Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜேவிபி மீது புலிகள் இதுவரை இலக்கு வைக்காததால் புலிகள்-ஜேவிபி தொடர்பு என அரசு சந்தேகம்.

Featured Replies

ஜேவிபி மீது புலிகள் இதுவரை இலக்கு வைக்காததால் புலிகள்-ஜேவிபி தொடர்பு என அரசு சந்தேகம்.

ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ

ஜே.வி.பி. எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்தவுள்ள வேலை நிறுத்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைக் கவிழ்த்து தோல்வி கண்டு வரும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் சர்வதேச சதித் திட்டத்தின் ஓர் அங்கமேயாகும். எனவே இந்த சதித் திட்டத்திற்கு உழைக்கும் வர்க்கத்தினர் உடந்தையாகக் கூடாது என்று ஜனாதிபதியின் தொழிற்சங்கங்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 5000 சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கவே போராட்டமென அறிவித்த ஜே.வி.பி. இன்று மாகாண சபைத் தேர்தலை பிற்போடுமாறும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவையை 30 ஆக குறைக்குமாறும் நிபந்தனைகளை முன்வைத்து அவை நிறைவேற்றப்பட்டால் வேலை நிறுத்தம் கைவிடப்படுமென்கிறது. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் போராட்டமல்ல. ஜே.வி.பி. யின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கான போராட்டம் இது என்பது வெளிச்சமாகியுள்ளது. அக்கட்சிக்குள் தோன்றியுள்ள நெருக்கடிகளை மறப்பதற்கே இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன. விடுதலைப் புலிகளை தோல்வியடையச் செயயும் இறுதிப் போராட்டத்தில் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதனை தடுத்து புலிகளை பாதுகாக்கும் சர்வதேச சதித்

திட்டத்திற்கு ஜே.வி.பி. ஐ.தே.க. கட்சியுடன் இணைந்து துணை போகிறது.

அதற்காக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளி கவிழ்க்க முனைகிறது. அமைச்சரவை 30 ஆக குøறக்க வேண்டுமென்பது அரசுடன் இணைந்தவர்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தி பிரியச் செய்யும் திட்டமாகும்.

வட மத்திய சப்ரகமுவ மாகாண சபை ஆட்சிக் காலம் முடியும் முன்னர் கலைத்தது பிழையென்றும் இதற்காக பல கோடி ரூபாய்கள் வீண் விரயமாகுமென்றும் குற்றம் சுமத்தும் ஜே.வி.பி. அன்று 2001 ஆட்சிக்கு வந்த ஐ.தே. கட்சியை சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து 2004 இல் கலைத்தது.

2007 வரையிலான ஆட்சியை இரண்டே வருடங்களில் விரட்டியடித்தார்கள். இதற்கு எத்தனை கோடி ரூபா பணம் வீணாக செலவழிக்கப்பட்டது.

நாடு இன்று தீர்க்கமான கால கட்டத்தில் உள்ளது. பயங்கரவாதம் தோல்வியடையச் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இதன் பின்னர் மக்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழல் உருவாகும்.

எனவே உழைக்கும் வர்க்கத்தினரை ஏமாற்ற முயற்சிக்கும் ஜே.வி.பி. யின் சதி வலையில் சிக்கிவிடாது நாட்டுக்கு முதலிடத்தை வழங்கி செயற்பட வேண்டும். தென்பகுதியில் அண்மைக்காலங்களில் நடந்து வரும் குண்டு தாக்குதல்களூடன் ஜேவிபியும் சம்பந்தப்படுவதாக கைது செய்யப்பட்ட சிங்கள்வாசிகள் மூலம் தெரியவந்துள்ள்து.இது அரசுக்கு ஜேவிபி மீதான சந்தேகத்துக்கான

சமிக்கையாகும்.அத்துடன் புலிகளூக்கும் ஜேவிபியின் பிரமுகருக்கும் ரகசிய சந்திப்பு திருகோண்மலையில் நடைபெற்ற்தும் தெரிந்ததே.

நன்றி

நிதர்சனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.