Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்குதமிழ் நிகழ்வு சொல்லும் செய்தி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் பொங்கியெழுந்த செய்திகளை கேட்கும்போது எமது இனம் சுதந்திரமடையும் நாள் தூரத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

முக்கியமாக கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வு பலரின் கன்னத்தில் அறைந்தமாதிரி பல அதிரடியான தகவல்களை பல தரப்பினருக்கு தெளிவு படுத்தியிருக்கும் என்பதில் சிறிதேனும் சந்தேகமிருக்க சந்தர்ப்பமில்லை.

இவ் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தங்களது திட்டத்தை மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் நடத்தி முடித்தியிருக்கிறார்கள்.

இந்த திட்டத்திற்கு தளத்தில் இருந்து யோகி அண்ணா, நடேசன் அண்ணா போன்றோர்களின் ஆலோசனையும் பெரிதும் உதவியிருப்பதாக அறிய முடிகின்றது.

கனடாவில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அதிகளவு மக்கள் பங்குபற்றுவதை தடுக்குமுகமாக மறை முகமாகவும், வெளிப்படையாகவும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. இருப்பினும் ஏற்பாட்டாளர்கள் தங்களது வேலைத்திட்டங்களை இறுதிவரை இரகசியமாக பேணிக்காத்து யாவரின் சூழ்ச்சிகளையும் செயல் மூலம் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

இந்த வெற்றியில் தமிழ் ஒலி, ஒளி ஊடகவியலாளர்களின் விவேகமும், வேகமும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட மணித்தியால அவகாசத்தில் பல்லாயிரம் மக்களுக்கு தகவலை சேரப்பண்ணியது மட்டுமன்றி நிகழ்ச்சியில் பங்குபற்றவும் பண்ணியிருக்கின்றார்கள் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.

இந்த பொங்கு தமிழ் நிகழ்வின் வெற்றி கனடிய அரசாங்கத்திற்கு பல செய்திகளை சொல்லியிருக்கும் என்பது கனடிய தமிழர்களின் ஒரு எதிர்பார்ப்பு. அதாவது உங்களின் கணிப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் தப்பு என்பதை புலப்படுத்தியிருக்கும். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பையும், அங்கலாய்ப்பையும் கனடிய அரசாங்கமோ அல்லது இதர சர்வதேசமோ இனியும் புரியவில்லையென்றால், அவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்பது எனது கருத்து.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் கனடா ஆளும் கொன்சேவேட்டிக் கட்சிக்கு தமிழர்கள் வாக்குப் போடக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கட்சிக்கு போடுங்கோ, அந்த கட்சிக்கு போடாதீங்கோ....

என்பதையெல்லாம் விட்டு விட்டு எமது பிரச்சினையை நாம் வசிக்கும் நாட்டை சேர்ந்தவங்களுக்கு புரிய வைக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தோமா??

இதுவரைக்கும் இல்லை....

பொங்குதமிழ் மேடைகளை பாருங்கள் முழுக்க முழுக்க தமிழில் தான் கோசம்.... இங்கிலாந்து காரனுக்கோ பிரான்சு காரனுக்கோ, கனடாக்கரனுக்கோ, அவுஷ்திரெலியாகாரனுக்கோ உந்த கோசத்திலா ஏதாவது புரிஞ்சிருக்குமா??? அவங்களும் ஏதோ சமூக கூட்டம் எண்டு நினைச்சிருப்பான்.....

புரிஞ்சு கொள்ளுங்கப்பா..... எங்கட ஆக்களுக்கு எங்களை பற்றி சொல்லவா பொங்குதமிழ்???? :wub::lol::lol:

சிட்னியில் ஆங்கிலத்திலும் கோசம் போட்டார்கள்..

மேடையிலை நிண்று பெட்டையள் எல்லாம் "WE WANT Tamil EELAM" எனும் கோசத்துக்கு Rap ஆடினார்கள். எனக்குக் பக்கத்திலை நிண்ற ஒருவர், We Won Tamil Eelam எண்று சொல்லுறாங்கப்பா எண்று மகிழ்ந்தார். கிட்டத்தட்ட அவருக்கு தமிழீழம் கிடைத்த மகிழ்ச்சி தெரிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகள் வெற்றியே. இவையெல்லாம் உடனடியாக மக்களைப் போய்ச் சேரும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாம் எமது பிரச்சினை குறித்த முறைப்பாட்டைக் கட்டி எழுப்புகிறோமே தவிர (we are building a case for us), இதன் விளைவுகள் இன்றே வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு நாள் இவ்வகை நிகழ்வுகள் மற்றும் மற்றும் வெளிப்புறக் காரணிகளின் அழுத்தங்களால் அரசின் போக்கில் மாற்றம் ஏற்படலாம். அந்த மாற்றத்துக்கான நேரம் வரும்போது இவை உபயோகமாக இருக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும், இங்கே என்னுடன் வேலை செய்கிற சில வெள்ளையளுக்கு சிறீலங்கா என்ற ஒரு நாடு இருப்பதே தெரியவில்லை. சிலதுகளுக்கு தெரிந்திருந்தாலும் அங்கே போராட்டம் நடக்கிறது என்பது தெரியவில்லை. எனது அனுபவத்தைச் சொல்லி நிலைமைகளை விளக்கி முடிப்பதற்குள் பிராணன் போகிறது. :wub:

டொரோண்டோ பெரும்பாகத்தில் வசிப்பவர்கள் ஓரளவு அறிந்து வைத்துள்ளார்கள். சிலருக்கு தமிழர் என்றால் வன்முறைக் குழுக்கள்தான் தெரிகிறது. ஒருமுறை என் பழைய மேலாளர் (வெள்ளை) தான் ஸ்காபுரோவில் வசித்ததாகவும் அங்கே தமிழ் குண்டர்களின் அட்டகாசத்தால் அவ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டி வந்ததாகவும் அலுத்துக்கொண்டார். :wub: இதுதான் நாங்கள் இதுவரை சம்பாதித்து வைத்துள்ள்ள நற்பெயர்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.