Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி

* வன்னியில் நீண்ட போர் அரங்கில் பாரிய சமர் இப்போது நடைபெறுகிறது. அந்தப் போர்க்களம் மாற்றம் கண்டு வருகிறது. அரச படைகளுக்கு பாதகமான காட்சி மாற் றம் வெளியே தெரிவதற்கு சில காலம் பிடிக் கலாம்.

* இந்திய அரசு, புலிகளுக்கு எதிராக வும் தமிழர் விடுதலைப் போருக்கு எதிரா கவும் மறைமுகப் போரை நடத்தியே வருகிறது.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் புதினம்' இணையத் தளத்துக்கு வழங் கிய நீண்ட பேட்டியில் தெரிவித்திருக் கிறார்.

இலங்கை அரசாங்கம் நடத்தும் பரப் புரைகள் பொய்யானவை என்றும் அவர் தமது பேட்டியில் விளக்கமாகத் தெரிவித் துள்ளார்.

பேட்டியின் விவரம் வருமாறு:

கே: களமுனைகளில் புலிகளுக்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருவ தாக அரசு பிரசாரம் செய்து வருகின்றது. உங்கள் தரப்பிலிருந்து தகவல்களை அதி காரபூர்வமாகப் பெறுவதில் ஊடகங்கள் கடினப்படுகின்றன. உண்மையான கள நிலைமைகளை விளக்க இயலுமா?

ப: பொய்யும் புனைக்கதைகளும் தான் அரசின் பரப்புரைப் போரின் முது கெலும்பாக உள்ளன. போர் நடைபெறும் போது முதலில் சேதப்படுவது உண்மை தான் என்றொரு அனுபவ வாக்கியம் உண்டு. தமிழ் மக்கள் மீதான இனப்படு கொலையை அட்டூழியங்களை மறைப் பது போலவே போர்க்களத்தில் படைகள் சந்திக்கும் இழப்புக்களையும் தோல்வி களையும் அரசு மறைத்து வருகின்றது. அதேவேளை, புலிகளின் இழப்புக்களைப் பெருமளவு மிகைப்படுத்திக் கூறிப் பிர சாரம் செய்வ தும் சிங்கள அரசின் வழமை யாகி விட்டது.

முன்னர் "லங்காபுவத்' என்றொரு செய்தி நிறு வனத்தை இயக்கிய அரசு அப்போது செய்துவந்த படுமோசமான பொய்ப் பிரசாரத்தில் அந்தச் செய்தி நிறுவனம் கீர்த்தி இழந்து இறுதி யில் காணாமல்போய்விட்டது. தமிழ் அகராதியில் பொய் என்பதற்கு ஒத்த சொல்லாக "லங்காபுவத்' என்று கூறுமளவுக்கு அந்தச் சிங்களச் சொல் திரிபடைந்து கிடக்கின்றது.

வன்னிப்போரில் புலிகள் சந்திக்கும் ஆள் இழப்புத் தொடர்பாகத் தற்போது இராணுவத்தரப்பு நாள்தோறும் வெளியிட்டுவரும் எண்ணிக்கை விவரத்தைக் கூட்டிக்கணக்கிட்டால், கற்பனைக் கணக்கு அம்பலமாகும். இந்த எண்ணிக்கைகள் தொடர்பாகக் கேலி பேசி அரச தரப்பைக் கிண்டலடித்து கொழும்பின் இராணுவ ஆய்வாளர் ஒருவர் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஒன்றும் அண்மையில் வெளிவந்திருந்தது.

இராணுவச் செய்திகளில் மட்டுமல்ல அரசியல் விடயங்களிலும் சிங்கள அரசு நேர்மையற்ற வகையில் பொய்ச் செய்திகளையே வெளியிட்டு வருகின்றது. தமிழர் மீது மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லை, தமிழர்களை இன அழிப்புச் செய்யவில்லை என்றே சிங்களத் தலைவர்கள் கருத்துக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையே இல்லை என்றும் கூறுகின்றார்கள்.

சிங்கள அரசின் இத்தகைய பரப்புரையில் உண்மைகள் இல்லை என்று தெரிந்திருந்தும் சில உலக ஊடகங்கள் இந்தப் பொய்ச்செய்திகளை ஒலிபரப்புகின்றன என்பது வேதனையான உண்மையாகும்.

போர் தீவிரமாக நடைபெறுவதனால் தொடர்பாடல் வழிகள் சிரமத்திற்கு உள்ளாவதால் உலக ஊடகங்களுடன் நாம் உடனடியாகத் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. இதைச் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றது.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.