Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழருக்கெதிராக இந்தியா தொடர்ந்தும் துரோகம் இழைக்கிறது - வைக்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைக்கின்றது: வைகோ குற்றச்சாட்டு

[திங்கட்கிழமை, 23 யூன் 2008, 07:52 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று திங்கட்கிழமை (23.06.08) அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்குப் பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, சிறிலங்கா அரசு மற்றும் அதன் இராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் வெளிப்படையான இரகசியமான நயவஞ்சகமான கண்டிக்கத்தக்க செயல்களால் அது மேலும் தெளிவாகத் தெரிய வருகிறது.

2008, ஜூன் 20 ஆம் நாள் வெளியுறவுச் செயலாளர் திரு.சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்புச் செயலாளர் திரு.விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக் குழு, சிறிலங்கா அரசுடன் இருதரப்புச் செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.

அங்கு சென்ற இந்தியக் குழு, அந்நாட்டு அரச தலைவர் திரு.மகிந்த ராஜபக்சவையும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.கோத்தபாய ராஜ்பக்சவையும், அதிபரின் செயலாளர் திரு.லலித் வீரதுங்க அவர்களையும் சந்தித்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. அவர்களின், பயணம் ஒரு பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா அரச தலைவர் அலுவலகத் தரப்பில் ஆதாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியில், வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இங்கு வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழு இலங்கைத் தீவின் பாதுகாப்பு அம்சங்கள், வடக்குப் பகுதியில் எல்.டி.டி.ஈ.க்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவத் தாக்குதல், வடமேற்கு இலங்கைக் கடற்பகுதியில் ஊடுருவும் இந்திய மீனவர்கள் பிரச்சினை, மேலும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்புவில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாடு தொடர்பான செய்திகள் உள்ளடக்கிய பல்வேறு செய்திகளையும், பிரச்சினைகளையும் விவாதிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பூர்வீகத் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டும் வரும் சிறிலங்கா இனவாத அரசுக்கு இந்த அரசு செய்யும் எல்லாவித இராணுவ உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென்று நேரிலும், கடிதம் மூலமாகவும் நான் மீண்டும், மீண்டும் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது, சிறிதும் அக்கறையின்றி பொறுப்பற்ற முறையில் தூக்கி வீசப்படுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004 ஆம் ஆண்டில் இந்திய - சிறிலங்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும்- இந்திய அரசு, சிறிலங்கா அரசுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளபாடங்களையும் வழங்கி அந்நாட்டு இராணுவம் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை செய்வதற்குண்டான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி புதினம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை அழிக்க முயலும் இந்திய அதிகாரிகள்: வைகோ

சென்னை: இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க முயலும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு இந்திய அதிகாரிகள் துணை போகிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு, குறிப்பாக இலங்கையில் வாழும் பூர்வீகத் தமிழர்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்து உள்ளது என்பது, இலங்கை அரசு மற்றும் அதன் ராணுவ அதிகாரிகளின் அறிக்கைகளால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

20-6-2008 அன்று வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு செயலாளர் விஜயசிங் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக்குழு, இலங்கை அரசுடன் இருதரப்பு செய்திகளையும் கலந்தாலோசிப்பதற்காக கொழும்பு சென்றடைந்ததாக இந்தியாவிலும், இலங்கையிலும் செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்திய அரசு இலங்கை விமானப்படைக்கு ராடார் கருவிகளை கொடுத்ததன் விளைவாக, அந்நாட்டு விமானப்படை குண்டு வீசித்தாக்கி அப்பாவித் தமிழர்கள் பலர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டார்கள். அத்தாக்குதலில் செஞ்சோலை படுகொலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழர்களின் குருதி தோய்ந்த கரங்களோடு இந்தியா வந்த இலங்கை அதிபரையும், அந்நாட்டு அமைச்சர்களையும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து வரவேற்றது மாபெரும் தவறு என்று இந்திய அரசை நான் குற்றம் சாட்டுகிறேன்.

மிகக் குறைந்த வட்டியான 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலரை இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கடனாக வழங்கியதால், அவர்கள் அந்தப் பணத்தை கொண்டு பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கிக் குவித்து அதனால் தமிழினத்தையே அழிக்க முற்படுகிறார்கள். அதற்கு இந்திய அரசு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கியும், கொலை செய்தும் வருவதை இந்திய அரசு காக்க வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டுகிறேன். போதாதென்று, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல இந்திய அதிகாரிகளின் உயர்மட்டக்குழு தமிழக மீனவர்களின் பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்துக் கொண்டு இருக்கிறது.

இந்திய கடல் நீர்ப்பரப்புக்கு அருகில் சர்வதேச நீர்பரப்பில் கடலுக்கு அடியில் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்க இலங்கை அரசுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது, இந்திய இறையாண்மையை மாற்றாருக்கு அடகு வைத்த செயலாகும் என்று இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கை வாழ் தமிழர்களுக்காக தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு அளிப்பதற்கு அனுமதி மறுத்ததன் மூலம் இந்திய அரசு மனிதாபிமானத்தை ஆழ்கடலில் புதைத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறேன்.

பண்டித ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோரது தொலைநோக்கு பார்வையால் தோற்றுவிக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க உறுதி பூண்டு செயல்படும் இனவாத இலங்கை அரசுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள 3 இந்திய அதிகாரிகளும் துணை போகிறார்கள் என்று மிகுந்த வேதனையோடு குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தீவில் அந்நாட்டு அரசால் உயிரிழக்கும் தமிழர்களின் உயிருக்கு, இந்திய மக்கள் மன்றத்திலே பொறுப்பேற்கவும், பதில் சொல்லவும் கடமைப்பட்டிருப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுமே ஆகும் என்று குற்றம் சாட்டியுள்ளார் வைகோ.

-தற்ஸ் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.