Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தத்தை நீண்ட காலத்துக்குத் தொடர்வது கடினம் இலங்கை அரசுக்கு இந்தியா இப்படி நல்லுபதேசம்

Featured Replies

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் போன்றவை காரணமாக இலங்கை அரசு நீண்ட காலத்திற்கு இராணுவ நடவடிக்கையைத் தொடர்வது கடினமானது என இலங்கைக்கு வலியுறுத்திக் கூறியுள்ள இந்தியா, யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாறுவதைத் தவிர்ப்பதற்காகப் பேச்சு மூலமான அரசியல் தீர்வு குறித்து சிந்திக்குமாறும் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இலங்கை அரசு அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுள்ள இந்தியக் குழுவினர், இல்லாவிடில் இந்தியப் பிரதமரின் "சார்க்' உரையின் போது இலங்கை தர்மசங்கட நிலைமை ஒன்றை எதிர்கொள்ள நேரும் என்றும் எச்சரித்துள்ளதாம்.

மேலும் பிள்ளையான் ஆயுதங்களைக் கைவிட்ட பின்னரே அவரை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் சேர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இந்தியா இராஜதந்திர ரீதியில் இலங்கையை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை அரசு தெரிவிக்கும் கால எல்லைக்குள் யுத்தம் முடிவடையப் போவதில்லை என்பதை வலியுறுத்தியுள்ள இந்தியா, விமானக்குண்டு வீச்சினால் கொல்லப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதுடன் விமானத்தாக்குதல்களால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்குமாறும் இலங்கையைக் கோரியுள்ளது.

இந்திய இலங்கைப் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை முன்வைத்த யோசனையையும் இந்தியா இச்சந்திப்பின்போது நிராகரித்துள்ளது.

இந்திய அரசு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் இது சாத்தியமில்லையென இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை காரணமாக வடபகுதித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து, தென்னிந்தியாவால் புதுடில்லிக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து மத்திய அரசிற்குக் கொடுக்கப்படும் கடும் அழுத்தம் காரணமாக இந்தியாவால் எதிர்காலத்தில் இலங்கை விவகாரம் குறித்து மௌனமாக இருக்க முடியாது எனவும் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா,பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதையும் இந்தியா உன்னிப்பாக அவதானித்தவண்ணமுள்ளதாக இச்சந்திப்பின் போது இந்தியப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சீனாவிடமிருந்து 3 டி ராடர்களைக் கொள்வனவு செயதுள்ளமை இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. குறிப்பாகத் தென்னிந்தியாவிலுள்ள பாதுகாப்பு நிலைகளுக்கு ஆபத்தாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கைப் பாதுகாப்புப் படையினர் கொள்வனவு செய்யவுள்ள தாக்குதல் விமானங்கள் உட்பட ஏனைய ஆயுதங்கள் குறித்த விவரத்தினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த இந்திய உயர்மட்டக்குழு இந்தியாவிற்கு அறிவிக்காமல் இனி இலங்கை ஆயுதக் கொள்வனவில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளதாம்.

அதிகளவான இலங்கை அதிகாரிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெறுகின்றனர். மேலும் பாகிஸ்தானின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து இங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுட

நல்லுபதேசம்???

அய்யோ அய்யோ.....

உப்பிடி உபதேசம் செய்து தெய்தே சிரிலங்காவை சீரளிச்சவங்களில்லோ?...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கை காரணமாக வடபகுதித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து, தென்னிந்தியாவால் புதுடில்லிக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து மத்திய அரசிற்குக் கொடுக்கப்படும் கடும் அழுத்தம் காரணமாக இந்தியாவால் எதிர்காலத்தில் இலங்கை விவகாரம் குறித்து மௌனமாக இருக்க முடியாது எனவும் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனி அரட்டையடிக்கும்போது அளவோடு அடிக்கவேண்டும்

அரட்டைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

விளங்கவில்லையே :):(:( !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையலாகாத இந்தியாவிற்கு இப்படி உபதேசம் செய்ய மட்டும் தான் தெரியும். எப்பவும் "நாங்கள் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கிறோம்" , "இனப்பிரச்சனைக்கு யுத்தம் மூலம் தீர்வு காணமுடியாது" இப்படியான அறிக்கைகளை மட்டும் தான் விடத்தெரியும். தன்னை ஒரு வல்லரசு என்று உலகுக்கு காட்டிக்கொள்ளும் ஆர்வம் அதனை நடைமுறைப்படுத்துவதில் கிடையாது. தமிழனுக்கு எதுவும் செய்யாமல் இப்படியே இலங்கை அரசுக்கு உபதேசம் செய்துகொண்டு இருங்கோ :):(:(

Edited by suppannai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரட்டைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

விளங்கவில்லையே :):(:( !

அதுதான் சூறாவளி... எல்லாம் வல்ல ஆய்வாளர்கள் நிறையப்பேர் யாழில ஆய்வெழுதுவதை எனக்கு தெரிந்த மொழில அரட்டை என்றேன்...

அதுதான் சூறாவளி... எல்லாம் வல்ல ஆய்வாளர்கள் நிறையப்பேர் யாழில ஆய்வெழுதுவதை எனக்கு தெரிந்த மொழில அரட்டை என்றேன்...

காதால் வடியுது என்று சொல்லாதவரைக்கும் மகிழ்ச்சி.ஊரில் இருந்திருந்தால் ஏதாவது நடந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.