Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் பேரெழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன டங்குவார் இணையத்தில்த்தான் எல்லாக் கனேடிய வானொலிகளையும் கேட்கலாமே.

நீங்கள் ஒரு நாளும் கேட்கவில்லையா? ஆச்சரியமாக உள்ளது.

உதாரணத்துக்கு இதை கேட்டுப்பாருங்கள்.

http://www.ctr24.com/common/index.aspx

பிரபா,

இணைய வானொலி நான் கேட்பதில்லை. அதனால் இந்த யோசனை எனக்குத் தோன்றவே இல்லை. நிற்க, இந்த விடயம் இவ்வளவு இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது என்றும் நான் நினைத்திருக்கவில்லை. விழா ஏற்பாட்டில் வேறு ஏதோ சிக்கலால்தான் அறிவிப்பு தாமதமாகிறது என்று எண்ணிவிட்டேன். :lol:

  • Replies 60
  • Views 5.3k
  • Created
  • Last Reply

கனடா பொங்குதமிழில் பங்கேற்ற அனைவருக்கும் ஏற்பாட்டார்களுக்கும் நன்றிகள்.

மின்னல் குறிப்பிட்டதுபோல் பொங்குதமிழின் பிரதான நோக்கம் உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும். என்னதான் காரணங்கள் கூறப்பட்டாலும் பொங்குதமிழின் முழுமையான இலக்கை அடைய முடியவில்லை என்பதை வெளிநாட்டு ஊடகங்களின் புறக்கணிப்பு மூலம் உணர முடிகிறது.

பிரபா உங்களின் விரிவான பதிலுக்கு நன்றி

1) பத்திரிகைகளில் அதிகம் செய்தி வராததினால், ஏற்பாட்டாளர்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லையென்று எப்படி முடிவுக்கு வந்தீர்களோ தெரியாது. ஒரு பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது அது ஒன்றே பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டதை எடுத்துக்காட்டுகிறது. வேறு பத்திரிகையாளர்களும் வந்திருக்கலாம் ஆனால் பத்திரிகையில் செய்தி வராததற்கு ஏற்பாட்டாளர்கள் என்ன செய்ய முடியும். மேற்குலகில் பத்திரிகையில் செய்தி வரப்பண்ணவும் பணம் வேண்டும். ஏற்பாட்டாளர்கள் நாட்டைப் பார்ப்பதா அல்லது பணத்தை செலவழித்து இதைப்பார்ப்பதா?

2004ம் ஆண்டில் நடைபெற்ற பொங்கு தமிழ் முதல் அனைத்து எழுச்சி நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருக்கிறன். 2004ம் ஆண்டு பொங்கு தமிழ் சிறு செய்தியாக கனேடிய ஊடகங்களில் வந்தது.

ஆனால் அதனைத் தொடர்ந்து வந்த எழுச்சி நிகழ்வுகள் எல்லாம் கனேடிய ஊடகங்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்

மற்றது, நான் ரேடியோ கேட்பது இல்லை. மின்னல் தந்த தகவல் மூலமே நான் பொங்குதமிழுக்கு போனேன். ஆனா நீங்கள் தந்த தகவலில ஒரு சின்ன பிழையா போச்சிது. Downsview Subway இருந்து Downsview Park க்கு ஐஞ்சு நிமிச நடையில போகலாம் எண்டு எழுதி இருந்தீங்கள். நாமளும் மோட்டுத்தனமா நடக்க துவங்கி உண்மையில அது அஞ்சு நிமிசம் இல்ல. 15, 20 நிமிச நடை. வயசு போன சனம் பாவம். ரேடியோவிலயும் சரியா சொல்ல இல்ல போல. சப்வேயிலயே இறங்கின உடன பஸ் பிடிச்சு ஐஞ்சு நிமிசத்தில Downsview Park க்கு போய் இறங்கி இருக்கலாம். பிழையான தகவலால சனம் தேவையில்லாமல் நடக்க துவங்கி கஸ்டப்பட்டுதுகள்.

முரளி வானொலி ஒன்றில் சொல்லப்பட்டதைத்தான் எழுதிவிட்டேன். நீங்களும் எனது பதிவைப் பார்த்து டவுணஸ்வியு தொடரூந்து நிலையத்தில் இறங்கி நடந்து சிரமப்பட்ட ஏனையோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.

மேல ஆக்கள் சொன்னமாதிரி கனேடிய ஊடகங்களுக்கு உதுகள் தெரிஞ்சு இருக்காது எண்டு சொல்வதற்கு இல்லை. பெருந்தெரு 401, 404, 427 இல யாராவது குசுவிட்டாலே பரபரப்பாக சத்தம் போடுற கனேடிய ஊடகங்களுக்கு Downsview Park இல 75,000 சனம் கூடின விசயம் தெரியாது எண்டால் அது நகைப்புக்கு இடமானது. தவிர, நான் அவதானித்த அளவில் ஒரு Single Police Car ஐ கூட எனது கண்களால் காண முடியவில்லை. இது எல்லாம் எதனை உணர்த்துகின்றது. எல்லாரும் அமைதியாக இருந்து கனேடிய தமிழரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிச்சு கொண்டு இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்கின்றது.

முரளி நெடுஞ்சாலைகளில் குசுவிட கத்துற ஊடகங்கள். நீங்கள் எப்படிக்கத்தியும் கவனமெடுக்வில்லையே???

எல்லாரும் அமைதியாக இருந்து உன்னிப்பாகக் கவனித்திருப்பினம். உரிமைக்குரலிலும் அதனைத் தொடர்ந்து வந்த போராட்டங்களிலும் உன்னிப்பாகக் கவனித்துவிட்டு உலகத் தமிழருக்கே தடை போட்டுட்டினம். இனி கனடாவில் இருக்கிற தமிழ் அமைப்புக்களிற்கு எல்லாம் தடை போடுவினம். அதுக்குப்பிறகு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேர் சேந்து போராட்டம் நடத்தும். திருப்பியும் பொலிஸின் ஒரு காரும் வராமல் அமைதியா இருந்து அவை உன்னிப்பாகக் கவனிப்பினம். பிறகு கனடாவிலை இருக்கிற ஊர் சங்கங்களிற்குத் தடைவரும்.... இப்படி இப்படி எல்லாம் நடக்கும் நாம் குண்டுச் சட்டிக்குள்ளை குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால்............

தமிழர்களின் அரசியல் நிகழ்வுகளுக்கு, மண்டபங்கள், திடல்கள் போன்றவற்றை வழங்கக்கூடாது என இங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

யார் விதித்தது தடை? ஏன் இப்படி நீங்களாகவே கற்பனை பண்ணி குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படித் தடையிருந்தால் பொங்கு தமிழ் நிகழ்வே நடைபெறாது போயிருக்கும். நீங்களே இல்லாத வேலியை உங்களிற்குப் போட்டுக்கொண்டு முடங்காதீர்கள்.

உரிமைக் குரல் என்பது எமக்குள் நாம் பகிரப்படுவதல்ல. வெளி உலகிற்கு எமது குரல் பதியப்பட வேண்டும் கேட்கப்பட வேண்டும் என்பதே. இனி வரும் காலங்களில் இத்தவறுகளை களைய முயற்சிக்கலாம். எது எப்படியிருப்பினும் கனடாத் தமிழ் உறவுகளே உங்கள் தாய் மண் பற்றுக்கு எனது மனப்பூhவமான நன்றிகள். புலம் பெயர் உறவகளே உங்கள் பணி தொடரட்டும்.

ஜானா

குறுக்கு உதை ஏன் இங்கு இணைத்திருக்கிறியள்?. நீங்கள் நல்லவரா? கேட்டவரா?

குறுக்கண்ணை சொல்லுற விசயம் இதுதான்

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.