Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்க அமைச்சர் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதம் வழங்கியுள்ளார்- ரவூப் ஹக்கீம்

Featured Replies

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் தனது தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பான குற்றச்சாட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அண்மைய அறிக்கையிலும் முன்வைக்கப்பட்டிருந்ததாக ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டபோது சுட்டிக்காட்டினார்.

ஒருவர் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதி வெள்ளைவான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் விடுத்திருக்கும் அறிக்கையையும் ஹக்கீம் மேற்கோள்காட்டியிருந்தார்.

“இவ்வாறு கடத்தப்பட்டவர் கடுமையாக சித்திரவதைப்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்” எனவும், இதேபோன்ற சம்பவங்கள் பல இடம்பெற்றிருப்பதாகவும் ஹக்கீம் கூறினார்.

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய முஸ்லிம் காங்கிரசின் தலைவர், சில சம்பவங்களுடன் அரசாங்கமும் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு சார்க் தலைவர்கள் அனைவரும் இணங்கியுள்ள நிலையில், சார்க் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய எந்தவொரு சார்க் தலைவரும் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டிப் பேசவில்லையென முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கூறியிருந்தார்.

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியத் தூதுரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் படுகொலை போன்றவற்றை சார்க் தலைவர்கள் கண்டித்திருந்தபோதும், இலங்கையில் இடம்பெற்ற எந்தவொரு தாக்குதலையும் அவர்கள் சுட்டிக்காட்டவில்லையெனவும், இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சே பொறுப்பு எனவும் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.