Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு பொட்டம்மானை பணயமாக கேட்டது: "சுடரொளி" வார ஏடு தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு ஐடியா சொன்னா கோவிக்க கூடாது:

இவர் தான் பொட்டம்மான் எண்டு நம்மட குறுக்கரை மாறு வேசத்தில நாராயணனிடம் அனுப்பி வைச்சாலென்ன? குறுக்கற்றை கதைய கேட்டாலே காணும் நாராயணன் காலி. :rolleyes:

இந்திய புலனாய்வுத்துறை ஒரு தரங்கெட்ட புலனாய்வுத்துறை என்பது முற்றிலும் நிருபணமானது.

இனி விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவிடம் இருந்த ஒரு கடுகளவு எதிர்பாப்பும் இருக்காது , இனி எம் போராட்டம் வெகு விரைவாக விடுதலை நோக்கி செல்லும்,,,,

இந்தியாவை மீறிய செயற்பாடுகளே எமது விடுதலைப் போராட்டத்திற்குத் தேவை. இந்தியாவையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்களை மத்திய அரசு இந்தியர்களாகப் பார்ப்பதேயில்லை. இலங்கையைத் தன்பக்கம் வைத்துக் கொள்வதற்கு வேறு வழிகள் இந்தியாவிடமில்லை, என்பது இந்த நடவடிக்கையிலிருந்து நன்றாகவே தெரிகிறது. ஆகவே இந்திய ஆதிக்க எல்லைக்குட்பட்டு ஈழப் போராட்டம் நடைபெற்ற காலம் என்றோ இல்லாமல் போய்விட்டது. சம்பந்தர் அப்படிப்பட்டவர்களுக்கு விடை கூறாமல் தவிர்த்ததே நல்லது.

எனக்கொரு ஐடியா சொன்னா கோவிக்க கூடாது:

இவர் தான் பொட்டம்மான் எண்டு நம்மட குறுக்கரை மாறு வேசத்தில நாராயணனிடம் அனுப்பி வைச்சாலென்ன? குறுக்கற்றை கதைய கேட்டாலே காணும் நாராயணன் காலி. <_<

தசாவதாரம் படம் பாத்திட்டீங்கள் போல இருக்கே.? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புறம் வேறு யார் யார் எல்லாம் வேணும் என்று ஒரு பட்டியல் தயாரித்து அனுப்புங்கோ ஒரு தனி விமானமும் அனுப்புங்கோ அதிலே அவர்களை எல்லாம் உடனடியாக அனுப்பிவைக்கிறோம். உங்களுக்கெல்லாம் தலைக்குள் ஒன்றுமே இல்லையா என்ன கதைப்பது என்று <_< ? உயிரை தந்துவிட்டு உடல் வாழ்வது சாத்தியமா ? அதுசரி உங்களுக்குதான் தலைக்குள் ஓன்றும் இல்லை என்று நிரூபித்துவிட்டீர்களே அதுதானே மகிந்தவுக்கு கூலிப்படையாய் இருக்கிறிங்கள். ஒரு வல்லரசு என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் நாடு ஒரு சிறிய நாட்டுக்கு அடியாள் வேலை :o:lol: செய்யுது கேவலம்

பேக்காளித்தனமா பேரம் பேசுறாங்களே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் தலைநகர் கொழும்புக்குக் கடந்த மாதம் சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிராயச்சித்தமாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானைத் தமிழர் தரப்புத் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியாதாக "சுடரொளி" வார ஏடு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனுடனான சந்திப்பின் போதே இந்திய உயர் அதிகாரிகள் குழு இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. "பொட்டம்மானைப் பணயம் கேட்கும் இந்தியா" என்ற தலைப்பில் "சுடரொளி" வார ஏட்டின் பிந்திய பதிப்பில் இது பற்றி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய உயர்மட்டக் குழுவினர், கடந்த மாதம் மூன்றாம் வாரம் அவசரமாகக் கொழும்புக்கு வந்திருந்த சமயம், தமிழர் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தனைச் சுமார் ஒன்றேகால் மணி நேரம் சந்தித்துப் பேசியிருந்தது.அந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினை தொடர்பான விடயத்தில் பாரதம் மேற்கொண்ட யுக்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் விசனத்தையும், ஆதங்கத்தையும், எரிச்சலையும் சம்பந்தர் சுட்டிக்காட்டினார்.

இதன் போது குறுக்கிட்ட இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், இந்தியாவின் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு தலைவரான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்துவிட்டு, அந்த விவகாரத்தை வெகு சாதாரணமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஈழத் தமிழர்களுக்காக நியாயம் செய்யுங்கள் என்று கேட்பதில் அர்த்தமில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராஜீவ் காந்தி படுகொலைக்காக உரியவர் யாரேனும் தண்டிக்கப்படுவதுதான் சரி. அந்தப் பிரயச்சித்தத்தைச் செய்தால்தான் இந்தியா தமிழர்களுக்காகத் தலையிட்டு எதையும் செய்யமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விடுதலைப் போராட்ட அணியின் தலைவர் பிரபாகரனை விட்டு விட்டு அந்தப் படுகொலைக்கு வியூகம் வகுத்து, கட்டளைகள் வழங்கிய பொட்டம்மானாவது தண்டிக்கப்பட்டாக வேண்டும். அதற்காகக் குறைந்தபட்சம் அவரையாவது இந்தியாவிடம் கையளிக்கத் தமிழ் கூட்டமைப்பு தயாரா? என நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய உயரதிகாரிகள் தரப்பைப் பொறுத்த வரை இந்தக் கேள்விக்குச் சம்பந்தர் உடனடியாக விடை ஏதும் தரக்கூடிய நிலையில் இல்லை என்பது இந்திய அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எனினும் இந்தத் தகவலை சம்பந்தர் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று, புலிகளின் தலைமையின் பிரதிபலிப்பை தமக்குத் தெரியப்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் அதிகம் இருந்தது.

ஆனால், இந்தக்கேள்வியை அந்த இடத்தில் காதில் வாங்கியதே தவிர இந்த விடயத்தில் வேறு எதையும் சம்பந்தர் மேற்கொண்டு செய்யவில்லை என்று தெரிகின்றது. இதை ஒரு முக்கிய விவகாரமாக அவர் புலிகளின் தலைமைக்கு எடுத்துச்சென்று தெரிவித்தார் என்ற தகவல் இல்லை. அப்படி எடுத்துச்சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதில் பயன் ஏதுமில்லை என்று கருதி அதனை அப்படியே அவர் விட்டு விட்டிருக்கலாம்.

ஆனால், புலிகளுடன் இந்தியா எதிர்காலத்தில் இணங்கிப் போவதற்குக் குறைந்த பட்சம் ராஜீவ் காந்தி படுகொலை விவகாரத்தில் இந்தியத் தரப்பினால் குற்றவாளியாகக் கருதப்படும் பொட்டம்மானையாவது புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் தற்போதைய அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்பு.

நிபந்தனை என்ற தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் புலிகளின் தலைமைக்குத் தெரியப்படுத்தினாரா? அவர்களின் பிரதிபலிப்பு என்ன? போன்ற மேலதிக விடயங்களை அறிந்து கொள்வதில் இந்தியத் தரப்பு இன்னும் வெகு எதிர்பார்ப்போடு இருப்பதை உறுதி செய்ய முடிகின்றது எனச் சுடரொளி குறிப்பிட்டுள்ளது

http://www.tamilwin.com/view.php?2aIWnVe0d...d426QV3b02ZLu2e

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குறிப்பிட்டது ஒரு நிகழ்ந்த சம்பவமல்ல நிகழவேண்டுமென்று விரும்பப்பட்டு யாரோ ஒரு சாராரால் உருவாக்கப்பட்ட கற்பனைச் செய்தி. பத்திரிகைகாரர்கள் எவருமே மேற்குறிப்பிட்ட சந்திப்பின்போது பிரசன்னமாயிருக்காத நிலையில் சுடர்ஒளிக்குமட்டும் தகவல் எப்படி சென்றடைந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் இணைத்த திரியை வாசிக்க சுவாரசியமாக இருந்தது. பலர் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியா தமிழருடன் நெருங்கி வருவதாகக் கனவு கண்டிருந்தார்கள். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.