Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இளம் யுவதிகளை சீரழிக்கும் படையினர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் யுவதிகளை சீரழிக்கும் படையினர்.

11.07.2008 / நிருபர் எல்லாளன்

யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைப்புலனாய்வாளர்கள் அங்குள்ள இளம் பெண்ணகளை அச்சுறுத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தி வருவதாக, குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பாதிக்கப்படும் இந்தப் பெண்கள் அச்சம் காரணமாகவும், சமூகக்கட்டுப்பாடு, மற்றும் எதிர்காலம் கருதியும் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளியே கூறாது தவிர்த்து வருகின்றனர்.

தீபன், மகேசன், இமான், சரத் போன்ற பெயர்களில் இயங்கும் சிங்கள புலனாய்வாளர்கள் தமது பிரதேசங்களிலுள்ள பெண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அச்சுறுத்தி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த உண்மைகளை வெளிகொண்டு வருவதற்கு பலர் முயற்சிக்கின்ற போதிலும், அதன் பின்னர் தப்பிச் செல்ல வழியில்லாத காரணத்தினால், மக்கள் மெளனிகளாக இருக்கின்றனர்.

இளம் பெண்கள் மட்டுமன்றி திருமணம் முடித்த பெண்களும் இவ்வாறான அச்சுறுத்தலுக்கும், பாதிப்பிற்கும் உள்ளாகுவதால், உரியவர்கள் தமக்காக குரல்கொடுக்க வேண்டும் என, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் இந்த பெண்கள் ஐரோப்பிய தொலைக்காட்சி ஊடாக அழைப்பு விடுத்துள்ளனர்.

தென்மராட்சி கச்சாய் பகுதியில் இதுவரை 8 இளம் பெண்கள் சிறீலங்கா படை புலனாய்வாளர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாம் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கச்சாய், கைதடி பகுதிகளில் ரமேஸ், சுரேஸ், கணேஸ் என்ற தமிழ் பெயர்களில் இயங்கும் படைப் புலனாய்வாளர்களே இளம் பெண்களை குறிவைத்து வருகின்றனர்

http://www.sankathi.com/

அங்குள்ள அமைப்புகள் என்ன செய்கின்றன?

அந்த அரக்கர்களின் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப்படுவது எப்போது என்ற ஏக்கம் மட்டுந்தான் என்னுள் எழுகிறது. கொடுமைகளுக்கு ஒருநாள் முடிவுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பெண்கள் உயிருக்கு சமமாக கற்பினை மதிப்பவர்கள் .கற்பினை பாதுகாக்க உயிரினைக்கொடுத்த எத்தனையோ பெண்கள் வரலாற்றில் உள்ளார்கள் .இவர்களின் கற்பினை பறிப்பவர்களுக்கும் அதற்கு துணை போவவர்களுக்கும் உரியவர்கள் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும். இதில் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக சிங்களவனைத் திட்டிப் பிரயோசனம் இல்ல. 14 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மக்களை சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க முடியாமல் போனதை இட்டு நாம் எல்லோரும் தான் வெட்கப்பட வேண்டும்..! <_<

நெடுக்கரின் கருத்தைத்தான் நானும் சொல்ல முயல்கிறேன்... நாங்கள் எங்கள் விடுதலையை விரைவுபடுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேதனை இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இன்னும் ஏன் பொறுத்திருக்கிறார்களோ தெரியாது

புலத்தில் இருந்து கதை விடாமல் போர் களத்தில் இறங்க எத்தைனை பேர் தயார்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் இருந்து கதை விடாமல் போர் களத்தில் இறங்க எத்தைனை பேர் தயார்!!!

நான் ஒரு கதையுமே விடேல சூர்யா என்ன ஒரு ஆதங்கம் தான் எனக்கில்ல இங்க இருக்கிற பலருக்கு. உண்மைதான் புலத்தில குளிர்காஞ்சுகொண்டு இருந்து கொண்டு தேசத்தில நடக்கிற அநீதிகளை பார்த்து இந்த கையாளாகாதவன் என்ன செய்யமுடியும். அப்படி பல பேர் இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பெரும் வேதனை .

நெடுக்கர் சொன்னது போல தொடாந்து 12 வருட ஆக்கிரமிப்பு வாழ்க்கையின் பலன்கள் தான் இவைகள் . அதற்கிடையில் வரக்கூடாமல் வந்த கேளிக்கை விழா போன்ற சமாதான காலத்தில் ஏற்ப்பட்ட கல்லெறியல்கள் ரயர் கொழுத்துதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட குடும்பங்கள் தப்பி போயிருக்கவேண:டம் துரதிர்டவசமாக தப்ப முடியாதவர்கள் இந்த நிலையை எதிர் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலமை வந்துள்ளது.

குறிப்பாக அல்லாரை கச்சாய் தம்பு தோட்டம் பகுதிகளிற்கு ஏனைய பகுதிகளை சோச்தவர்கள் செலவதென்பது கடினமானது மட்டுமல்ல எவராவது உறவினர் வீடுகளிற்கு சென்றால் கூடா சில நிமிடங்களில் மோட்டார் படைகள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிரளயம் செய்வது தொடர்கிறது ஆகவே இப் பகுகளிற்கு மக்கள்செல்வது குறைந்துள்ளது கேவே இது சம்பந்தமாக எவரும் விவாதிக்க தயாராகவும் இல்லை ஏன் எனில்மறு நாள் பிணமாக்க படுகிறார்கள்

இதில் மிக வேதனையான விடயம் என்னவெனில் சிங்களவன் என்ற பெயரில் தமிழ் இனத்தை சோந்தவர்கள் இருப்பது வேதையானது .

உதாரணமாக தெம்மராட்சிpல் நூணாவில் பகுதியில் 514 தளத்தில் இருந்து செயற்படுகின்ற மகேசு என்பவன் இயக்கம் இருந்த காலத்தில் தென்மராட்சி பகுதியில் செயற்பட்டுள்ளான் அது மட்டும்மல்ல கல்வயல் பகுதியை சேர்ந்தவன்எனவும் கூறப்படுகிற்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.