Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணலாற்றில் பல பரீட்சை

Featured Replies

தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது.

கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

மணலாறு போர் அரங்கில் படையினர் தாக்குதலகளைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்தே இந்தப் பேட்டியை வழங்கியிருந்தார். கடந்த ஜனவரி மாதம் மணலாறு போர் அரங்கில் புதிதாக உருவாக்கபட்;ட 59 ஆவது டிவிசனைக் கொண்டு தாக்குதல்களை ஆரம்பிக்கப்பட்டன. சரத் பொன்சேகாவின் நேரடி கண்காணிப்பில் வன்னி படைத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தலைமையில் இந்தப்படை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.(தற்பொது ஜெகத் ஜெயசூரிய விசேட விடுப்பில் இருப்பதால் பதில் வன்னிப் படைத்தளபதியாக இராணுவத் தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு பொது அலுவலர் எல்.ஏ.டி. அமரதுங்க பணியாற்றி வருகிறார்.)

இந்தப் போர் அரங்கு கொக்குத் தொடுவாய் முதல் கிரிபன்வௌ வரையான 14 கி.மீ. நீளமான பிரதேசத்தைக் கொண்டிருக்கின்ற போதும், கிழக்கே ஜனகபுர முதல் மேற்கே கிரிபன்வெவ வரையான 11கீ.மீ பகுதிகளிலேயே தீவிர நகர்வு முயற்சிகள் இடம் றெறு வருகின்றன. 59 ஆவது டிவிசனின் தளபதி நந்த உடவத்தவே இந்தப் போர் அரங்கில் படையினரை வழிநடத்துகிறார்.

இந்தப் போர் அரங்கில் படையினரின் முன்னகர்வுகள எந்தக் கட்டத்தில் இருக்கின்றன? இதனால் முல்லைத்தீவில் உள்ள புலிகளின் தளங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகுமா? என்பன குறித்து இப்பத்தியில் பார்க்கலாம்.

படைத்தரப்பு அண்மை நாட்களாக வெளியிட்டு வரும் தகவல்களைப் பார்க்கின்ற எவருமே மணலாறு போர் அரங்கில் படையினர் பெருமளவு பிரதேசத்தைக் கைப்பற்றி முன்னேறியிருக்கின்றனா என்பது போலவும், முல்லைத்தீவை படையினர் நெருங்கிவிட்டதைப் போலவும் இருக்கின்றன. மணலாறு போர் அரங்கில் படையினர் சில பிரதேசங்களைக் கைப்பற்றியிருபதும் முன்னேறியிருப்பதும் உண்மையே. அனால் அது இப்போதைக்கு முல்லைத்தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவிற்க்குச் சென்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியின் மேற்கு முனைகளில் படைத்தரப்பு 57, 58ஆகிய இரண்டு டிவிசன்களுடன் புதிகதாக 61 மற்றும் அதிரடிப்படை-2 என நான்கு டிவிசன்களைக் களம் இறக்கித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலயில், சத்தமில்லாமல் மணலாறு போர் அரங்கின் குறிபிட்ட பிரதேசத்தைக் கைப்பற்றிவிட படைத்தரப்பு எத்தனித்து வருகிறது.

கல்யாணபுரவுக்கு வடக்கே உள்ள கிரிபன்வெவவில் இருந்து வடக்கே வேலன் குளம் நோக்கி லெப்.கேணல் மனிஷ் சில்வா தலைமையிலான 59-2 பிரிகேட்டும், பரக்கிரமபுரவில் இருந்து வடக்கே நித்தியகுளம நோக்கி லெப்.கேணல் பாலித பெர்னாண்டோ தலைமையிலான 59-3 ஆவது பிரகேட்டும் (தற்பொது பதில் கட்டளை அதிகாரியாக லெப்.கெணல ஜாலிய சேனாரத்ன பணியாற்றுகிறார்.) ஜனகபுரவில் இருந்து வடக்கே ஆண்டான்குளம் நோக்கி லெப்.கேணல். அருண ஆரியசிறி தலைமையிலான 59-1 ஆவது பிரிகேட்டும் முன்னேறி வருகின்றன.

கிரபன்வெவ களமுனையில் 59-2 ஆவது பிரிகேட் துருப்புக்கள்; இதுவரையில் சுமார் 7 கீ.மீ வரையான பிரதேசத்துக்குள் முன்னேறியிருப்பதாகவும், ஜனகபுரவில் இருந்து முன்னேறிய படையினர் 3கீ.மீற்றருக்கும் சற்று அதிகமாக முன்னேறியிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5மாதங்களாக நடந்து வந்த இந்தப் போர் அரங்கச் சமர்களில் இந்த மாதத் தொடக்கத்தில் ஜனகபுரவுக்கு மேற்காகவுள்ள 'முன்னகம' என்ற புலிகளின் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்த தளம் ஒன்றை முதன் முறையாகக் கைப்பற்றியிருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. இதைக் கைப்பற்றியது 59-1 ஆவது பிரிகேட் ஆகும்.

தற்போது 59-3 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த படையினர் நித்தியகுளத்தில் அமைந்திருக்கும் புலிகளின் பிரதான தளத்தைக் கைப்பற்றும் நோக்கில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படையினர் பெருமெடுப்பல் நித்தியகுளம் அனைக்கட்டுக்கு தெற்கேயிருந்து முன்னேற முற்பட்டனர். நித்தியகுளத்தில்; புலிகளின் வன்-போ(1-4) என்ற தளம் உள்ளது. இந்தத் தளம் இந்தியப்படையினருக்குப் பெரும் சவாலாக இருந்ததொன்று. புலிகளின் தலைவர் பிரபாகரன் இங்கிருந்து தான் இந்தியப்படைகளுக்கு எதிரான யுத்தத்தை வழிநடத்தினார். எனவே பிரபாகரனைப் பிடிக்கும் நோக்கில் இந்தியப் படைகள் 'செக்மேற' என்ற பெயரில் மூன்று தடவைகள் பாரிய தாக்குதல்களை நடத்திய போதும் பெரும் இழப்புகளுடன் பின்வாங்க நேரிட்டது.

இந்தத் தளத்தைக் கைப்ற்ற 1991 ம் ஆண்டில் 'ஒப்பரேசன் மின்னல்' என்ற பெயரிலும் 1992 ல் 'கயபகர' என்ற பெயரிலும் டென்சில் கொக்பேகடுவ இரண்டு பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். முதலாவது தாக்குதல் 30 நாட்கள் வரை நீடித்தது. கஜபாபுரவில் இருந்து நித்தியகுளம் நோக்கி நடத்தபட்ட இந்தத் தாக்குதலுக்கு அப்போது 'சுயாதீன பிரிகேட்டின் தளபாதியாக இருந்த டென்சில் கொப்பேகடுவ தலைமை தாங்கியிருந்தார். அரவரது பிரதித் தளபதியாக இருந்தவர் அப்பொது கேணல தர அதிகாரியாக இருந்த சரத் பொன்சேகா ஆவர்.

இந்தத் தக்குதலில் புலிகளின் சில தளங்களைப் பிடித்த போதும் படையினர் அங்கு நிலை கொள்ள முடியாமல் பின்வாங்கியிருந்தனர். இப்போது மீண்டும் இந்த இலக்கு நோக்கி படையினரை சரத் பொன்சேக வழி நடத்தி வருகிறார். நித்தியகுளத்தில் இருந்து தெற்காக படையினர் நிலை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனால் புலிகள் தமது வன்-போ தளத்திற்கு தெற்கே சுமார் 200 மீற்றர் அகலத்துக்கு காடுகளை வெட்டி பாரிய வெளியொன்றைத் தோற்றுவித்துள்ளனர். இந்த வெளியை கடந்து வன்-போ தளத்தை அடைவதே படையினருக்குப் பெரும் சவாலகா உள்ளது. இந்தப் பகுதியில் பெருமளவில் பொறிவெடிகள் காணப்படுவதுடன், மோட்டார்கள், ஆட்டிலறிகள் மூலம் சுலபமாகக குறிவைக்கக் கூடிய வகையில் புலிகள் ஆள்கூறுகளைக் கவனித்து வைத்துள்ளனர்.

கடந்த 8ம திகதி இந்த வெளியைக் கடந்து சென்று 'வன்-போ' தளத்தைக் கைப்ற்றும் நோக்கில் 59-3 ஆவது பிரிகேட்டைச் சோந்த இரு பற்றாலியன்கள் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.

லெப்.கேணல் பிரிந்த பெரேரா தலைமையிலான 7 ஆவது கெமுனு வோச் மற்றும் மேஜர் லக்சிறி பெரேரா தலைமையிலான 14வது விஜயபா காலாற்படை என்பனவே இந்தத் தாக்குதலில் பங்குபற்றியிருந்தன. படையினர் இந்த வெளியைக் கடக்க முற்பட்டபோது புலிகள் உக்கிரமாக தாக்குதலை நடத்தினர். இதனால் படையினர் பின்வாங்கினர். இரண்டு நாட்கள் வரை இந்த மோதல் நீடித்தது.

கடந்த ஞாயிறு மட்டும் 07 படையினர் கொல்லபட்டு 19 பேர் காயமுற்றதாகவும் ஒரு சிப்பாய் காணமற் போனதாகவும் படைத்தரப்பு அறிவித்தது. ஆனால் புலிகளோ 15 படையினர் கொல்லப்பட்டு 20 பேர் காயமுற்றதாக தெரிவித்திருந்தனர். அத்துடன் ஆர்.பி.ஜி. ஒன்று உட்பட பல வெடிபொருட்களையும் தளபாடங்களையும் கைப்பற்றியதாகத் தெரிவித்திருந்தனா, ஆனால் 'வன்-போ' தளத்தின் 5 காவல் நிலைகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், தளத்தையே கைப்பற்றி விட்டதாகவும் கூட படைத்தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

ஆண்டான்குளம், நித்திக்குளம் காட்டுப் பகுதிகள் இப்போது முக்கிய சமர் அரங்காக மாறியிருக்கிறது.

புலிகள் மணலாறு களமுனையில் முன்னரங்க நிலைகளுக்கு விநியோகங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொக்குத்தொடுவாயில் இருந்து தண்ணிமுறிப்புக்குளம் வரை அமைத்திருந்த வீதியின் ஒரு பகுதியை ஜனகபுரவுக்கு வடக்கே படையினர் கைப்பற்றி, விநியோகத்தைத் துண்டித்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாகப் படையினர் ஆண்டான்குளம் காட்டுப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் நித்திகுளத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ள குமுழமுனையை நோக்கி படைநகர்வு இடம் பெறலாம் எனக் கருதப்படுகிறது.

குமுழமுனை நேக்கிய நகர்வுகள் நாயாறு வரை விரிவுபடுத்தப்பட்டால் புலிகளின் கடல்வழி போகுவரத்து மற்றும் விநியோகங்களை மட்டுபட்டுத்தலாம் எனப் படைத்தரப்பு கருதுகிறது. ஆனால் புலிகள் படையினரின் திட்டத்துக்கமைய விட்டுக் கொடுப்பார்களா என்று தெரியவில்ல. இந்தப் போர் அரங்கில் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் சொர்ணத்தின் தலைமையில் முறியடிப்புத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்னரங்க நிலகளில் உள்ள போரளிகளுக்கு மேலதிகமாக இந்த போர் அரங்கில் 500 மேலதிக ஒதுக்குப் படையினரையும் புலிகள் நிறுத்தி வைத்திருப்பதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

'ஜயசிக்குறு' காலத்தில் படையினர் மணலாற்றிலிருந்து முன்னகர்ந்து நெடுங்கேணியைக் கைப்பற்றியதுடன் பின்னர், ஒட்டிசுட்டான் வரை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விஸ்தரித்திருந்தனர். ஆனால் அப்போதும் கூட புலிகளின் தiமை முல்லைத்தீவில் பாதுகாப்பாக இருந்து கொண்டே 'ஓயாத அலைகள் -3' படை நடவஎக்கையையும் 'ஜயசிக்குறு' முறியடிப்புத் தாக்குதல்களையும் வழிநடத்தியிருந்தது.

மணலாரை புலிகள் இதயபூமியாகக் கருதபவர்கள். அதன் முக்கியத்துவத்தைப் புலிகள் வெகுவாக உணர்நதிருப்பதால் படையினருக்கு உச்சக் கட்டமான எதிர்பைக் காண்பிப்பதுடன் அவர்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தவும் முற்படுவர்.

எனவே மணலாற்றல் இருதரப்பும் செய்யும் உக்கிர சமர்கள் எதிர்வரும் நாட்களில் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இதில் எந்தத் தரப்பு தமது பலத்தை நிரூபித்துக் கொள்ளப் போகிறதென்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆக்கம் -சுபத்ரா

நன்றி வீரகேசரி

பொருத்திருந்து பார்த்து தீர்ப்புக்கூற இங்க என்ன பட்டிமண்றமா நடக்குது?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை போர் நடக்கிறது என்ற படியால் முடிவுக்கு பொறுத்திருக்க தான் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.