Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுதந்திர தமிழீழம் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் தொடர்ந்து போரை முன்னெடுக்கலாம் கச்சதீவு சட்டப்படி இந்தியாவுக்கு சொந்தம் என்கிறார் ஸ்ரீகாந்தா எம்.பி.

Featured Replies

வீரகேசரி நாளேடு - கச்சதீவு சட்டப்படி இந்தியாவுக்கே சொந்தமானது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் இந்தியா கச்சதீவை சுவீகரிக்கும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா எச்சரிக்கை விடுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கத்தால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என்பதை இந்தியா நன்கு அறிந்து வைத்துள்ளது. சுதந்திர தமிழீழம் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் தொடர்ந்தும் போரை முன்னெடுக்கலாம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட வியாபாரப் பண்ட அறவீட்டு கட்டளைச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீ காந்தா எம்.பி. மேலும் கூறியதாவது, வட கிழக்கில் தொடரும் யுத்தம் காரணமாக யாழ். நகரக் கடற் பகுதிகளில் உள்ள மீனவர்கள் 3 மாத காலம் மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொழிலுக்கு செல்லாத காலப் பகுதியில் மீனவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட இந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுக்குமாறு மீன்பிடித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அரசாங்கமும் ஜனாதிபதியும் யுத்தத்தை தொடர்வதில் விருப்பங் கொண்டுள்ள நிலையில் எந்தவொரு அதிசயம், அற்புதம் நிகழ்ந்தாலும் வாழ்க்கைச் செலவு உயர்வை கட்டுப்படுத்த முடியாது.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுக்கு வர வேண்டும் என தெரிவிக்கபடுகின்ற நிபந்தனை குறித்து அழுவதா சிரிப்பதா என தெரியவிவில்லை.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிவரும் நிலையில் கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்ற விடயம் தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., இடதுசாரிகள் என்ற கட்சி வேறுபாடின்றிக் இக்கருத்து வலியுறத்தப்படுகின்றது. இந்தியா தனது நிலப்பரப்பில் ஒரு அடியைக் கூட விட்டுக் கொடுக்க வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் 368 ஆவது பிரிவின் கீழ் சட்டத்திருத்தத்தைச் செய்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அத்தேhடு அங்குள்ள மாநில அரசுகள் அரைவாசிக்கு மேற்பட்டவை அதனை அங்கீகரிக்க வேண்டும்.

ஆனால் இந்திய முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பாராளுமன்றத்தின் அனுமதியை பெறாமலேயே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியுள்ளார். சட்டப்படி கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தமாக இருக்கின்றது. இந்தியா எப்போது விரும்பினாலும் கச்சத்தீவின் உரிமையை சுவீகரித்துக் கொள்ள முடியும்.

எனவே இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தாவிட்டால் பாரிய விபரீதமான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டி ஏற்படும்.

இந்தியா கச்சத்தீவினை கைப்பற்றினால் இந்திய கடற்படை கச்சதீவுக்கு சென்று நெடுந்தீவு கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்தால் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என்ற யதார்த்தத்தை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு உறவின் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற முடியாத யுத்தத்திற்கு வழங்கும் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளைக் கொண்டு இந்தியா இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இருப்பதாக கனவு காண வேண்டாம். தமிழக மீனவர்கள் இந்திய உயர் நீதிமன்றத்தின் கதவினை தட்டும் பட்சத்தில் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்ற பிரகடனம் வெளியிடப்படும். இந்தியாவில் மொத்த சனத் தொகையில் 80 வீதமானோர் இந்துக்கள். 6 1/2 கோடிப் பேர் தமிழர்கள் :) என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இன்னமும் காலந் கடந்து விடவில்லை. விடுதலைப் புலிகள் சார்க் மாநாட்டையொட்டி அறிவித்துள்ள யுத்தநிறுத்தமும் அரசாங்கம இந்த நாட்களில் விமானத் தாக்குதலையும், தாக்குதல் நடவடிக்கையையும் நிறுத்த தீர்மானித்துள்ளமை சமாதானத்துக்கான ஒளிக்கீற்றாகும். இலங்கை இரண்டாக உடைந்து சுதந்திரமான தமிழீழம் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் தொடர்ந்து போரை முன்னெடுக்கலாம்.

தமிழ் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையுடன் ஐக்கியமாக ஒரே நாட்டுக்குள் வாழ விரும்புகின்றார்கள். அதற்கான திறவுகோல் அரசாங்கத்திடமே உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.