Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சப்ரகமுவவுக்கு ரஞ்சன் ராமநாயக்கா வெளியாளா? அமெரிக்கா அழைத்தால் கோதாபய, பசில் வெளியேற நேரிடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சப்ரகமுவவுக்கு ரஞ்சன் ராமநாயக்கா வெளியாளா? அமெரிக்கா அழைத்தால் கோதாபய, பசில் வெளியேற நேரிடும்

[27 - July - 2008]

* ஆளும் தரப்பினர் தெரிவிப்பது வேடிக்கை என்கிறார் ரணில்

அமெரிக்க அரசியலமைப்பின் படி அவசரகால நிலைமையின் கீழ் அந்நாட்டு அரசு தனது பிரஜைகள் அனைவருக்கும் யுத்தமொன்றில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தால் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருக்கும் கோதாபய ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷவும் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறன நிலையில் எமது சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளரான ரஞ்சன் ராம நாயக்காவை வெளிமாவட்டத்தவர் என்று ஜனாதிபதி மகிந்தவும் ஆளும் கட்சியும் கூறுவது வேடிக்கைக்குரியதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் மக்களை இன, மத, குல ரீதியாக பிரித்தாள முற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு நேற்று சனிக்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட ஐ.தே.க.அமைப்பாளர் திருமதி தலதா அத்துக் கோறள தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் ரணில் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசிய கட்சி அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து ஐக்கிய இலங்கையை உருவாக்க முயற்சி செய்கின்றது.

ஆனால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் அதன் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனைத்து இன மக்களையும் பிரித்து வேறுபடுத்தி அதில் குளிர் காய விரும்புகின்றார்.

வட,கிழக்கு மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். தென்பகுதி சிங்கள மக்களும் பிரிக்கப்பட்டுள்னர். இவர்கள் இன, குல, மத, மொழி ரீதியாக பிரிந்துள்ளனர்.

தென்பகுதி ரயிலில் மெதமுதலன பகுதிக்கு தனியான வகுப்புகள் (முதலாந்தரம்) ஏற்படுத்தப்பட்டு அதில் ராஜபக்ஷ கம்பனியினர் பயணிக்கின்றனர். இந்த ரயிலில் தென்பகுதி சிங்கள மக்கள் இன ரீதியாக பிரிந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் மணல், குப்பைகள் அள்ளிச் செல்லும் ரயில் பெட்டியில் பயணிக்கின்றனர். முஸ்லிம்கள் மிதிபலகையில் பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு பலரையும் பல வகையில் பிரித்து ஆட்சி செய்யும் போது ராஜபக்ஷ கம்பனியினர் மெதமுதல அணியினர் அவரது ஆதரவாளர்கள் ஊழல் மோசடியிலீடுபடுகின்றனர். இது குறித்து வெளிக் கொணரும் பட்சத்தில் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றன. இதுதான் இன்றையயதார்த்த பூர்வமான உண்மையாகும்.

அமெரிக்காவின் அரசியலமைப்பினை ஆதரிப்பதுடன் அதற்கு தலை வணங்குவதுடன் அதற்கு கட்டுப்படும் ஒருவர் எவ்வாறு ரஞ்சன் ராமநாயக்காவை அந்நியன் என்று சொல்ல முடியும். ஆனால் அவர் இந்நாட்டு பிரஜையாவார்.

இந்நாட்டு பிரஜைக்கு இலங்கை மக்கள் மதிப்பும் மரியாதையும் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். அதனையே ஐ.தே.கட்சியும் செய்கின்றது. இது தவறா? அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போல் வெளிநாட்டு பிரஜைகளை கொண்டு நாட்டை ஆட்சி செய்வதா? என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

புலிகளுடன் இரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்து சுயநல நோக்கத்துடன் ஆட்சி செய்யும் மகிந்த ராஜபக்ஷ எமது கட்சியினர் அப்பகுதி மக்கள் இப்பகுதி மக்கள் என்று கூறுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

இரத்தினபுரி மாவட்ட அமைச்சர் ஜோன் செனவிரட்ன சப்ரகமுவ தேர்தலில் போட்டியிடும் பவித்ர வன்னியாராச்சியின் கணவர் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள்? அவர்கள் இரத்தினபுரியை சேர்ந்தவர்களா? இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தர்மதாச வன்னியாராச்சி, நந்தா மெத்தியூ ஆகியோரை வெளி மாகாணங்களுக்கு ஆளுநராக நியமிக்கவில்லையா? அமைச்சர் மேர்வின் சில்வாவை களனிக்கு நியமிக்கவில்லையா? இவ்வாறன நிலையில் எமது முதலமைச்சர் வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்காவை விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐ.தே.க. இன, மத, குல, மொழி என பிரித்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. அனைவரையும் ஒன்றிணைத்து ஐக்கிய இலங்கையின் கீழ் ஒரே நாட்டு மக்கள் என்ற ரீதியில் ஆட்சி செய்ய முயற்சி செய்கின்றது. இக்கட்சியையே நாட்டு மக்கள் ஆதரிப்பர்.

ராஜபக்ஷ கம்பனியினரின் ஊழல் மிக்க கொடுங்கோல் ஆட்சியை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் அனைவரும் தமது இன, மத, மொழி வேறுபாட்டை மறந்து ஒன்றிணைய வேண்டும். தென்பகுதி மக்களிடையே குறிப்பாக சிங்கள மக்களிடையே பௌத்த சிங்களவர், கிறிஸ்தவ சிங்களவர் என்ற பேதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முனைகின்றது. இதற்கு எவ்விதத்திலும் மக்கள் அடிபணிய கூடாது என்றார். இக்கூட்டத்தில் அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்க, செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

thinakural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.