Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி

வீரகேசரி நாளேடு 7ஃ22ஃ2008 7:58:42 Pஆ - இந்திய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 275 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஇ அரசின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக 275 வாக்களும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 19 வாக்குக்களினால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்தது. மொத்தமாக 531 உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து அரசுக்கு ஆதரவு வழங்கி வந்த இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர்.

இதனால் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அரசுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்ட நிலையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும்இ பாதுகாப்பதற்குமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் பிரசாரப் போரில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு எப்போதோ தனது உயிர் போராட்டத்தை ஆரம்பித்து விட்டதாகவும் அது இனி உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி சபையில் கூறியிருந்தார்.இந்நிலையில்இ ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி வெற்றி பெறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். கடந்த இரு தினங்கள் 16 மணிநேரம் நம்பிக்கைத் தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆரம்பித்து வைத்தார். இதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். அவர் பேசுகையில்இ கடந்த 4 ஆண்டுகளில் இந்த ஆட்சி செய்தது போல் சுதந்திர இந்தியாவில் வேறு யாராவது மக்களுக்குச் செய்து இருக்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதம் 9.1 சதவீதத்தைத் தொடும் என்பது உறுதி.

நாம் நம்மை சீனாவோடுதான் ஒப்பிட வேண்டுமே தவிர நம்மை விட பெரிய அல்லது சிறிய நாட்டோடு ஒப்பிடக்கூடாது. சீனா அணுமின் உற்பத்திற்காக நிறைய முதலீடு செய்கிறது. ஹைடு சட்டம் என்பது அமெரிக்காவின் உள்நாட்டுச் சட்டம். அது இந்தியாவை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு கூறினார். அவரைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு விவாதத்தில் ராகுல் காந்தி எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

பாராளுமன்றத்தில் பேசிய அனுபவம் இல்லாததால் மிகவும் தயங்கித் தயங்கிப் பேசினார். அவர் பேசும் போதுஇ நான் ஒரு கட்சியைச் சார்ந்தவர் என்ற முறையில் பேசவில்லை. ஒரு இந்தியர் என்ற முறையில் பேசுகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி மிகவும் அவசியம். அதை அணுமூலம் தான் பெறமுடியும். இந்த எரிசக்தி இல்லாவிட்டால் ஏழ்மையாக உள்ள நமது நாட்டை முன்னேற்ற முடியாது என்ற கூறி தொடர்ந்து பேசினார்.

ஆனால் அவரைப் பேச விடாமல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் இடையூறு செய்தனர். அவர்களுடன் பாரதீய ஜனதா எம்.பி.க்களும் சேர்ந்து கொண்டு கூச்சல் போட்டனர். இதனால் ராகுல் காந்தி பலதடவை பேச்சை நிறுத்தி நிறுத்திப் பேசினார். சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இடையூறு செய்த எம்.பி.க்களைக் கடுமையாக எச்சரித்தார். இளம் எம்.பி. பேசுகிறார் அவரைப் பேச விடுங்கள் என்றார்.

ஆனாலும்இ அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ராகுல் காந்தி ஒரு வரி பேசினாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினார்கள். இதனால்இ கடும்கோபம் அடைந்த சோம்நாத் சட்டர்ஜி நீங்கள் அமைதியாக இருக்காவிட்டால் விவாதத்தை இப்போதே முடித்து விட்டு வாக்கெடுப்புக்கு சென்று விடுவேன் என்றார்.

அப்போதும் அவர்கள் அமைதி அடையவில்லை. எனவேஇ சபாநாயகர் சபையை ஒரு மணிநேரம் ஒத்திவைத்து சபை பிற்பகல் 2 மணிக்குக் கூடும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 2 மணிக்கு சபை கூடியது. பலத்த வாதப் பிரதிவாதங்களையடுத்து இரவு 7.30 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. நு-அயடை வழ ய கசநைனெ

நன்றி:- வீரகேசரி

நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி

இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கோரிய நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் பதிவாகின.

அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சில உறுப்பினர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டது என்று எழுந்த குற்றச்சாட்டு காரணமாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் சிறிது நேரம் தடைப்பட்டது.

இறுதியில் 19 வாக்குகள் கூடுதலாக பெற்று அரசு வெற்றி பெற்றது.

பல வாரங்களாக நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகள் மற்றும் இரண்டு நாட்கள் நடைபெற்ற கடுமையான நாடாளுமன்ற விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில்

சிறிய கட்சிகள் மற்றும் சில சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளும் கட்சி இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்துஇ ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டதையடுத்து இந்த நம்பிக்கை வாக்கை பிரதமர் மன்மோகன் சிங் கோரினார்.

அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்

மணிசங்கர் ஐயர்இ மத்திய அமைச்சர்இ காங்கிரஸ் கட்சி :.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு பெற்றிருக்கும் வெற்றி தாமே எதிர்பார்க்காத பெரிய வெற்றி என்று இந்திய நடுவணரசின் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் ஐயர் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இடதுசாரிகளின் ஆதரவில்லாத போதும் கூட தமது அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில்இ அடுத்த தேர்தலில் தமது கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று நம்பிக்கை தமக்கு தற்போது ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்திற்குள்ளேயே பணக்கட்டுக்கள் கொண்டு வந்து காட்டப்பட்ட சம்பவம் குறித்து கேட்டபோதுஇ இது வெறும் குற்றச்சாட்டு என்கிற நிலையிலேயே இருப்பதாகவும் இது தொடர்பான விசாரணைகள் நடந்து உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது குறித்து கருத்து கூறமுடியும் என்றும் அவர் கூறனார்.

இல. கணேசன்இ தலைவர்இ தமிழக பா ஜ க :

கையூட்டு கொடுத்ததாக குற்றச்சாட்டு

''அரசின் இன்றைய வெற்றி வாங்கப்பட்ட வெற்றி'' என்றும் இதனால் பாரதீய ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏதும் கிடையாது என்றும் கூறினார் இல கணேசன்.

எதிர்கட்சிகள் இனிமேல் மக்களை சந்தித்து அவர்களிடம் பிரச்சனைகளை முன்வைக்கப் போவதாகவும் தெரிவித்த கணேசன்இ அணு சக்தி ஒப்பந்தத்தை பாரதீய ஐனதா கட்சி எதிர்க்கவில்லை என்றும் அமெரிக்காவின் ஹைட் சட்டத்தைத்தான் பா ஜ க எதிர்கிறது என்றும் அவர் கூறினார்.

உ.ரா.வரதராஜன்இ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் :

நடுவணரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி என்பது அரசியல் மோசடி என்று வர்ணித்த உ.ரா.வரதராஜன்இ இது இடதுசாரிகளுக்கு அரசியல் பின்னடைவல்ல என்று கூறினார்.

இந்த வாக்கெடுப்பில் நடுவணரசு வெற்றி பெற்றிருந்தாலும்இ அடுத்தடுத்து அரசு மேலும் பல சவால்களை எதிர் கொள்ளவேண்டியிருப்பதாகவும்இ அதில் அரசு சிக்கல்களை சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் தொடர்வது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு விரைவில் கூடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

நன்றி:- பிபிசி

வாக்கெடுப்பில் அரசு வெற்றி: ஆதரவு- 275 எதிர்ப்பு-256

செவ்வாய்க்கிழமை, ஜூலை 22, 2008

டெல்லி: மக்களவையில் இன்று பெரும் பரபரப்புக்கு இடையே நடந்த நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

மி்ன்னணு எந்திரம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் மொத்தம் 487 வாக்குகளே பதிவாயின. இதில் அரசுக்கு ஆதரவாக 253 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்தனர். 2 பேர் வாக்களிக்கவில்லை என ஓட்டளித்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் ஓடி வந்து பிரதமருடனும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுடனும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

மீதமுள்ள சுமார் 54 எம்பிக்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தனர். இவர்களது வாக்குகளும் எண்ணப்பட்டபோது ஒட்டு மொத்தத்தில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும், எதிராக 256 வாக்குகளும் பதிவாயின. மொத்தம் 10 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என ஓட்டளித்தனர்.

முன்னதாக பிரதமர் பேசிய பின்னர் வாக்கெடுப்பு நடக்கும் என சபாநாயகர் அறிவித்தார். ஆனால், பிரதமர் தனது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துவிட்டார், பேசவில்லை.

இதையடுத்து ஓட்டெடுப்பு தொடங்கியது. நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என சபாநாயகர் அறிவிக்க ஆதரிப்போர் ஆம் என்றும், எதிர்ப்போர் இல்லை என்றும் குரல் தந்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரத்தில் வாக்களிக்குமாறு எம்பிக்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால், பாஜக எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டபடி இருந்ததால் ஓட்டெடுப்பு தாமதமானது. ஒருவழியாக 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. இறுதி முடிவு வெளியாக இரவு 8.25 மணியாகிவிட்டது.

மொத்தம் 541 வாக்குகள் பதிவாயின.

நன்றி தற்ஸ்தமிழ்

உண்மையில் கலைஞர் சாணக்கியத் தனமாகவே காய் நகர்த்தியிருக்கின்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அது வேண்டும், இது வேண்டும் என்று கோரிக்கை வைத்து டிமாண்ட் செய்து வாக்களித்திருந்தால் கலைஞரில் சோனியாவும், மன்மோகன்சிங்கும் வைத்திருக்கும் மரியாதையும் குறைந்திருக்கும். அது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தாலும், கலைஞரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்காது.

ஆனால் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் எந்தவித கோரிக்கையும் வைக்காததால் கலைஞரில் இன்னும் மரியாதை சோனியாவிற்கும், மன்மோகன்சிங்கிற்கும் கூடும். இதை வைத்து கலைஞர் தன் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயங்க மாட்டார். முக்கியமாக சேது திட்டத்தையும் ஒக்கேனேகல் திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பார்.

275 வாக்குகளைப் பெற்று தப்பியது மன்மோகன் அரசு! காங்கிரஸ் அரசு!

புதுடில்லியில் இந்திய மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு 19 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.

நாடாளுமன்றத்தில் நேற்று பலத்த கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நடந்த வாக்குப் பதிவில் காங்கிரஸ் அரசு மொத்தம் 275 வாக்குகளைப் பெற்றது. அரசுக்கு எதிராக 256 வாக்குகள் விழுந்தன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு பெற்ற வெற்றியுடன், கடந்த சில தினங்களாக இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் ஏற்பட்டிருந்த கடும் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும்.........

http://www.tamilseythi.com/world/manmohan-2008-07-23.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.