Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்த நாட்டு ஆட்சியை விட காட்டுத் தர்பார் எவ்வளவோ மேல்!

Featured Replies

இலங்கை வேடுவக் குலத்தின் தலைவர் உருவருகே வன்னிலத்தோ தெரிவித்த ஒரு கருத்து இன்றைய காலகட்டத்தில் சிந்தனைக்கும் கவனத்துக்கும் எடுக் கத்தக்க விடயமாக உள்ளது.

""தங்களை நாகரிகமடைந்த மக்கள் என்று கூறிப் பெருமிதம் கொள்ளும் உலகத்தின் ஏனைய மக்களுடன் ஒப்பிட்டால், உண்மையில் உலகம் முழுவதும் காட்டில் வாழும் வேடர்களாகிய நாங்களே நாகரிகமடைந்த மேன்மையான மக்கள் கூட்டத்தவராவர்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார் அவர்.

சர்வதேச ஆதிவாசிகள் (பூர்வீகவாசிகள்) தினத்தை ஒட்டி கடந்த சனியன்று மகா ஓயாவில் சுற்றுச்சூழல் அமைச்சால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வேடுவத் தலை வர் இப்படி வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார்.""தங்களை நாகரிகமடைந்த மக்கள் என்று கூறிக் கொள்ளும் உலக சமூகத்தவர்கள் இயற்கை அன்னை யைச் சீரழித்து, அதன் விளைவை இன்று அனுபவிக்கும் துர்ப்பாக்கியத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் ஆதிவாசிகளான பூர்வீகக் குடிகளான நாங்கள் எங்களை இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமாகவே கருதுகிறோம். அதனால் இயற்கை அன்னையை மதிக்கிறோம். இயற்கையை சூழலை எமது நடவடிக்கைகள் எவையும் குழப்பி விடாமல் நாம் பார்த்துக் கொள்கிறோம்; உறுதி செய்கிறோம்'' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அமேசன் பிரதேசத்தில் புதிதாக ஆதிவாசிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ""அமேசன் ஆதிவாசிகள் பற்றிய படங்களை நான் பார்த்தேன். உலக ஊடகங்களின் பார்வை அதிகள வில் இன்று அவர்கள் மீது விழுந்திருக்கின் றது. அந்த அப்பாவி மக்களைத் தங்கள் பாட்டில் வாழ விட்டுத் தள்ளி நிற்குமாறு நாம் உலக சமுதாயத்தைப் பார்த்துக் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், உலகில் நாகரிகமடைந்த மக்கள் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றவர்களை விட இவர்கள் மேன்மையானவர்கள். எனவே அவர்களின் தனித்துவத்தில் தலையிட்டுக் குழப்பாமல் அவர்களை அப்படியே தனித்துவமாக வாழ விட்டுவிடுங்கள்'' என்று உலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார் இலங்கை வேடுவத் தலைவர். உலகத்தை விடுவோம். இலங்கைத் தீவிலும், வேடு வத் தலைவர் கூறுகின்ற அநீதிதான் அரங்கேறுகின்றது.இயற்கையை மட்டுமல்ல, இயற்கை நீதியைப் புறந் தள்ளி, உதாசீனம் செய்வதிலும் இலங்கை முன்னணி யில் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.கருணை, சமத்துவம், அன்பு, பரிவு, தார்மீகம், குரோத மின்மை, பழிவாங்காமை போன்ற உயரிய பண்பியல் புகளைத் தன்னகத்தே கொண்ட பௌத்த சீலம் பரவிய தேசம் என்று இலங்கைத் திருநாட்டை பௌத்தர்கள் பாராட்டிக் கொண்டாடுகின்றனர். ஏன், அது குறித்துப் பெருமைப்படவும் செய்கின்றனர்!

அஹிம்சையையும், அன்பையும் அரவணைத்துச் செல்வதை வலியுறுத்திய சித்தார்த்தரின் நெறியானது விஞ்சிய மாண்பும், மகத்துவமும், சிறப்பும், சீர்மை யும், பெருமையும், உயர்வும் இயல்பாகவே தன்னகத்தே கொண்டதாகும். ஆனால் அந்தப் பிரபஞ்ச வாழ்வியல் நெறிக்கு மார்க்கத்துக்கு மையத் தளமாகக் கூறப்படும் இலங் கையிலேயே அந்த மார்க்கத்தின் பெயரால் அது மிதிக் கப்படுகின்றது. பௌத்த சாசனத்தைப் பேணும் பெய ரால் கொடூர யுத்தமும், கொலை அட்டகாசமும், இன வெறிக் குரோதமும் ஆட்சித் துறையால் இத்தேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

வேடுவத் தலைவர் கூறுகின்றமை போல எப்படித் தம்மை "நாகரிக உலகம்' என்று கூறிக் கொண்டு இயற்கை அன்னையை அழித்து நவயுக உலகம் அநாகரீகமாக நடந்து கொள்கின்றதோ, அதுபோலவே பௌத்த சீலமும், சித்தார்த்த போதனைகளும், காருண்ய நெறியும் கடைப்பிடிக்கப்படும் நாடு என்று தன்னைத் தானே பெருமையோடு விளித்துக் கொண்டே, பௌத்த தர்மத்துக்கு மாறான ஆயுத கலா சார வெறிப் போக்கும், பிறரையும் தன்னைப் போல கருதி சமமாக நடக்க மறந்து மறுத்து சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் பேரி னவாத அதிகாரச் செருக்கும் கொண்டதாக இலங் கையின் அதிகார வர்க்கம் திகழ்கின்றது. அந்த வகையில் பார்த்தால் நாகரிகமடைந்த உய ரிய பௌத்த மார்க்க நெறியைப் பின்பற்றுகின்ற ஆட்சி முறைமை என்று தன்னை அழைத்துக் கொள் ளும் கொழும்பு அரசை விட, வேடுவத் தலைவரும் அவரது கூட்டத்தவர்களும் வசிக்கின்ற காட்டில் நிலவுகின்ற இயற்கையின் செல்வாக்குடன் கூடிய காட்டுத் தர்பார் நியாயமானது; நீதியானது; நவ நாகரிகமானது என்று மதிக்கப்படத்தக்கதாகின்றது.

மதத்தின் பெயரால் "மதம்' கொண்டு நிற்கும் சமூ கத்திற்கு இந்த நியாயம் எல்லாம் காதில் ஏறப்போவ தேயில்லை. புத்தரின் போதனைகளைப் போற்று மாற்போல வெளியில் காட்டுவதில் அர்த்தமில்லை. அதை முழு மனதுடன் முழு அளவில் கடைப்பிடிக் கவும் முன்வரவேண்டும்.

www.uthayan.com

Edited by thamizhanpan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.