Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதுமிந்த வாய்ப்பந்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போதுமிந்த வாய்ப்பந்தல்!

கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டு களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த இரண் டாண்டுகளில் மட்டும் கொல்லப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல்.

தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்து வதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வேடிக்கை என்னவென்றால், பல முறை இலங்கை இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து சுட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக் கின்றன. அவர்களைத் தாக்கவோ, தடுக் கவோ, அவர்களது ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தவோ இந்திய கடல் பாது காப்புப் படையினர் ஒரு தடவை கூட முயற்சிக்காதது ஏன் என்பதுதான் புரியாத புதிர்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது 1974ஆம் ஆண்டு. அப்போது இன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி இருந்தது. திமுகவுக்கும், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் அசுரப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த திமுக, இப்போது சேது சமுத்திரத் திட்டத்துக்காக உண்ணாவிரதம், ஆர்ப் பாட்டம், கடையடைப்பு என்று கள மிறங்கியது போல கச்சத் தீவு பிரச்னை யில் தமிழக உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்ததா என்றால் இல்லை.

"இந்திய மீனவர்கள் இன்றுவரை அனுபவித்துவரும் மீன்பிடிக்கும் உரிமை, இருநாட்டுக் கடல் பகுதிகளிலும் படகுகள் செலுத்தும் உரிமை, கச்சத் தீவுக்குச் சென்று வரும் உரிமை ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது" என்று அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் ஸ்வரண்சிங் நாடாளு மன்றத்தில் உறுதி அளித்திருக்கிறார். வேடிக்கை என்னவென்றால், கச்சத் தீவில் இந்திய உரிமையைத் தாரை வார்த்துக் கொடுக்கிறோம் என்று அரசைக் கண் டித்து கேள்வி எழுப்பியவர் பின்னாளில் பிரதமரான அன்றைய ஜனசங்க உறுப்பினர் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது கேள்விக்குத் தரப்பட்ட பதில் தான் மேலே குறிப்பிட்டது.

1976ஆம் ஆண்டு இன்னொரு ஒப்பந்தம் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களால் கையெழுத்திடப்பட்டது. அதன்படி மேலே குறிப்பிட்ட உரிமையும் பறிக்கப்பட்டது. கச்சத் தீவு இலங்கையி

லிருந்து 10 கடல் மைல்கள் தூரத்திலும், இந்திய எல்லையிலிருந்து 12 கடல் மைல்கள் தூரத்திலும் இருக்கும் சிறிய தீவு. 2 மைல்களின் வித்தியாசத்தைக் காரணம் காட்டி இலங்கை அரசு அதற்கு உரிமை கோரியபோது, நமது ஆட்சியாளர்கள் அதைத் தாரை வார்த்துக் கொடுத்தது மிகப்பெரிய தவறு.

1989லும், 1996லும், 1999லும் மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற திமுக, கச்சத் தீவு பிரச்னையையும், தமிழக மீனவர் களின் உரிமையையும் தனது ஆதரவுக்கு விலையாகக் கேட்டிருக்குமேயானால், நிச்சயமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாவிட்டாலும், இந்திய அரசின் நிர்பந்தங்கள் இலங்கை அரசின் செயல் பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக் கும். என்னென்னவோ துறைகளைக் கேட்டுப் பெற்றவர்கள் வெளியுறவுத் துறையைக் கேட்டுப் பெற்று இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகோர ஏன் முனையவில்லை என்பது திமுக மட்டுமல்ல, மத்திய ஆட்சியில் பங்கு பெற்ற தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு அளிக்க வேண்டிய தன்னிலை விளக்கம்.

இந்தப் பிரச்னையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் வருமான ஜெயலலிதா, ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசு அமைந்த போது, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கச்சத் தீவை இந்தியா ஏன் நிரந்தரக் குத்தகைக்கு எடுக்கக்கூடாது என்று யோசனை தெரிவித்திருந்தார். இப்போது முதல்வர் கருணாநிதி, கச்சத் தீவில் நமது உரிமைகளை மீட்பதற்கான தருணம் வந்துவிட்டதாகக் கருதுவதாகவும், தமிழர் ஒருவரை இலங்கை தூதராக்க வேண்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.

எங்கள் கட்சிக்காரரை வெளி விவ காரத்துறை அமைச்சராக்குங்கள் என்றோ, கச்சத் தீவில் நமது உரிமையை மீட்போம் என்றோ சொல்ல அவருக்கு ஏன் துணிவு வரவில்லை என்று புரிய வில்லை. 1974-ல் கச்சத் தீவைத் தாரை வார்க்கும்போதோ, 1976-ல் இந்தியா தனது உரிமைகளை விட்டுக் கொடுத்த போதோ மத்திய அரசுடன் முதல்வருக் கும் திமுகவுக்கும் சுமுகமான உறவு இருக்கவில்லை. உண்மை, ஆனால், இப் போது இருக்கிறதே! மத்தியில் ஆளும் கூட்டணியில் சர்வ வல்லமை படைத்த தோழமைக் கட்சியாக திமுக இருக் கிறதே! பிறகும் ஏன் சர்வதேச உடன்பாடு என்று நழுவுகிறார்கள்?

திமுகவோ, அஇஅதிமுகவோ, பாமகவோ, மதிமுகவோ, எதுவாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் இந்தியா வைச் சுற்றியுள்ள கடலில் மீன்பிடிக்கும் உரிமைக்கும் கச்சத் தீவின் மீது நமக் குள்ள உரிமைக்கும் உத்தரவாதம் அளிக் கப்பட்டால் மட்டும்தான், எந்தவொரு மத் திய அரசுக்கும் ஆதரவளிக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் தமிழ், தமிழன், தமிழர் நலன் என்று பேசுவ தெல்லாம் வெறும் வாய்ப்பந்தல்தான்!

- தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.