Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் கொடூரம் தொழிலாளர்களை நிர்வாணமாக்கி மின்சார அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி நாளேடு 6/27/2008 9:50:54 PM -

மலேசியாவிற்கு தொழில் நோக்கங் கருதி செல்லும் தமிழர்களை நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சார அதிர்ச்சியளிக்கும் கொடூரம் நிகழ்வதாக மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து மலேசியாவில் தமிழர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்த சட்டத்தரணி ஆர்வலன் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தமிழர்களை பாதுகாக்கத் தக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதழியல் சார்ந்த அமைப்புகள் சார்பில் நேற்று தமிழக தொழிலாளர்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் ஒன்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி சித்திரவதைகளுக்காளாகியுள்ள நிலையில் தப்பியோடி வந்த புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கூறியதாவது ஹோட்டல் ஒன்றில் ஒன்றரையாண்டுகளாக வேலை செய்தேன். முதல் மாதம் மட்டுமே ரூ.6800 சம்பளம் கொடுத்தார்கள். பின்னர் 9 மாதங்களாக சம்பளமேயில்லை. எனினும் ஓய்வின்றி தினமும் 14 மணத்தியாலங்கள் வேலை செய்தேன். இந்நிலையில் ஒரு வழியாக பொலிஸில் புகார் செய்தேன். விசாரணைகளுக்குப் பின் ஹோட்டல் உரிமையாளர்கள் இரு மாதங்களில் ஊருக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.

பின்னர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி அடித்துத் துன்புறுத்தினர். மீண்டும் பொலிஸில் புகார் செய்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற நிலையில் மௌனமாக ஒரு வாரத்தை போக்கினேன். அதனைத் தொடர்ந்து ஒரு நாள் அதிகாலை 4 மணிக்கு சாக்கடை கால்வாய் ஒன்றில் பதுங்கியிருந்து பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து தப்பிப் பிழைத்து பினாங் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து ஊர் திரும்பு கையில் பணம் இருக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் சிலரை தொடர்பு கொண்டதன் விளைவாக ரூ.25,000 பெற்றுக் கொண்டேன். நண்பர்கள் சிலரும் ரூ.7,000 கொடுத்து என்னை ஊருக்கு அனுப்பி வைத்தனர் என கண்ணீர் மல்க கூறினார்.

உலகத்தமிழர்களின் கதி கருணை நிதியவர்களின் கருப்புக்கண்ணாடிகுள்

ஆடி அடங்கிவிட்டது.....

கேட்பாரில்லாத நாதியற்ற இனமே .....

உன் கதி அக்கதி தான்...

இப்படியே வேறு நாட்டு அல்லது வேற்று இனத்தவறிற்கு நடந்து இருந்தால்?

தமிழ் நாட்டு மீனவர்களின் உயிர் நாளூ ம் குடிக்கப்படுகிறது....

ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாக அழிக்கப்ப்படுகிறர்கள்.....

கறுப்ப்க்கண்ணாடி எம் ஜீ ஆரும் தான் அணிந்தார்.....?

அவருக்கு இருந்த இருமாப்பு எங்கே?

இதைவிட கொடுமை ஜெயிலில் ஆசனவாயிலில் குழாய் அடித்து பின்பு அதனால் கஞ்சா அடைத்து உலாவ விடுவார்களாம். என்னுடைய நண்பன் ஒருவன் அனுபவித்து பாவம் தற்போது பிரித்தானியாவில் வாழ்கின்றான். ஓன்றரை வருடங்கள் ஜெயிலில் இருந்தான். கொடுமை சொல்ல முடியாத அளவிற்கு இருக்குமாம்.

மலேசியாவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது கவலைக்குரியதே.. இந்த சம்பவங்கள் நடக்க காரணமானவர்களும் தமிழர்களே என்பதுதான் இன்னும் வேதனை. அரசாங்கமும் வெளிநாட்டவரை/ தமிழரை கண்டு கொள்வதும் குறைவு..!

என்னையா கொடுமையா இருக்கிது. :wub::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.