Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. விக்கிரமபாகு

Featured Replies

இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்பதை இந்தியா தற்போது உணர்ந்துள்ளது. அதனால் தான் தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் :

நடைபெற இருக்கின்ற சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தலில், எமது கட்சி போட்டியிடுகின்றது. சப்ரகமுவ மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சமில் ஜெயநெத்தியும், வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக குணசேன விஜயசிங்கவும் போட்டியிடுகின்றனர்.

இந்த அரசு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒரு பக்கத்தில் யுத்தத்தை முன்னேடுத்து தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை அழிப்பதற்கு முயல்கிறது. மறுபக்கத்தில் ஏகாதிபத்திய நலன் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து நாட்டை பேரழிவுக்குள் தள்ளுகிறது. இன்று நாடு அடைந்து இருக்கும் பின்நிலைக்கு அரசு எண்ணெய் விலை ஏற்றத்ததையும், யுத்தத்தையும் காரணமாக கூறுகிறது.

உண்மையில் எண்ணெய் விலை ஏற்றம் சிறு அளவேயாகும். யுத்தமே நாட்டின் பொருளாதாரம் மோசமடைய பிரதான காரணியாயுள்ளது.

அரசுக்கு ஆயுதங்களை வழங்கி கடல் பாதுகாப்பை வழங்கி எவ்வளவோ உற்சாக முயற்சிகள் செய்த இந்தியா, தற்போது இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெறாது என்று உணர்ந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே தீர்வு யோசனைகளை முன்வைக்குமாறு அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.

விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவு உண்டு என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணத்தினாலேயே இந்த அரசு யுத்தத்தில் வெற்றி பெற முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே, இத்தகைய பாரிய பின்னடைவை மறைக்கவே தேர்தல் பூச்சாண்டியை தென் இலங்கை மக்களுக்கு அரசு காட்ட முயல்கிறது.

ஜே.வி.பி.யினர் அவசர காலச்சட்டதத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு தொழிலாளர்களை போராட்டத்திற்கு வருமாறு அழைக்கின்றனர்.

இந்த அவசர காலச் சட்டத்தின் துணையுடன் தான் அரசு உயிர் வாழ்கின்றது என்பதை அவர்கள் முதலில் உணர வேண்டும்

எது எப்படி இருந்தாலும் தொழிலாளர் வர்க்கப் போரர்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பு என்றும் உண்டு.

த.தே.கூட்டமைப்புடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தை ஆரோக்கியமானதாக உள்ளது. அவர்களும் தொழிலாளர் வர்க்க போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க முன் வந்துள்ளனர். இத வரலாற்று திருப்பு முனையாகும்.

நன்றி வீரகேசரி

எப்படி எல்லாம் விக்கிரமபாகு கத்தினாலும் மகிந்தமாமா கேக்க மாட்டார்... அவரால கேக்கேலாத சூழ்நிலையில்தான் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

:wub: இந்த விக்கிரமபாகு கருணாரத்ன ஒரு வித்தியாசமான சிங்களவர். தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று நெடுங்காலமாகவே குரல் கொடுத்து வருபவர். அவரை ஓறிருமுறை மகரகமைக்குச் சென்றபோது பார்த்திருக்கிறேன். சனம் கூடும் சந்தைப்பகுதி ஒன்றில் ஒலிபெருக்கி ஒன்றின் உதவியுடன் ஒரு வாகனத்தின் மேல் நின்று தமிழருக்கு நியாயம் கேட்டுப் பேசிக்கொண்டிருந்தார். அவரின் வாகனத்தைக் கடந்து போன எந்தச் சிங்களவரும் அவரையோ அல்லது அவரது உரையையோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து எமக்காக குரல் கொடுத்ததைப் பார்த்த போது நாம் அவரைக் கை விட்டு விட்டோமே என்ற ஆதங்கம் தான் எனக்கு ஏற்பட்டது.

அவரின் இந்தத் தமிழர் சார்பு நிலைப்பாடுதான் அவருடன் இருந்த இன்னொரு தொழிற்சங்க வாதியான வாசுதேவ நாணயக்காரவை அவரை விட்டு அகலச் செய்ததாக இன்றும் கூறும் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த மனிதருக்கு நாங்கள் செய்த கைம்மாறு என்ன? அவர் மேல் மாகணத்தில் தேர்தலில் நின்ற போது நாம் எல்லோரும் ஐக்கியதேசியக் கட்சியிலும் பொதுசன ஐக்கிய முன்னணியிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு வோட்டுப் போட்டு எமது தமிழர் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டோம். எமக்காகக் குரல் கொடுத்த அந்த ஒற்றைச் சிங்களவரைத் தெரிந்தே தோற்கடித்தோம்.

நாம் எமக்காகக் குரல் கொடுக்கக் கூடிய எவருக்கும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமை. நாம் கேட்காமலேயே எமக்காக அவர்கள் செய்யும் சேவை அளப்பரியது ! செய்வோமா ?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.