Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் புரட்சி வெற்றி பெற்றது!

மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் பிரசன்ட

mavoer4.jpg

அண்மைக்காலத்தில் ஆயுத மோதல்கள் நடைபெற்ற பல நாடுகளில் சமாதானத்துக்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அவ்வாறு சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு அண்மையில் உள்ள நேபாளமும் ஒன்று. அங்கு இரண்டு தசாப்தங்களாக அரசுக்கு எதிராக மக்கள் விடுதலைக்காக போராடி வந்த மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் நேபாள அரசாங்கத்திற்குமிடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அவ் வுடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்னர் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியல் இத்தாலியப் பத்திரிகை ஒன்றுக்கு நேபாள மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் பிரசண்ட வழங்கிய நேர்காணல் இது. நேர்கண்டவர் அலெக்ஸ்ஸான்ரா கிலியோலி.

பிரசண்ட, நாங்கள் தற்போதைய நிலைமைகளிலிருந்து ஆரம்பிப்போம். இப்போது போர் முடிவுக்கு வந்து விட்டது. நீங்கள் காத்மண்டுவுக்கு வந்து விட்டீர் கள். போக்குரவத்திலிருந்து நகரை தூய்மையாக வைத்திருப்பது உட்பட அனைத்து வழிகளிலும் இப்போது மாவோயிஸ்ட் பொலிஸார் தலைநகரை நிர்வகிக்கிறார்கள். உங்களுடைய சுவரொட்டிகள் எங்கும் காணப்படுகின் றன. இவையனைத்தும் நீங்கள் ஏற்கெனவே போரில் வென்று விட்டதா கவே எனக்குக் தோற்றுகின்றது. அது உண்மை தானா?

* நாங்கள் இதனை முற்றாகச்சரி எனக்கூற முடியாது. ஆனால் நீங்கள் கூறியது எல்லாமே நடை பெறுகிறது. எங்களுடைய புரட்சி இன்னமும் முழுமையாக வெற்றி யடையவில்லை. இன்று நாட்டில் நாங்களே பிரதான அரசியல் சக்தி என்றவகையில் சமூக பொருளா தாரக் கட்டமைப்பை மாற்றிய மைத்தல். மக்களுக்கு அதிகா ரத்தை அளித்தல் ஆகிய நடவடிக் கைகளை பாரியளவில் முன் னெடுத்து வருகிறோம். நாங்கள் நினைக்கிறோம். அவற்றில் 60 வீதமான இலக்கை இப்போது நாம் அடைந்து விட்டோமென்று. மீதி 40 வீதத்தையும் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலின் மூலம் அடைந்து விடலாம் என வும் நினைக்கிறோம்.

இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

* ஒரு வருடம் வரை செல்லலாம் என நினைக்கிறேன். நாங்கள் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை 6-7 மாதங்களில் வைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதேகாலப்பகுதியில் நாட்டினுள் மிகப் பெரிய சமூக பொருளாதார மாற்றங்கள் நிகழும். அதனோடு இதில் வெற்றியடைவோமென்று நான் நம்புகிறேன்.

உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

* எல்லா ஜனநாயக சக்தி களையும் இணைத்து குடியரசுக் கான முன்னணி ஒன்றை அமைப் பதற்கான ஒரு திட்டத்தை உத்தே சித்துள்ளோம். தனியே இடது சாரிகளைக் கொண்டதல்ல அது. தாராளவாதிகள், முற்போக்குவாதி கள் அனைவரையும் கொண்டதாக அது இருக்கும். நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவத்திற்கு எதிராக நாங்கள் நாட்டில் உள்ள எல்லா குடியரசு சக்திகளையும் ஐக்கியப் படுத்தவே விரும்புகிறோம்.

குடியரசு அரசாங்கம் ஒன்றை கருத்துக் கணிப்பினூடாகவா அல்லது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலூடாகவா அமைக்க எண்ணு கிறீர்கள்?

* சரியாகச் சொன்னால் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் வாய்ப்பாக உள்ளது. கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு என்பது இப்போது சாத்தியமில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி போன்றன இந்த விடயத்தில் வேறுபட்டுள்ளன. நாங்கள் கருத்துக் கணிப்புக்கு உடன்படு கிறோம். இந்த விடயத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அரசியல் நிர்ண யசபைக்கான தேர்தல் என்பது அதைவிட மிகமுக்கியமானது.

மன்னர் கஜேந்திராவின் நிலை என்னவாக இருக்கும்?

* மன்னர் என்ற நிலையில் அவர் தமது பங்கிற்கு ஏற்ப எந்த நிலைப்பாட்டை எடுக்கிறாரோ அதைச் சார்ந்ததாக அவருடைய நிலை இருக்கும். அங்கு அவருக்கு எந்த அரசியல் பாத்திரமும் இருக்கப் போவதில்லை. இந்த நாட்டில் மன்னராட்சி முற்று முழுதாக ஒழிக்கப்படும். மக்களின் ஆணையை கஜேந்திரா ஏற்பார் என்றால் அவர் சாதாரண குடிமகன் போல நேபாளத்தில் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் அதனை ஏற்கவில்லை என்றால் குடியரசுக்கு எதிராக அவர் ஏதாவது சதியில் ஈடுபடுவாராகில் அவர் நசுக்கப்படுவார். சிலவேளை களில் அரசு அவருக்கு கொஞ்ச நிலத்தையும், சொத்துக்களையும் வழங்கலாம். ஆனால் அவர் அரசியலிலிருந்து தூர விலகி யிருக்க வேண்டும்.

அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் எவ்வளவு வாக்குகளை அல்லது எவ்வளவு வீதத்தை மாவோ யிஸ்ட் கட்சி பெறும் என்று நினைக்கி றீர்கள்?

* சனத்தொகையில் பெரும்பான் மையானோர் எங்களுக்கு வாக்க ளிப்பர் என நான் நினைக்கிறேன். 50 வீதத்திற்கு மேல் எங்களுடைய கட்சிக்குக் கிடைக்கும். எமது கணிப்பின்படி கிராமப்புறங்களில் 80 வீதத்திற்கு மேலான மக்கள் எங்களுடைய கட்சியை ஆதரிக் கிறார்கள். நகர்ப் புறங்களிலும் வேறு பிரதேசங்களிலும் நிலைமை மாறி மாறி இருக்கிறது. இப்போது நாங்கள் நகர்ப்புற மக்களுடைய வாக்குகளையும் பெறுவதற்கு கடுமையான முயற்சி செய்கிறோம். எப்படியிருந்த போதிலும் மாவோ யிஸ்ட் கட்சி 50 வீதத்திற்கு மேற் பட்ட ஆதரவை நாட்டில் பெறும் என்று நான் நினைக்கிறேன். ஜன நாயக சக்திகளும், குடியரசுவாதி களும், இடது மற்றும் முற்போக் காளர்களும் என எல்லாமாக 75 வீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மாவோயிஸ்ட்களையும் கம்ய+னிஸ் களையும் கொண்ட ஒரு கட்சி தேர்த லில் வென்று புதிய நேபாள அரசாங் கத்தை அமைப்பதை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? 1970களில் சிலியில் நடந்தது போல சதிமூலம் தோற்கடிக்கப்படலாம் என்று நீங்கள் பயப்பட வில்லையா?

* இது மிகவும் முக்கியமான விடயம். நேபாளத்தின் சமாதான முயற்சியை ஆசியாவில் அமெரிக் காவின் பிரசன்னம் முறியடிக்க முயற்றி செய்கிறது. அவர்கள் எப்போதும் ஜனநாயகத்தை எதிர்த்து அரசரையே ஆதரித்து வருகிறார்கள். அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மொறயாரி இப்போதும் நேபாளத்தின் பல பிராந்தியங்களுக்கும் சென்று மாவோயிஸ்ட் கெட்டவர்கள் அவர் களை நம்ப வேண்டாம் என்று ஒவ்வொருவருக்கும் சொல்லி வருகிறார். ஆக சி.ஐ.ஏ எங்க ளுடைய இயக்கத்திற்கு எதிராக சதிகளில் ஈடுபடலாம். நாங்கள் கவனத்துடன் இருக்கிறோம். நாங் கள் எதற்கும் தயாராக இருக்கி றோம். குடியரசையும் ஜனநாயகத் தையும் நோக்கிய எங்கள் வீறுநடையை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மாவேயிஸ்ட் 50 வீத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றால் நீங்கள் தனித்து அரசாங்கத்தை அமைப் பீர்களா?

* இல்லை. நாங்கள் இடது மற்றும் முற்போக்கு ஜனநாயகவாதி களையும் இணைத்துக் கொண்டே முன்னேற முயற்சிப்போம். நாட் டை முன்னேற்றுவதற்கு எமக்கு கூட்டமைப்பு மிக அவசியம். ஆனால் தேர்தலில் மாவோயிஸ்ட் வெற்றி பெற்றால் நாங்கள் இயல் பாகவே குடியரசின் தலைமைத் துவத்தைக் கோருவோம்.

உங்களுடைய இடம் இதில் என்ன பிரசண்ட?

* நல்லது. கட்சி அதனை முடிவு செய்யும். ஆனால் தனிப்பட எனக்கு ஜனாதிபதியாக வர விருப்பமில்லை. எங்களுடைய நாட்டின் சமூக பொருளாதார அடித்தளத்தை முற்றாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே நான் விரும்புகிறேன். ஆனால் இதற்கு அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்பதோ பதவியை ஏற்க வேண்டும் என்பதோ அல்ல...

நேபாளத்தில் மிக அவசியமாக சீர்திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் எவை என்று எண்ணுகிறீர்கள்?

* முதலாவதாக முழு அரசையும் புதிய சமஸ்டி முறைமையின் கீழ் மீளக்கட்டமைக்க வேண்டும். கடந்த 230 வருடங்களாக உள்ள நிலப் பிரபுத்துவ முறைமையை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். அரச கட்டமைப்பை அடிப்படையில் நாங்கள் ஜனநாயக ப+ர்வமானதாக மாற்றியமைக்க வேண்டும். நாங்கள் 9 அல்லது 10 சுயாட்சியுடன் கூடிய பிராந்தியங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையிலான அரசு ஒன்றை உருவாக்க வேண்டும். அதே வேளையில் எங்களுடைய முன்னுரிமை புரட்சிகரமான நிலச் சீர்திருத்தமே. மிகப்பெரிய நிலப் பிரபுக்களின் நிலங்களை நாங்கள் சுவீகரிக்க விரும்புகிறோம். அவர்க ளுடைய நிலங்கள் சுவீகரிக்கப் பட்டு வறியமக்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

நேபாளத்திலும் வெளிநாட்டிலும் இருக்கும் சிலர் மாவேயிஸ்ட்டுகளை ஒரு ஜனநாயகக் கட்சி என இன்னமும் நம்பத் தயாராகவில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் நீங்கள் அதிகாரத் தைக் கைப்பற்றுவதற்கான ஒரு தந்தி ரோபாயமாகவே பலகட்சி முறைமையை ஏற்றுக் கொள்கிறீர்கள் என. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

* ஓம், நான் இந்தக் குரல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது என்னவெனில் நாங்கள் உண்மையாகவே சோசலி சத்தை நம்புகிறோம். இதேவேளை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தி லும் கூட பலகட்சி முறைமைக்கான ஒரு பங்குபற்றல் உண்டு. நாங்கள் இந்த முடிவுக்கு எங்களுடைய கட்சியில் நடைபெற்ற விவாதத் தூடகவே வந்தோம். பலகட்சி முறைமை இல்லாமல் நவீன சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்ற புரிதல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதில் எங்களுக்கு மிகமுக்கியமான விடயம் ஒன்று உள்ளது. இந்த பலகட்சி முறைமையும் ஜனநாயக மும் யாருக்காக? மக்கள் தொகை யில் பெரும்பாலானவர்களுக்கு உதவாத பல்வேறு ஜனநாயக முறைமைகளை நாங்கள் நேரடி யாகக் கண்டுள்ளோம். அவை ஒரு சில வர்க்கங்களுக்கு அல்லது பிராந்தியத்திலுள்ளவர்களுக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.