Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம்

Featured Replies

மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம்

[புதன்கிழமை, 18 யூன் 2008, 06:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

மன்னார் நகருக்கு அண்மையில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகம் உள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் காவலரண் மீதே இத்துணிகரத் தாக்குதல் இன்று புதன்கிழமை அதிகாலை 2:10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.

"இத்தாக்குதலுக்கு புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இன்று காலை முதல் மன்னார் நகரம் முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டு தப்பியோடிய புலிகளைத் தேடும் பணி நடைபெறுகின்றது" என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புலிகளின் கைக்குண்டுத் தாக்குதலையடுத்து படையினர் அச்சத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடமாக இடைவிடாத துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். இதனால் மன்னார் நகரம் இன்று அதிகாலை பெரும் பரபரப்பானது.

படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டினால் அப்பகுதியில் இருந்த மக்களின் வீடுகளில் துப்பாக்கி வேட்டுக்கள் துளைத்துள்ளன. அத்துடன் பல வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியுள்ளன.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவரின் சடலம் மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 காவல்துறையினரும் மன்னார் மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதினம்

மன்னார் நகரில் கேந்திர இராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்

*மக்கள் மத்தியில் பெரும் பதற்றம்

மன்னார் நகரின் மத்திய பகுதியில் உள்ள விளையாட்டு அரங்குடனிருக்கும் இராணுவ காவல் நிலைகள் மீது நேற்று புதன்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தத் தாக்குதலில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

நகர மத்தியிலுள்ள விளையாட்டரங்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர். இந்த விளையாட்டரங்கைச் சூழ பல காவலரண்கள் உள்ளன. இவற்றின் மீதே நேற்று அதிகாலை 2.05 மணியளவில் புலிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடுகள் கைக்குண்டுத் தாக்குதலையடுத்து படையினரும் கடும் பதில் தாக்குதலை நடத்தவே இரு தரப்புக்குமிடையே கடும் மோதல் நடைபெற்றுள்ளது.

விளையாட்டரங்கிற்கு முன்பாகவுள்ள ஆட்களற்ற வீடுகளினுள்ளிருந்தே படையினர் மீது இந்தத் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நகரின் சகல பகுதிகளிலுமுள்ள படைமுகாம்கள், காவலரண்கள், பொலிஸ் நிலையங்கள், வீதிச் சோதனை நிலையங்களிலிருந்து தொடர்ச்சியாக 45 நிமிட நேரத்திற்கு அகோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் நகரும் புறநகர்ப் பகுதியும் அதிர்ந்தன. மக்கள் பெரும் அச்சமடைந்து செய்வதறியாது திகைப்படைந்தனர்.

இதன் பின் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் அடங்க அப்பகுதிக்கு மேலதிக படையினர் விரைந்ததுடன் அப்பகுதி முழுவதையும் படையினர் சுற்றிவளைத்தனர்.

இந்தத் தாக்குதலில் நான்கு படையினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளில் இராணுவச் சிப்பாய் அங்கு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்தத் தாக்குதலில் ஒரு சிப்பாய் இறந்ததுடன் ஒரு கான்ஸ்டபிளே காயமடைந்ததாகப் படைத்தரப்பு தெரிவித்தது.

இந்த மோதலையடுத்து விளையாட்டு அரங்கு ஊடான சகல போக்குவரத்துக்களும் காலை 10 மணி வரை நடைபெறவில்லை. அதற்குப் பின்னரே அந்தப் பகுதி வழமைக்குத் திரும்பியது.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளிக்கிழமை. நீங்கள் நேற்று வியாழன் வந்த தினக்குரல் செய்தியை இணைத்திருக்கிறீர்கள். தினக்குரலில் முதல் நாள் செய்தியாக அதாவது புதன்கிழமைச் செய்தியினை இப்பொழுது புதிய தலைப்பில் இணைக்கும் போது இன்று விடுதலைப்புலிகள் மன்னாரில் தாக்குதல் நடத்தியதாக எண்ணி ஒடி வந்து செய்தி பார்த்தேன். தொடர்புடைய செய்தி புதன்கிழமையே யாழில் வேறு ஒரு தலைப்பில் வந்திருந்தது. இப்படியான தாக்குதல் செய்திகளை ஒரே தலைப்பின் கீழ் , அதாவது ஏற்கனவே இணைத்த தலைப்பில் இணைத்தால் நன்றாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.