Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயசிக்குறூ ராணூவ நடவடிக்கையில் கைப்பற்றப்படாத வன்னி மேற்கை கைப்பற்றி புலிகளை ஒரு பகுதிக்குள் தனிமைபடுத்துவதே தற்போதைய ராணூவ நடவடிக்கையின் நோக்கம்

Featured Replies

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் வன்னி மேற்குபகுதியை இம்முறை கைப்பற்றுவதே தற்போது நடந்துவரும் ராணூவ நடவடிக்கையின் நோக்கமென நமபகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகள் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடக்கூடிய ஆனையிறவு, முல்லைத்தீவு நோக்கிய படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்டளவிலும் புலிகளுக்குப்போக்கு காட்டிகொண்டு மன்னாரூடான நடவடிக்கையில் பெரும் ஆரவாரமெதுவுமின்றி புளியங்குளத்துக்கு ஊடறுக்க கூடியபடி நவ்வி என்றா பிரதேசத்துக்கும்,இன்னொரு தொகுதி படையினர் விடத்தல் தீவிற்கும் முன்னகர்ந்து விட்டதாகவும்,இந்த நகர்வு அடுத்தகட்டமாக நாச்சிகுடா கடலை தக்கவைப்பதற்காக நடக்குமென உயர் ராணூவ அதிகாரி தெரிவித்தார். இதேவேளை நவ்வியிலுள்ள் ராணூவமும் நிலைமைக்கு ஏற்ப தம்மைப்பலப்படுத்தி கொண்டு துணூக்காய் நோக்கியோ அல்லது புளியங்குளம் நோக்கியோ நகருமெனவும் இனிவரும் நகர்வு புலிகளின் அகோரமான தாக்குதல்களை எதிர்கொண்டே நகரவேண்டியிருக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.சென்ற முறை புலிகளின் யாழ்ப்பாணத்துக்குள் உள் நுழையும் கடல்மார்க்கம் வன்னி மேற்கின் பகுதியில் அமைந்திருந்தால் குடாக்கடலால் புலிகள் நுழைய வசதியாகவிருந்ததாகவும் இப்போது நடக்கும் தாக்குதல் மூலம் அவ்வழிமூலங்கள் தடுக்கப்பட்டுவிடுமெனவும் அதன்பின்னர் கிளினொச்சியோ ஆனையிறாவோ புலிகளால் தக்கவைத்துக் கொள்ளமுடியாது எனவும் யாழ்ப்பாணத்தை புலிகள் கைப்பற்றும் நோக்கம் இதனால் தடைப்படுமெனவும் கிழக்கு மாகாணத்தை போன்று ஒரு தேர்தலை வடமாகாணத்துக்கும் தேர்தலை நடாத்த இந்த ரானுவ நடவடிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இது இப்படியிருக்க சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, எமக்கு கள உத்தியின் அடிப்படையில் பல பயன்களை தந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தை விட புலிகளுக்கே அதிக இழப்பு ஏற்பட்டது.புலிகள் எம்மை தாக்கும்வரை காத்திருக்க முடியாது.அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை மேற்கொண்டோம்.இதைவிட, யாழ். முன்னணி காவலரண்களில் எமது படையினர் புலிகளுக்கு தொடர்ச்சியான இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.புலிகளுக்கு எதிரான போர் அநேகமாக இந்த ஆண்டுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார்.

நன்றி நிதர்சனம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயசிக்குறுவில் வாங்கிக்கட்டினது போல் திரும்பவும் வாங்கவும் திட்டமாம் . இவங்களுக்கு எத்தனை அடி குடுத்தாலும் திருந்த மாட்டங்கள் போல இனிமல் அடியோடுதான் பிரட்டி எறிய வேண்டும். தமிழர்களை அழிக்கவேண்டும் என்று சொல்பவனுக்கு முதல் வெடி வைக்கவேண்டும் அப்பொழுதான் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரும். சிங்களவர்களே உங்களை என்ன கேட்டோம் உங்கள் உரிமைகளை தாருங்கள் என்றா கேட்டோம் எமக்கிருக்கும் உரிமையை அனுபவிக்கவிடுங்கோ என்றுதானே கேட்டோம். நாம் கை நோகும் வரை உங்கள் வீடுக்கதவை தட்டிப்பார்த்துவிட்டோம் எதுவுமே கிடைக்கவில்லை இனிமல் கதவையுடைத்து எமக்கு வேண்டியதை நாங்களே பெற்றுக்கொள்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.