Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10ம் வகுப்பு மட்டும் படித்த ராஜதந்திர அறிவில்லாத அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவர்

Featured Replies

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலியவிக்கிரமசூரிய மகிந்தவின் மைத்துனர் முறையிலானவரென்றும்,10ம் வகுப்பு மட்டும் படித்த ஒரு வர்த்தகர் மட்டுமே இவருக்குரிய தகுதியென கொழும்பு வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

இலங்கையின் ராஜதந்திர நிர்வாகிகளை மலினப்படுத்திய நியமனமென தெரிவிக்கின்றன.

அத்துடன் இவருக்கான ஆலோசகராக கருணாவை இலங்கை அரசுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் ஜக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தராகவிருந்த அலிசாகிர் மௌலானவை அமெரிக்க தூதரகபணியில் அமர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

புகைபடத்தை பார்க்க..........

http://isoorya.blogspot.com/2008/07/10_30.html

சிறீலங்காவுடன் உறவை வலுப்படுத்துவதில் ஆர்வம் - அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ் !

சிறீலங்கா அரசுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் தமது அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, அமொரிக்க அரசுத் தலைவர் ஜோர்ஜ் புஸ் தெரிவித்திருக்கின்றார்.

18ஆம் நூற்றாண்டில் இருந்து அமெரிக்காவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் நீடித்து வருவதாக, அமெரிக்க அரசுத் தலைவர் கூறியதாக, சிறீலங்காவின் பாதூகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான சிறீலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரியவை, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் சந்தித்தபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கான சிறீலங்காவின் தூதுவராக இருந்த பேர்னாட் குணதிலக்கவின் பதவிக்காலம் முடிவடைந்து, அந்தப் பதவிக்கு சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் மைத்துனரான ஜாலிய விக்கிரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான 15வது தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலிய விக்கிரமசூரியவின் நியமனம் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மற்றொரு மோசமான நடவடிக்கை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பின் சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

48 அகவையுடைய ஜாலிய விக்கிரமசூரிய உயர்தர வகுப்புக் கல்வி மட்டுமே கற்றிருப்பதாகவும், அமெரிக்காவில் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார் எனவும் இந்தப் பத்திரிகை மேலும் கூறியிருந்தது.

http://www.tamilseythi.com/srilanka/bush-2008-07-30.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலியவிக்கிரமசூரிய மகிந்தவின் மைத்துனர் முறையிலானவரென்றும்,10ம் வகுப்பு மட்டும் படித்த ஒரு வர்த்தகர் மட்டுமே இவருக்குரிய தகுதியென கொழும்பு வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

இவர்தான் அந்த கூட்டுகளுக்குள்ளை கனக்க படிச்சவரோ ஆருக்குத்தெரியும்? :lol:

எனக்கொரு சந்தேகம் உந்தச் செய்தியை இணைச்சவை சுட்ட இடத்தை போடலை. அப்படியென்றால் நிகழ்ச்சிக்கு இவைக்கும் அழைப்பு வந்து தான், போய் செய்தி சேகரிச்சிருப்பினம். :lol: 10ம் வகுப்பு படிச்சவற்றை நிகழ்ச்சிக்கு எப்படியும் 10ம் வகுப்பிற்கு கீழை படிச்சவையைத் தான் கூப்பிட்டிருப்பினம். :lol:

Edited by Vasampu

ஓகோ அவன் பதெ;தது பத்தோ பதினொன்றோ இதை சொல்லிச் சொல்லி எங்கட ஈட்கள் காலம் ஓட்டுவினம் பிறகு அமெரிக்காவில அவன் உள்ளுக்குள்ளா வேலை செய்து எங்களுக்கு தடை வரும் பொழுது தான் ஓடுப்பட்டு திரிவம் .

முதலில அவன் 10 வகுப்பு படிச்சானோ அல்லது மகிந்த தான் சித்தி பெற வைச்சது எங்களுக்கு தேவையில்லை எங்களில எத்தனை பேர் மிக சிறந்த கல்விதான்களாக உலகத்தின் நாலாபக்கங்களிலும் இருந்து கொண்டும் இவற்றிற்கு எதிராக எதுவும் செய்யமால் ( பொங்கு தமிழ்களை தவிர்த்து) ராஐதந்திர ரீதியில் இருப்பது எவ்வவு முட்டாள் தனம் என்று யோசிச்சுப் பாருங்கோ ! அல்லது செய்யபடுவது எவ்வளவு தூரம் எடுபட்டிருக்கின்றது என்று பாருங்கோ !

அதைச் சொன்னால் சொல்லவியள் அவன் அரசாங்கம் ஆனால் நாங்கள் அப்பிடியில்லை இயக்கம் ஓரு விடுதலை அமைப்பு என்று விளக்கம் சொல்லுவியள் ஆனால் பாருங்கோ ! எங்கள் பல பேர் பல வருடமாக இதை தான் புலம்புறம் ஆனால் சமாதான நேரத்தில வந்த பல வெளிநாட்டுகள் அல்லது தொடர்பு நிறுவனங்கள் " தமிழிழம் " என்பதை நடைமுழற அரசு அல்லது அரை - நிர்வாக அரசு என்று ஏற்று கொண்டுள்ளதை இன்னும் பல பேர் விளங்காம்ல அவன் அரசு இவன் அரசு என்ற புலம்புறதை விட்டு அரை- நிலையில் உள்ள எமது அரசாங்கத்தை

1.எவ்வாறு முழு நிலைக்கு மாற்றலாம்

2அல்லது அந்த அரசிற்கு நடைமுறை கால கட்டத்தில் ஏற்படக்கூடிய ராஐ தந்திர அழுத்தங்கள் அல்லது நெருக்கடிகளை எவ்வாறு தவிர்க்கலாம்

3.அல்லது ஏற்கனவே ஏற்பட்டுள்ள தடைகளை எவ்வாறு நீக்கலாம்

4.அல்லது " தமிழிழம்" என்ற நாட்டுக்கு எதிராக போர் நெருக்கடி கொடுக்கின்ற " சீறிலங்கா" என்ற அரசிற்கு எவ்வாறு சர்வதேச நிலையில் நெருக்கடிகளை கொடுக்கலாம்

5.அல்லது நாடுகளை எவ்வாறு எமக்க சார்பாக மாற்றி நிலைமையை எமக்கு சார்பாக மாற்றலாம் .

என்று சிந்தித்து செயற்படுங்கொ எற்று சொன்னால் சொல்லுவியள் எல்லாம் புலிகள் பார்ப்பினம் என்று .

- எங்கள் ஊரின் தேரை நமது ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து இழுக்க வேண்டுமே தவிர வெறுமனமே கோயில் புசகர்கள் அல்ல -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.