல்லப்படுற நிலமை வெளிநாடுகளில தமிழருக்கு வரக்கூடாது கண்டியளோ..

கனக்க கதைச்சு இருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ பிள்ளைகள். எனக்கும் வயசுபோட்டிது. நேரம் கெட்டநேரத்தில எண்ட வாயுக்கால இப்ப பொன்மொழிகள் எல்லாம் வரத்துவங்கீட்டிது. வார்த்தைகளும் வாறவேகத்திலயே இந்தக்கிழவனுக்கு மறந்துவேற போகிது. எல்லாம் ஒரு சுடலை ஞானம்தான் பாருங்கோ.

வேற என்ன..

ஈழக்கிழவன சுகம் கேட்டதா சொல்லுங்கோ. அப்ப நான் வாறன் கண்டியளோ!

Edited by முரளி

நல்லா இருக்கு கருத்துக்கள், ஆனால் கோசம் போடாது இருந்தால் உலகத்திற்கு முன்னால் எம் நியாயம் தோற்றுவிடாதா கனடாக்கிழவன் ஜயா...

Edited by கிருபா

  • தொடங்கியவர்

கனடாக்கிழவன் இப்ப வெளியில போட்டார். பிறகு வர உதுபற்றி கேட்டுச்சொல்லிறன் கிருபா.

தேசியம் எண்டா இவ்வளவுதானா ?

  • தொடங்கியவர்

தனக்கு கொஞ்சநேரத்தில இவ்வளவுதான் சொல்ல முடிஞ்சுதாம் எண்டு கிழவன் சொல்லச்சொன்னார் பொய்கை. கிருபா தம்பியிண்ட கேள்வியும் நியாயமானதுதானாம் எண்டு கிழவன் சொல்லச்சொன்னார்.

நன்றி!

கனடாக்க்கிழவன் இடம்பெயந்து இங்கை வந்திட்டார் போல...

கனடா கிழவனிடன் சொல்லுங்கள், கதை போல சொல்லாமல் கட்டுரையாக, இருக்கும் நகைச்சுவையை குறையாமல் சொல்ல சொல்லுங்கோ....!! அல்லது நாடக வடிவில் ஒலியாக வெளிட்டால்தான் இது எல்லாரையும் போய் சேரும்...!!

அது கூட இருக்கும் ஒண்றோடு போட்டி போல வந்துவிடுவதால் சங்கடமாக இருக்கும்... இதே விடயம் வேறு முறையில் போக வேண்டும்...

Edited by தயா

பாராட்டுகள் கனடா கிழவன்.. கனடாவில் நடப்பதைமட்டுமல்ல, ஐரோப்பாவில் நடைபெறுவதையும் சொன்னதபோல இருக்கிறது. சிலவேலை எல்லா நாடுகளிலுலும் தமிழினம் வாழ்வதால் இந்த ஒற்றுமையோ அல்லது ஒரு தமிழனைப் பார்த்து மற்றவன் நகலெடுப்பதால் ஏற்படும் பிரச்சினையோ தெரியவில்லை..

ஒரு தேசியவாதியை எப்படி மட்டம்தட்டலாம் என்று பார்ப்பதிலேயே மற்றைய தேசியவாதி செயற்படுகிறாரோ எனும் போக்கீலேயே பற்பல விடயங்கள் வெளிநாடுகளில் நடந்துகொண்டிருக்கின்றன. சிலவற்றை சில தேசியவாதி என்று கூறுவோரது வாய்மொழியாகவே செவியேற்றிருக்கிறேன்.

இவற்றைப்பற்றி விரிவாக எழுதினால் களத்தில் தப்புமா என்பதும், அப்படித் தப்பினால் களம் தப்பபிப்பிராயத்திலிருந்து தப்புமா என்பதும் கேள்விக்குறியே..!!

முரளி! உங்களுக்கு தனிச் செய்தி அனுப்ப முயன்றேன்.. முடியயவில்லை. எவ்வாறு தங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதை அறியத் தாருங்கள்!!

  • தொடங்கியவர்

தம்பி தயாவுக்கு, சகோதரம் சோழியனுக்கும் கிழவன் தனது நன்றிய சொல்லச்சொன்னார். மற்றது...

உந்த சின்னப்பெடியங்கள் சும்மா கிக் ஏத்திவிட கண்டதையும் கதைச்சு கடைசியில தனக்கு கட்டையில போற நேரத்தில வில்லங்கம் ஏதும் வரப்போகிதோ எண்டு இப்ப கிழவன் கொஞ்சம் பயப்படுறனாம் எண்டும் சொல்லச்சொன்னார்.

சோழியன் மாமா, உங்களிண்ட எம்.எஸ்.என் முகவரிக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறன் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.