Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோர்ஜியாவில் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியாவின் பிரதமர் mikheil saakashvili ரஸ்யாவின் தாக்குதலில் மயிரிழையில் தப்பும் காட்சி, இன்னும் பல கீழுள்ள இணைப்பில்.

http://edition.cnn.com/2008/WORLD/europe/0...urs#cnnSTCVideo

  • Replies 55
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஒசெட்டியாவிலிருந்து ஜோர்ஜிய படைகள் வாபஸ் மோதல்களில் 2 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்

[11 - August - 2008]

ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து போன தென்ஒசெட்டியாவிலிருந்து தமது படைகளை வாபஸ் பெற்றுள்ளதாக ஜோர்ஜியாவின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இது இராணுவ ரீதியிலான தோல்வி அல்ல எனத் தெரிவித்திருக்கும் உள்நாட்டமைச்சின் பேச்சாளர் மனிதப் பேரழிவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜோர்ஜியா தலைநகர் திமிலிசியிலுள்ள இராணுவ விமானத் தளங்கள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

இதில் அதிகளவான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாமெனக் கருதப்படும் அதேவேளை இது தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

தென் ஒசெட்டியாவின் தலைநகரை ரஷ்யப் படைகள் தற்போது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஒசெட்டியா மற்றும் ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்த மற்றொரு மாகாணமான அப்ஹாஸியா போன்றவற்றின் எல்லைப் பகுதிகளில் சுமார் 10,000 துருப்புக்களை ரஷ்யா குவித்துள்ளதாக ஜோர்ஜியா தெரிவிக்கின்றது.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஜோர்ஜியாவின் ரஷ்ய எல்லைப் பகுதியில் தென் ஒசெட்டியா அமைந்துள்ளது.

1990 களின் முற்பகுதியில் இடம்பெற்ற போரின் போது இழந்த தென் ஒசெட்டியா மாகாணத்தை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜோர்ஜியா முயற்சிக்கிறது.

ஆனால் தமது பிராந்தியத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரும் தென் ஒசெட்டியாவின் பிரிவினைவாதிகளுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

அத்துடன் ஜோர்ஜியர்களிடமிருந்து இனரீதியில் வேறுபட்டிருக்கும் தென்ஒசெட்டிய மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலை ஜோர்ஜிய படைகளுக்கும் தென் ஒசெட்டிய பிரிவினை வாதிகளுக்குமிடையில் கடந்த வியாழக்கிழமை கடும் மோதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது.

ரஷ்ய பிரஜைகள் எங்கிருந்தாலும் பாதுகாக்க வேண்டியது தமது கடமையெனவும் அதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மித்விடேவ் தெரிவித்துள்ள அதேவேளை ரஷ்யாவின் நடவடிக்கை முற்று முழுதாக சட்ட ரீதியானதென பிரதமர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வியாழக்கிழமையிலிருந்து இடம்பெற்று வரும் மோதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படாத போதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டுமென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ள அதேவேளை தமது தரப்பில் 300 பேர் பலியானதாக ஜோர்ஜியா தெரிவிக்கின்றது.

இதேவேளை தென் ஒசெட்டியாவிலிருந்து கடந்த 36 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக புட்டின் தெரிவித்துள்ள நிலையில் தமது இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் தமது தரப்பில் 13 படையினர் பலியானதுடன் 70 பேர் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஜோர்ஜியா மீது நடத்திவரும் தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அமெரிக்கா ஜோர்ஜியாவின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் ரஷ்யா மதிப்பளிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளது.

இதேவேளை இத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்துள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இம் மோதல்களுக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்த முயற்சிகளுக்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவொன்று ஜோர்ஜியாவுக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

thinakural.com

உலக அரசியலில் சில மாற்றங்கள் வரலாமென எதிர்பாக்கலாம் . ஆனால் பழைய சோவியத் குடியரசில் உக்கிரைனின் இரும்புவளத்திற்காக ரஸ்யா அங்கேயே பல ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவியிருந்தது அது இண்டைக்கு ரஸ்யாவிற்கு ஆப்பாக அமையபோகுது அதைவிட உலகின் கள்ளசந்தை ஆயுத விற்பனையில் உக்கிரைன் கொடிகட்டி பறக்கிது.இதை ரஸ்யா எப்படி கையாளப்போகிறதென்டிறதூான் பிரச்சனை . காரணம் அமெரிக்காவிற்கு பிடிக்காத ஆக்களிற்கும் உக்கிரென் ஆயுதம் வழங்கிது. ஆனால் ஜரோப்பா உக்கிரெனை உள் வாங்க நினைக்கிது. பாப்பம்.

ஒ..அப்படியோ சாத்திரி அங்கிள்..அது என்ன எல்லாரும் எடுத்தவுடன் உலக அரசியலில பல மாற்றங்கள் வரலாம் எண்டு சொல்லுறியள்.. :lol:

வானிலை மாற்றத்தையே ஒழுங்கா சொல்லீனம் இல்லை..இதில..முடியல.. :) சரி..சரி என்னோட கோவிக்காதையுங்கோ எண்ட சந்தேகத்தை கேட்டனான் பாருங்கோ..கோ..அடுத்த எண்ட பதிவில..."ஜோர்சிய சண்டையும்..தமிழ் தேசியமும்" எண்டு ஒரு கட்டுரையை நான் எழுதவோ..அந்த மாதிரி இருக்கு எண்டு நினைக்கிறன்..நீங்க என்ன நினைக்கிறியள்..சாத்திரி..ரி..அ

ரஸ்யா மீது கேஸ் போடினமாம்( வழக்கு) நெதர்லாந்த் நாட்டில் இருக்கும் உலக குற்றவியல் நீதி மன்றத்திலாம்.

அனால் 85 ஆயிரம்( 2 ஆண்டுகளீல் 7 ஆயிரம் ) மக்களை படுகொலை ச்எய்த மகிந்தா மீது யாரும் வழக்கு போட முடியாது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போடத்தானே செய்வினம். அடிவாங்கினது அமெரிக்காவும் நேட்டோவும் எல்லோ.

அமெரிக்கா கத்தியோ கத்திப் பாத்திச்சுது. பிரிட்டன் வேற அணுங்கிப் பாத்திச்சுது. நேட்டோ முறிக்கிப் பாத்திச்சுது.

ரஷ்சியன் காரன் அடிச்சு.. தூரக் கொண்டு போய் விட்டிடுத்தான்.. அடுத்த அலுவல் என்றிட்டான்.

உலகப் பொலிஸ்காரன்.. பாவம்.. விடுப்புப் பார்த்திட்டு இருந்தவர் எல்லோ. ஆத்திரம் பொங்கத்தான் செய்யும்.

உண்மையில கேஸ் ஜோர்ஜியா மீதே பதியப்பட வேண்டியது. அதுதான் 2000 மக்களைக் கண்மூடித்தனமாக ஓரிரவுக்குள் கொன்று குவித்தது..! ஆனால்.. ரஷ்சியா மீது.. வேடிக்கை.

அமெரிக்காவின் அச்சுறுத்தலையே பொருட்டுக்கும் மதிக்காத ரஷ்சியாவை.. இவை புடுங்குவினம்..! :rolleyes::icon_idea:

இந்தச் சண்டையின் பின் இன்று ஒரே நாளில் நடந்தவை என்ன கீழுள்ள இணைப்பில்..

http://www.russiatoday.com/news/news/28860

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியாவின் பல நகரங்களில் ரஷ்யப் படைகளின் பிரசன்னம் அரைவாசி நாடு துண்டாடப்பட்டதாக ஜனாதிபதி சாகாஸ்வில்லி தெரிவிப்பு

[13 - August - 2008]

ஜோர்ஜியாவில் இரண்டாவது களமுனையொன்றை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்த இரு மாகாணங்களுக்கு அப்பாலும் கவச வாகனங்களை அனுப்பிக் கொண்டிருப்பதுடன் அந்நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இராணுவத் தளமொன்றையும் ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய களநிலைவர தகவல்களின்படி ரஷ்ய துருப்புக்கள் ஜோர்ஜிய நகரங்கள் மீது படையெடுப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அப்ஹாஸியாவின் பிரிவினைவாத போராளிகளும் ஜோர்ஜிய படைகள் மீது தாக்குதலை தொடுத்துள்ளனர்.

தென் ஒசெட்டியாவைச் சூழ அதிகளவான ஜோர்ஜியப் படைகள் மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையிலேயே ஜோர்ஜிய நகரங்களுக்கும் நுழையும் முயற்சிகளை ரஷ்யா மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கோரி நகரத்தை திங்கட்கிழமை இரவு முழுமையாக கைவிட்டு ஜோர்ஜிய இராணுவம் அகன்றுவிட்டது. அதேசமயம், ரஷ்ய கவச வாகனங்கள் ஜோர்ஜியாவின் மத்திய, மேற்குப் பிராந்தியங்களுக்குள் அதிக தூரம் ஊடுருவியுள்ளன. தனது நாடு அரைவாசியாக துண்டாடப்பட்டுவிட்டதாக ஜோர்ஜிய ஜனாதிபதி சாகாஸ்வில்லி கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நெருக்கடி ஏற்பட்ட பின்னர் முதற் தடவையாக அப்காசியாவுக்குள் அப்பால் படைகள் பிரவேசித்ததை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது. அப்காசியாவானது மொஸ்கோவின் பாதுகாப்பிலிருந்து பிரிந்து சென்ற மற்றொரு பிராந்தியமாகும். ஜோர்ஜியாவிலுள்ள செனாகி நகரம் ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தென் ஒசெட்டியா மற்றும் அப்காசியா எல்லைகளுக்கு அப்பால் நிலைகொள்ளும் நோக்கம் தமக்கில்லையென ரஷ்ய அதிகாரிகள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.

மேற்குப் பகுதியில் சுகுடிடி, குர்சா நகரங்களையும் தமது கட்டுப்பாட்டில் ரஷ்யப்படைகள் கொண்டு வந்திருப்பதாகவும் தலைநகர் திபிலிசியை நோக்கி வடக்கு, மேற்குப் புறங்களில் கவச வாகனங்கள் நகர்த்தப்படுவதாக தென்படுவதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.

இதேவேளை, தற்போது ரஷ்யாவின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தென் ஒசெட்டியாவின் எல்லைப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்ட வண்ணம் இருப்பதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.

திபிலிசியிலிருந்து 50 மைல் நெடுகிலும் கவசவாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள் சகிதம் ஆயிரக்கணக்கான ஜோர்ஜியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. திபிலிசிக்கான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஜோர்ஜிய ஜனாதிபதி சாகஸ்வில்லி யுத்தநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளபோதும் தென் ஒசெட்டியாவை நோக்கி ஜோர்ஜியா ஆட்லறிகளை ஏவிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தென் ஒசெட்டியாவின் இலக்குகள் மீது ஜோர்ஜிய ஹெலிகொப்டர்கள் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செனாகி நகரெங்கிலும் ஆயுதம் தாங்கிய ரஷ்ய துருப்புக்களை காணக்கூடியதாக உள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.

டாங்கிகள் சகிதம் சுமார் 7000 ரஷ்ய துருப்புக்கள் திபிலிசியை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக ஜோர்ஜியாவின் உள்நாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

கோரி நகரை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜோர்ஜிய அரசாங்கம் சர்வதேச உதவியை நாடியுள்ளது.

ஜோர்ஜியாவின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் என்பவற்றை ரஷ்ய துருப்புக்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாகவும் திபிலிசி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.