Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்களை கொல்வது விடுதலைப் புலிகள் என்பது வீண்பழி -திருமாவளவன்

Featured Replies

தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வது விடுதலைப்புலிகள் தான் என்று வீண் பழி சுமத்தும் மஹிந்தவின் பொய் பிரச்சாரத்திற்கு தற்போது இந்திய அரசும் ஒத்து ஊதுவது மிகுந்த வேதனைக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாh. மேலும் :

நாகை மாவட்டம், ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன் மற்றும் நாரயணசாமி ஆகியோர் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகி பலியாயியுள்ளனர்.

தமிழக மீனவர்களை கொலை செய்வது இலங்கை கடற்படைதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், தமிழக மீனவாகளைச் சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகள் தான் என்று வீண் பழி சுமத்தும் மஹிந்தவின் பொய் பிரசாரத்திற்கு தற்போது இந்திய அரசும் ஒத்து ஊதுவது மிகுந்த வேதனைக்குரியது. அதே வேளை இது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்திய அரசின் இத்தகைய போகினைக் கண்டித்தும் சிங்கள இனவெறியாட்டத்;தைக் கண்டித்தும் எதிர்வரும் 21ம் திகதி நாகைப்பட்டனத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

நன்றி வீரகேசரி

அரசின் பெயரைக் கெடுக்க மீனவர்களை தாக்குவது புலிகளாக இருக்கலாம் மஹிந்த

திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்குச் சென்ற இலங்கையின் பயங்கரவாத அரசின் தலைவர் மஹிந்த இந்திய விமானப்படையினரின் விமானத்தில் திருப்பதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். மஹிந்தவுடன் பத்து பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் திருப்பதி வந்துள்ளது. இப்பயணம் மிகவும் இரகசியமாக வைக்கபட்டிருந்தது. பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

வழிபாட்டிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் : பேச்சுக்கு இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால், விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்.

நாட்டில் அமைதி திரும்ப விடுதலைப் புலிகளுடன் பேச நாங்கள் எப்போதும் தாயாதான். தீர்வு அவர்கள் கையில் தான் உள்னளது. இதுவரை இலங்கையில் நடந்த சண்டைச் சம்பவங்களில் 25ஆயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ன. இதற்கு முடிவு வரவேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் தான் முன்வரவேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளாக இனப்போரால் இலங்கையின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. வன்முறையை நிறுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு உலகில் உள்ள எந்த நாடும் ஆதரவு தராது. எனவே இந்தியா விடுதலைப் புலிகளுக்குஉதவி செய்யும் என நான் நினைக்கவில்லை.

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை அரசு எந்தத் தொந்தரவையும் தரவில்லை. இருப்பினும், இலங்கை அரசின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் மீனவர்களைத் தாக்குவது விடுதலைப் புலிகளாக இருக்கக்கூடும் என்று நான் கருதுகின்றேன். விடுதலைப் புலிகள் பிரச்சினை எப்போது தீரும் என்ற கேள்விக்கு இப்போது பதிலளிப்பது கடினம். இருப்பினும், விடுதலைப் புலிகளின் நடவடிக்கையைத் தடுக் இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

சார்க் அமைப்பின் மாநாடுகளில் விடுதலைப் புலிகள் பிரச்சினையை இலங்கை அரசு எழுப்பி வந்திருக்கிறது. கொழும்பில் நடைபெறவுள்ள 15வது சார்க் மாநாட்டிலும் இப்பிரச்சனையை எழுப்புவோம். என்று கூறினார்.

நன்றி தினக்குரல்

கோயிலுக்கு போய் வந்த கையோடு இத்தனை பொய்களா? திருப்பதிக்கே நாமமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த அண்ணாச்சி பேசாம கதை எழுதி பேப்பர்களுக்கு அனுப்பினா நல்லா உழைக்கலாமே... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.