Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணலாற்றில் வன் - போ முகாம் என்று ஒன்றில்லை - ஜானக பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் 1-4 தளம் மணலாறில் தற்போது இல்லை: ஜனக பெரேரா

[ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2008, 01:07 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]

சிறிலங்காப் படைத்தளபதிகள் கூறுவதனைப் போன்று விடுதலைப் புலிகளின் 1- 4 தளம் மணலாறில் தற்போது இல்லை. அது 1991 ஆம் ஆண்டில் ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ தலைமையில் நடைபெற்ற "இடிமுழக்கம்" படை நடவடிக்கையிலேயே அழித்தொழிக்கப்பட்டு விட்டது. புலிகளின் அந்தத்தளம் தற்போது இடம்மாற்றப்பட்டு விட்டது என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

மணலாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளம், கேந்திர தளம், செய்மதித்தளம், பயிற்சி தளம் என 14 தளங்கள் ஒன்றாக அமைந்த இடமே 1-4 தளம் எனப்படுகின்றது.

இந்திய அமைதிப்படை வடக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் அந்தத்தளம் பிரபாகரனின் பிரதான தலைமையகமாக விளங்கியது.

ஆனால், 1991 ஆம் ஆண்டில் நாம் மேற்கொண்ட "இடிமுழக்கம்" நடவடிக்கையில் அது முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. அந்த நடவடிக்கையில் நான் நடவடிக்கை பொறுப்பதிகாரியாகவும் இரண்டாவது பொறுப்பதிகாரியாக தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவும் பணியாற்றினோம்.

எமது அந்தத் தாக்குதலின் பின்னர் புலிகள் அந்தத் தளத்தை கிளிநொச்சிக்கோ ஒட்டுசுட்டான் பகுதிக்கோ மாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன்.

எமது தாக்குதலின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் அந்ததளத்தை நிர்மாணித்து அதுவும் ஜனகபுர, கஜபாபுர என்ற இரண்டு சிங்களக் குடியேற்றங்களுக்கு மத்தியில் - அதனை புலிகள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.

அமைதிப் பேச்சுக்கள்

விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக ஆயுதங்கள் களையப்படும் வரை அமைதிப் பேச்சுக்கள் சாத்தியமற்றவை. புலிகளின் கொடூரமான பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு சமனும் எதிருமான பதில் அளிக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் என்ற நாமம் ஒவ்வொருவரினது மனதிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தால் நல்லவையும் நடந்துள்ளன. கெட்டவையும் நடந்துள்ளன. உதாரணமாக கருணாவின் பிளவை குறிப்பிடலாம். இது முழு சிறிலங்காவுக்கும் நன்மை தந்த ஒரு விடயம்.

ஏதிர்மறையான விளைவுகள் என்றால், அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஆயுதக்கொள்வனவுகளை குறிப்பிடலாம்.

ஐக்கிய தேசியக்கட்சி எதிர்காலத்தில் ஆட்சி அமைத்தால் நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நான்தான் பொறுப்பாக பதவி வகிப்பேன். நாட்டின் பாதுகாப்பை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் இந்தக்கால கட்டப்பகுதியில் - விடுதலைப் புலிகளுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தியவன் என்ற வகையில் - புலிகள் எனக்கு இலக்கு வைத்திருப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், இவற்றுக்கெல்லாம் நான் அஞ்சுபவன் அல்லன்.

பிள்ளையான் குற்றவாளி

1990 ஆம் ஆண்டு கிழக்கில் 600 காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகக்கொடூரமானது. அதனை முன்னின்று செய்தவர்கள் கருணாவும் பிள்ளையானும் ஆகும். தற்போதைய அரசு அந்தப் படுகொலைகள் தொடர்பாக உண்மையிலேயே சிரத்தை கொண்டதனால் பிள்ளையானை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அதுதான் ஒரே ஒரு வழி என்றார் அவர்.

நன்றி புதினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.