Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேவல ஆட்சியிலிருந்து மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாட்டில் ஆட்சித் துறையால் அரங்கேற்றப்படும் அராஜகங்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் எல்லை தாண்டி விட்டன. அவற்றுக்கான தண்டனைக்கு நியாயத்துக்கு நாட்டு மக்கள் இறைவனிடம்தான் இறைஞ்சவேண்டும் போல உள்ளது.

அப்படித்தான் மக்களை வழிப்படுத்தும் நிலைக்கு வழிகாட்டும் கட்டத்துக்கு ஆட்சிப் பீடத்தின் முக்கிய பங்காளியான அமைச்சர்களே தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க, அரசின் ஊடகத்துக்குள்ளேயே ஓர் அமைச்சர் குண்டர் குழுவுடன் புகுந்து காட்டுத் தர்பார் பண்ணுகின்றார்; அராஜகம் புரிகின்றார். அந்த அட்டூழியங்களை அடுத்துக் கட்டவிழ்ந்த "கேவலங்கள்' அரச தொலைக்காட்சி ஊடகத்திலேயே நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவ்வளவுக்கும் பின்னரும் இந்தக் கோணங்கித்தனத்தை ஒட்டி சட்ட ரீதியாகக் காத்திரமான நடவடிக்கை ஏதுமில்லை.

அதற்கு மாறாக, அமைச்சரின் அட்டகாசங்களைத் தட்டிக் கேட்க முனைந்தவர்கள், அந்த முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் என்று பலரும்வரிசையாகத் தாக்குதலுக்கு இலக்காகின்றார்கள். பிளேடுகளால் வெட்டப்படுகின்றார்கள். இனந்தெரியாத குழுக்களினால் நையப் புடைக்கப்படுகின்றார்கள்.

இவ்வளவும் போதாது என்று பகல் வேளையில், பலநூற்றுக்கணக்கானோரும், பொலிஸாரும் நேரில் பார்த்திருக்க ஊடகவியலாளர்களின் "கமரா'க்களைப் பிடுங்கி, அபகரித்துச் செல்கிறார் அதே"சண்டித்தன' அமைச்சர். அவரது அந்த அட்டகாசமும் பிற கமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அட்டூழியங்களுக்கெல்லாம் நடவடிக்கை ஏதுமே இல்லை.

நாட்டின் ஆட்சித் தத்துவமே அராஜகமாகிவிட்டதால், அந்த ஆட்சி முறைமையின் ஓர் அங்கத்தவரின் அட்டகாசத்தைத் தட்டிக்கேட்க வக்கற்ற லாயக்கற்ற நிலைக்கு ஆட்சித் தலைமை தள்ளப்பட்டுவிட்டது.

இதனால் விசனப்பட்டு ஆதங்கப்பட்டு மனம் உடைந்து போயுள்ள சக அமைச்சர்கள் இந்த அட்டூழியங்களுக்கெல்லாம் இறைவன்தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கடவுளிடம் இறைஞ்சவேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.

மேற்படி "சிரச' புகைப்படப்பிடிப்பாளர்கள் தாக்கப்பட்டு அவர்களின் கமராக்களை அரசின் அமைச்சர் ஒருவர் பறித்த வன்முறைப் போக்குக்காகத் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியிருக்கின்றார்.

இந்த அநாகரிகச் சம்பவம் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு ஊடகவியலாளர்களை அழைப்பு அனுப்பி வரவழைத்தது தமது அமைச்சே என்று தெரிவித்த அவர், அங்கு அரச அமைச்சர் ஒருவர் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறு கேவலமாக நடந்து கொண்டமைக்காகத் தாம் வெட்கமும் வேதனையும் அடைகின்றார் என்று கூறியிருக்கின்றார்.

இதேபோல இந்த அமைச்சரின் செயலுக்கு இறைவன்தான் உரிய தண்டனை வழங்கவேண்டும் என அவரது கட்சியின் செயலாளரும் மற்றொரு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

இவற்றை நோக்கும்போது நமக்கு இரண்டு விடயங்கள் தெளிவாகப் புரிகின்றன.

ஒன்று இவ்வாறு அராஜகம் புரியும் அமைச்சரை அல்லது ஆட்சித் தரப்புப் பிரமுகரை நேரடியாகத் தண்டிப்பதற்கு அரசுத் தலைமைக்குத் தைரியமோ, திடமான துணிவு நிலையோ இல்லை என்பது.

அடுத்தது இத்தகைய அராஜகத்தை நேரடியாகக் கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ ஆட்சிப் பீடத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் கூடத் துணிவும் இல்லை என்பது.

ஒளித்து மறைத்து, வழுவி, நழுவிக் கண்டிக்க வேண்டிய நெருக்கடியில் அவர்கள் உள்ளனர்.

அவரைக் கண்டித்தால் அவரது அராஜகங்களை விமர்சித்தால் அரசுத் தரப்பில் தங்களது கதை காலியாகிவிடும் எனப் பிற அரசுத் தரப்பு எம்.பிக்கள், அமைச்சர்கள் கருதுகின்ற அஞ்சுகின்ற சூழல்.

இது ஒரு தனி அமைச்சரின் செயற்பாடு சம்பந்தப்பட்ட விவகாரத்துடன் மட்டும் அடங்கும் விடயமல்ல.

நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேசிய இனப்பிரச்சினை கூட இதுபோன்ற "சண்டித்தனப் போக்கில்தான்' அணுகப்படுகின்றது. அதிலும் கூட நீதி, நியாயம், தார்மீகம் குறித்தெல்லாம் குரல் காட்டக் கூட முடியாத நிலையில்தான் பல அமைச்சர்கள் இருக்கின்றார்கள்.

ஊடகத்திற்கு எதிரான ஓர் அமைச்சரின் அடாவடித்தனத்துக்குரிய தண்டனையைக் கடவுள்தான் வழங்க வேண்டும் என்ற நீதியையாவது குறிப்பிடும் சக அமைச்சர்களால், தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தை அரசுத் தலைமை கையாளுகின்ற கேவலத்தை ஒட்டி, "இறைவன் தான் நீதி செய்ய வேண்டும்' என்ற கூற்றைக் கூட வெளிப்படையாகக் கூற முடியாமல்தான் இருக்கின்றது.

இறைவன்தான் இந்தக் கொடூர ஆட்சிப் பொறுப்பிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும். அந்த உண்மையை இன்று ஆட்சிக் கட்டின் பங்காளிகளான அமைச்சர்களே பகிரங்கமாகக் குறிப்பிட்டு, ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நாடு கேவலமாகிவிட்டது.

நன்றி

http://www.uthayan.com/

பலவிதமான செய்திகளுக்கு http://puspaviji.blogspot.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.