Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை

ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்]

சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதை அடுத்தே சீனா இந்த முடிவைத் தெரிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு பீஜிங்கால் இலங்கைக்கு வழங்கப்பட்ட போர் உதவிகள் 37.6 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்தன. இதன்மூலம் இலங்கைக்கு அதிகளவான உதவிகளை வழங்கும் நாடான ஜப்பானைவிட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கூடுதலான உதவிகளை சீனா வழங்கியிருந்தது.

இதற்கும் மேலதிகமாக நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம், ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் உள்ளிட்ட பாரிய திட்டங்களையும் சீனா இலங்கையில் முன்னெடுத்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு மன்னார் எண்ணெய் வள ஆய்வுகளை சீனாவுக்கு வழங்க இலங்கை தீர்மானித்திருந்தது.

இதனையடுத்து இந்தியா இதனைத் தடுத்து நிறுவத்துவற்காக அண்மையில் இந்திய அதியுயர் அதிகாரிகள் சிறீலங்காவுக்கு பயணம் செய்திந்ததை அடுத்தே எண்ணெய் வள ஆய்வு தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் எச்சரிக்கைதானே நிறுத்தினால் சந்தோசப்படலாம். நிறுத்துவதோடு எங்களுக்கும் கொஞ்சம் உதவி செய்தால் நல்லாயிருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழத்தில் திருமலை துறைமுகம் மற்றும் புல்மோட்டை கனிமங்கள் மீது இருக்கும் சர்வதேச அக்கறை வட தமிழீழத்தில் மன்னார் குடாவில் மற்றும் யாழ் குடா முருகைக்கற் பாறைகள் மீதும் இருக்கிறது.

தமிழீழம் வளம் கொழிக்கும் கடலைக் கொண்டுள்ளது. இந்தக் கடல் எமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக் கூடியது. அதுமட்டுமன்றி தென் தமிழீழமும் வன்னி மண்ணும் யாழ் குடா மண்ணும் எமது உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வளத்தை தக்க வைத்துள்ளன.

சில வசதி படைத்த மேற்குலக நாடுகளிடம் இல்லாத இயற்கை வளம் எம்மிடம் உண்டு.

எமது தேச வளங்களை விற்று எமக்கு எதிராக யுத்தம் செய்ய எதிரி பணத்தையும் உதவிகளையும் பெறுகிறான்.

நாம் எமது வளங்களை தொடர்ந்து பாதுகாக்க முனைய வேண்டும். விடுதலைப்புலிகளின் கரங்கள் வலுப்படுத்தப்பட்டு மன்னார் வட்டகை மற்றும் திருமலை மீண்டும் எமது கரங்களுக்குள் கொண்டு வரப்படவும் கடற்புலிகள், வான் புலிகளின் பலம் உச்ச அளவிற்கு அதிகரிக்கவும் செய்யப்பட வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்திலேயே எமது வளங்களுக்காக போட்டா போட்டி போடும் சர்வதேச கரிசணைகளை எம் பக்கம் இழுக்கக் கூடிய வலுவை அல்லது பேரம் பேசக் கூடிய வலுவை நாம் பெறலாம்.

எமது போராட்டத்தின் வெற்றியில் எமது வளங்களை தக்க வைத்தலும் சம்பந்தப்பட்டிருக்கிறது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீனா நிறுத்தினால் என்ன இந்தியா இருக்கிறது தங்களின் நாட்டு மீனவர் களை

பற்றி கவலை படாமல் தராளமாக அள்ளிவழங்க இதனால் இந்தியாவுக்கே

லாபம் நாராயணுக்கு மிக்க சந்தோசமாக புத்தம் சரணம் கச்சாமீ

சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை

உண்ணான? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.