Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன?

-ப.தெய்வீகன்-

கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும்.

விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது.

மகிந்த படைகளால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வடக்கிற்குத்தான் போர் அரங்கு என்ற இடம்பெயர்க்கப்பட்ட ஒரு போரியல் பார்வையின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

கிழக்கில் புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு தற்போது வடக்கில் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு புலிகளை அடியோடு ஒழிப்பதாக மகிந்த அரசு குவியப்படுத்தியிருக்கும் ஒருவித மாயத்தோற்றம், சிறிலங்காவின் படைத்துறை தொடர்பாக ஆய்வு செய்பவர்களையும் வடக்கின்பால் ஈர்த்து வைத்திருக்கிறது.

ஆனால், கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறிலங்கா படைகளுக்கு நாள்தோறும் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

மகிந்தவின் கிழக்கு விடுதலை என்ற கோசத்திற்கு பிறகு அம்பாறையில் மாத்திரம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர், துணை இராணுவக்குழுவினர் என 165 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 208 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அறிக்கை விடுக்கப்பட்ட நாள்வரை பார்க்கப்போனால், கிழக்கு முற்றுமுழுதாக தம்மால் கைப்பற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்தநாள் முதல் - கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் - இற்றைவரை கடந்த ஒருவருட காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 165 பேரை இழந்திருக்கிறது.

அதாவது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக - அண்ணளவாக - 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு ஒருவர் கொலை, ஒருவர் காயம் என்ற ரீதியில் தாக்குதலை சந்தித்துவரும் ஒரு படை, தான் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியை எதிரியிடமிருந்து மீட்டுவிட்டதாக கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை சிறிலங்கவில் உள்ள எந்த இராணுவ ஆய்வாளர்களும் தமது பத்திரிகைகளில் எழுதி இராணுவத்தின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.

இதன் பின்னணியில், அம்பாறையில் முற்றுமுழுதான பொறுப்பை எடுத்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எவ்வாறு புலிகளின் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்ற களநிலை நோக்குவது இங்கு அவசியமாகிறது.

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முக்கிய இருப்பிடமாக கருதப்படுவது கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியாகும். இந்த விடயம் படையினருக்கும் நன்கு தெரியும். ஆனால், அங்குள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில்தான் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவற்றைவிட, அங்குள்ள புலிகள் காட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உன்னிப்பான பாதுகாப்பு அரண்களை ஊடறுத்து வந்து அம்பாறையின் முக்கிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் மீதும் பல துணிகரத்தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியின் உள்ளிருந்து வெளியேயோ வெளியிலிருந்து உள்ளேயோ புலிகளின் ஊடுருவல் இடம்பெறக்கூடாது என்பதற்காக அந்த வனப்பகுதியை சுற்றி சமார் 20 க்கும் மேற்பட்ட பாரிய காவலரண்களை படையினர் அமைத்துள்ளனர்.

அந்த வனப்பகுதியை சுற்றி வடக்கிலிருந்து தெற்காக சாகாமம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சாறு, கோட்டையாறு, சங்கம்சந்தி, தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், கோமாரி, ஊரணி, நொட்டை ஆகிய பகுதிகளிலிலும் -

வனப்பகுதியின் மறுபகுதியில் தெற்கிலிருந்து வடக்காக வக்குமுட்டியாவ, கோயில்கண்ட, பன்னரகம ஆகிய பகுதிகளிலும் -

வனப்பகுதியின் கிழக்கிலிருந்து மேற்காக நொட்டை, செங்காமம், லகுவனை, காணுவ, உலானுவ ஆகிய பகுதிகளிலும் -

வனத்தின் மறுபகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக மாந்தோட்டம், வம்மியடி, வேட்டேரி, முகமாலகட ஆகிய பகுதிகளிலும் - பாரிய படை முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.

இவற்றில், வக்குமுட்டடியாவ, கோயில்கண்ட, பன்னரகம, மாந்தோட்டம், ஊரணி, நொட்டை ஆகிய படை முகாம்களில் இராணுவத்தினரும் ஏனைய படை முகாம்களிலும் சிறப்பு அதிரடிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர்.

இவற்றைவிட கண்ணகிபுரம், திருக்கோவில், அக்கரைப்பற்று, கேரைதீவு உட்பட அம்பாறையின் ஏனைய பகுதிகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட முக்கிய முகாம்களிலும் ஏனைய சிறு முகாம்களிலும் நிலைகொண்டுள்ள அதிரடிப்படையினர் அந்தந்த பகுதிகளில் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றுக்கு எல்லாம் தலைமையகமாக அம்பாறை கொண்டயீட்டுவானில் அதிரடிப்படை தலைமைப்பீடம் அமைந்துள்ளது.

களத்தில் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பிரதான தளமாக அதிரடிப்படையினரின் கஞ்சிகுடிச்சாறு படைமுகாம் செயற்பட்டு வருகிறது.

இவற்றில் மாந்தோட்டம் இராணுவ முகாமில் உள்ள படையினரின் ஆட்லறித்தளத்திலிருந்தும் கோட்டையாறு உட்பட சில முக்கிய அதிரடிப்படை முகாம்களிலிருந்தும் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி அடிக்கடி ஆட்லறித்தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.

அம்பாறை பூராகவும் பரந்துள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த அரச படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் உள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் இதுவரை சுமார் நூறுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டனர். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறைந்தது 600 முதல் சுமார் 2,000 வரையான படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.

காட்டுப்பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கு புலிகளின் நிலைகளை அழித்து அங்குள்ள புலிகளை ஒழிக்கும் நோக்குடன் கடந்த தடவைகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் பாரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எந்த வெற்றியையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.

மாறாக, இவ்வாறு ஊடுருவும் படையினர் புலிகளின் பொறிவெடிகள், மிதிவெடிகள் ஆகியவற்றினால் பாரிய இழப்புக்களையே சந்தித்துள்ளனர்.

இக்காட்டுப்பகுதிக்குள் ஊடுருவும் மற்றும் ரோந்து வரும் படையினரின் வருகைக்கு ஏற்றவாறு புலிகள் மேற்கொள்ளும் கச்சிதமான பொறிவெடி தாக்குதல்கள் படையினருக்கு உயிழப்புக்களைவிட களமுனைக்கு மீளதிரும்ப முடியாத படுகாயங்களை ஏற்படுத்தி அவயவங்களை காவு கொண்டுள்ளன.

இவ்வாறு அம்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஊடகங்களில் பேசப்பட்ட சம்பவங்களாக மகிந்தவின் பாதுகாப்பு அணியிலுள்ள உலங்குவானூர்தி மீதான தாக்குதலும் படையினரின் யால முகாம் தாக்குதலையும் குறிப்பிடலாம்.

ஆனால், இவற்றை விட பல்வேறு வகைகளில் அம்பாறையின் பல்வேறு இடங்களில் புலிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் படையினருக்கு புலிகளின் கெரில்லா போர்முறை தொடர்பான தேர்ச்சியை உணர்த்தியிருக்கிறது.

இவற்றில் முக்கியமான சம்பவங்களாக -

அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் நிலாமதியின் முதலாம் மாத நினைவாக கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி பொத்துவில் - மொனராகல வீதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் பொத்துவில் பிரதேச உதவி கட்டளைத் தளபதி சிசிரகுமார உட்பட மூவர் கொல்லப்பட்டமை -

அம்பாறையில் தமிழ்மக்கள் கடத்தப்பட்டு படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உயரதிகாரி கராட்டி என்பவரது அணியை வழிமறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டமை ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

அம்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்களில் படையினருக்கு எதிராக துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட லெப். கேணல் பவமாறனின் துணிச்சல் அங்குள்ள படையினருக்கு உண்மையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அவர் உட்பட லெப். கேணல் அயோனி, லெப். கேணல். மிதுலன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி தவறுதலாக வெடிவிபத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.

இவர்களது ஒரு மாத நினைவு தின தாக்குதலாகவே யால முகாம் மீது புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதல் ஒன்றை அதே ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.

தவமாறன் தலைமையில் புலிகளின் இரண்டு மூன்று பேர் கொண்ட அணி அம்பாறையின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடிப்படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

வக்குமுட்டியாவ அதிரடிப்படை முகாமிலிருந்து வரும் ரோந்து அணிகள் மற்றும் காட்டுக்குள் ஊடுருவும் அணிகள் ஆகியவற்றின் மீது பவமாறனின் தலைமையிலான அணி தொடுத்த தாக்குதல்கள் அதிகம் என்று கூறலாம்.

பவமாறன் உயிரிழப்பதற்கு முதல் நாளும் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ரோந்து சென்ற படையினரை பின்தொடர்ந்து சென்ற பவமாறனின் ஐந்து பேர் கொண்ட அணி சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிவந்தது.

அதேநாள் - காஞ்சிரங்குடா - கோட்டயாறு வீதியில் பவமாறன் மூன்று பேருடன் சென்று கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் வக்குமுட்டியாவ படைமுகாமுக்கு அண்மையாக உள்ள வீதியில் 18 கிலோகிராம் எடையுள்ள கிளைமோர் ஒன்றை பொருத்திவிட்டு அருகிலிருந்த சிங்கள குடியேற்றத்திட்டத்திலிருந்

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட நிமால் லுகோ என்ற படைப்பொறுப்பதிகாரியை படுகொலை செய்யும் நோக்குடன் அரச கட்டுப்பாட்டுபகுதிக்கு கிளைமோருடன் சென்ற மூன்று போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டதால் வீரச்சாவடைந்தார்கள்.

எல்லாம் சரிதான் ஆனால் கட்டுரை ஆசிரியருக்கு படுகொலை என்ற பதத்தின் சரியான பொருள் தெரிந்தா இவ்வாறு எழுதுகிறார்.

இராணுவ வீரர்கள் சேவையின்போது கொல்லப்படுவதை படுகொலைசெய்யப்பட்டதாக சொல்வது பொருந்தாத ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.