Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினாலும் போரில் அரசு வெல்வது சாத்தியமல்ல.

Featured Replies

'பினான்சியல் ரைம்ஸ் பத்திரிகையில் ஜோ லெகி எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்

இலங்கையில் இன்றுள்ள இராணுவ நிலைமைகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைகளையும் ஒப்பு நோக்கும் ஒரு வரைபடத்தை இராணுவ நடவடிக்கைகள் பணிபாளர் பிரிகேடியர் உதய பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிட்டார். 2006ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப்பட்ட பிரதேசம் சிவப்பு மையினால் அந்த வரைபடத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகள் முழுமையாக தெற்கில் அரச கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் வரை விரிவுடைந்து செல்கின்றது. இன்னோரு படம் இரண்டு ஆண்டுகாளக அரச படைகள் கைப்பற்றிய பிரதேசங்கள் நீலமையினால் காட்டபட்டிருந்தன. பெரும்பாலான கரையோரப் பகுதிகளை அரச படைகள் கைப்பற்றி புலிகளை அவர்களின் வடக்கு தள நிலைகளை நோக்கி விரட்டியிருப்பது காட்டப்பட்டுள்ளது.

இப்போழுது அந்த சிவப்பு பகுதிகள் எல்லாம் நீலநிறமாகி விட்டன என்று பெரேரா ஊடகவியலாளரிடம் சுட்டிக் காட்டினார்.

கடந்த வாரம் சார்க் மாநாட்டின் போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த சந்திப்பு இடம் பெற்றது.

கடந்த 25 வருட காலமாக இடம் பெற்று வரும் யுத்தத்தின் முன்னெப்போதையும் விட இன்று அரசு வெற்றியின் விளிம்பில் இருப்பதாக அரசு கூறிக்கொள்கிறது.

ஆசிய பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் மிக மோசமானதொரு இரத்தக் களரிக்கு ஒரு முடிவு ஏற்படுவதை இந்நாட்டு மக்க்ள மட்டுமன்றி பிராந்தியத்திலுள்ள எல்லோரலுமே வரவேற்கப்படும்.

ஆனால் உலகின் நிபுணத்துவமிக்க கெரில்ல படையினரான தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசி போரளி குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் கொல்லபட்டு அல்லது சரணடைந்தால் அல்லாமல் அவர்களை அழித்தொழிக்க முடியாது என்று ராஜதந்திர வட்டடாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.

முழு பிரதேசங்களையும் கைப்பற்றினாலும் கூட அவர்களை இராணுவ ரீதியில் அரசினால் வெற்றி கொள்வதென்பது சாத்தியமில்லை என்று கொழும்பிலுள்ள ராஜதந்திரி ஒருவர் கூறினார். பிரதேசங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது புலிகளுக்கு முக்கியமல்ல. அவர்ளால் தக்கிவிட்டு மறையும் அதாவது பயங்கரவாத நடவடிக்ககைளை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும்.

.இலங்கையின் இனப்பிணக்கில், இந்தியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் அக்கறையுண்டு. அவை உத்தியோகபூர்வமாக புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளன. அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் 2002 ம் ஆண்டில் செய்து கொள்ளபட்ட உடன்படிக்கை வீழ்ச்சியுற்றதின் பின்னர் இன்று நடக்கும் பொர் வெடித்தது. இன்றைய அரசியல் பௌதத சிங்கள தீவிர போக்காளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். அவ்வப்போது ஏற்பட்டு வந்த சிறு சிறு மோதல்களைத் தொடர்ந்து 2006 ம் ஆண்டில் பெரும் போர் வெடித்தது. இராணுவம் கிழக்கைக் கைப்பற்றியதுடன் சிறு தாமதத்தின் பின்னர் இப்பொது வடக்கிலும் ஆங்காங்கே ஊடறுத்துச் சென்று கொண்டுள்ளது.

கடந்த வாரம் சார்க் மாநாட்டுக்கு தென்னாசியத தலைவர்களையும் இந்தியத் தலைவர்களையும் மஹிந்த வரவேற்றுக் கொண்டிருந்த அதே வேளை, புலிகளின் வனப்பிரதேசத் தலைமையகம் அமைந்துள்ள வன்னிப் பகுதிக்குள்ளும் இலங்கை இராணுவம் நுழைய முற்பட்டிருந்தது.

2006ம் ஆண்டில் 12 ஆயிரம் போராளிகளைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையை ராணுவம் 5 ஆயிரமாக இன்று குறைத்தள்ளது என்று உதய பெரேரா தெரிவித்துள்ளார். ஆனால் அரசு தெரிவிக்கும் எண்ணிக்கை முழுவதையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் இன்று புலிகள் எவருமே இருக்க முடியாது என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் பின்வரும் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

புலிகள் வடக்கில் பின் நகர்ந்துள்ளார்கள் என்ற அறிகுறியானது அவர்களின் முக்கிய தந்திரோபாயமாக இருக்க வேண்டும். தற்போது ஆள்பலம் வாய்ந்த இலங்கைப் படைகளை அவர்கள் ஆட்டிலரிகணைகளால் தாக்கி வருகிறார்கள். தமது இறுக்காமான படை அணிகளை சேமித்து வைத்து கிளிநொச்சி அரங்கில் சரியான வகையில் பயன்படுத்தக்கூடும் என்று சிலர் நம்புகிறார்கள்.

இது சரியென்றால் மோதல்கள் அடுத்து வரும் மாதங்களில் மிக மோசமான கட்டத்தை அடையக் கூடும் என்று அவர் எச்சரித்துள்ளர்ர்.

பூனையை ஓர் அறையில் பூட்டிவிட்டு பிறகு அதைப் பிடிக்க முயல்வது போன்ற செயலாகும் இது மிக கொடூரமான நிலைக்கு போய்விடும் அது என்கிறார் அத்தாஸ்.

மற்றும் சிலரின் கவலை வேறு விதமானது. இராணுவ ரீதியில் அரசின் கை ஓங்கினாலும், ஏற்றுக் கொள்ளப்படக்;கூடிய தீர்வு ஒன்றை முன் வைப்பது அரசுக்குக் கஷ்டமாகவே இருக்கும். சமத்துவ உரிமை, மற்றும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை உறுதிப்படுத்துவது அரசின் கடமையாகவிருக்கும். இல்லயெனில் பயங்கரவாத பிரச்சினை நீடித்துக் கொண்டே இருக்கும்.

இன்னோரு பிரச்சினை மஹிந்த அரசுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருப்பதென்னவென்றால் தென்னிலங்கை மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் போரை ஆதரித்து நிற்கப் போகிறார்கள் என்பதாகும்.

உதாரணம் : பணவீக்கம் - ஆசியாவிலேயே மிக உயர்வு - போரில் வெற்றி நிச்சயம் என்ற வாக்குறுதியை நம்பி மக்கள் இருக்கிறார்கள்.

இந்த வருடம் டிசம்பர் அளவில் வெற்றி வந்துவிடும் என்று அரசியல்வாதிகள் கூறினார்கள். இது சாத்திமில்லையென்று இப்போது தெரிகிறது. யுத்தம் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகும் தொடருமா என்று பாதுகாப்பு பேச்சாளன் கேஹெலியவிடம் அழுத்திக் கேட்டபோது, 'தனிப்பட்ட முறையில் நான் அப்படி நம்பவில்லை, வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.' என்றார்.

நன்றி : உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.