Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம்

pg29sz3.jpg

போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள்.

``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்குப் போக முடியல...

இதுக்கப்புறமும் கச்சத்தீவுக்குப் போகணுமான்னு யோசிச்சுக்குங்க! சிங்கள ராணுவம் இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்றிருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் இன்னமும் இலங்கை ஜெயில்ல சித்திரவதை அனுபவிச்சிட்டிருக்காங்க. இதுவரைக்கும் 400க்கும் மேற்பட்ட படகுகளை நடுக்கடலில் சிங்கள ராணுவம் மூழ்கடிச்சிருக்கு!'' என்று கச்சத்தீவை அச்சத்தீவாகச் சித்திரித்த தங்கச்சி மடம் மிக்கேலின் வார்த்தைகள் நம் மனதுக்குள் கொஞ்சம் பீதியை ஏற்படுத்தியது! அதுவும், செய்யாத தப்புக்கு சிங்கள ராணுவம் போட்ட சிக்னேச்சர், மிக்கேலின் இடுப்பில் தழும்பாகி இருப்பதைப் பார்த்ததும் கொஞ்சம் திக்கென்றுதான் இருந்தது.

pg29anb6.jpg

ஒருவாரம் ராமேஸ்வரத்தில் முகாம்! ஆனால் நம் முயற்சிக்கு ஒத்துழைக்க ஒருவரும் முன்வரவில்லை... இறுதியாக எப்போதாவது தொழிலுக்குச் செல்லும் இளைஞர்கள் மூவர் நம் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்தனர்... அரசின் அடையாள அட்டையும் வைத்திருந்தனர்.

மீனவர்களுக் கான அடையாள அட்டைஇருந் தால் கச்சத் தீவுக்கு அருகே யுள்ள நம் எல்லைவரை போய் வரலாம். ஆனால்அந்த மீனவர்களுடன் நாம் இருப்பது எல்லா விதத்திலும் அவர்களுக்கு ஆபத்தானதே! இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை...

``ரிஸ்க் எடுக்கறது எங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி!'' என்று வடிவேலு ஸ்டைலில் நம்மை உற்சாகப்படுத்தியவர்கள், ``உங்கள் உயிரைப் பணயம் வைக்க நீங்கள் தயாராக இருந்தால் சரி!'' என்றதும் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்குப் படகில் ஏறினோம்.

pg29btr1.jpg

கைலி, சட்டை, தலையில துண்டு என முடிந்த மட்டும் மீனவர்கள் கெட்டப்புக்கு மாறியிருந்தாலும், ரோந்துப் படகுகள் கண்ணில் படும்பொழுதெல்லாம் கொஞ்சம் உதறல்தான்... ஒருமுறை கடலோரக் காவல் படையின் ரோந்துப் படகு கொஞ்சம் நெருக்கமாகவே கடந்து சென்றது... அது கண்ணை விட்டு மறைந்த சில வினாடிகள்ல கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாகப் பறந்து தாண்டிப் போனது... இப்படியே மூன்று மணிநேர திக் திக் பயணம்... தீவை நெருங்கினோம்....

தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது `ஆற்றில் குளிக்கும்போது அவிழ்ந்து போன பச்சைக் கோவணம் மிதப்பது மாதிரி' தெரிந்தது கச்சத் தீவு... படகை ஒதுக்கி, தீவின் கரையில் காலடி வைத்ததுமே பயமெல்லாம் பறந்துபோக, இழந்த ஒரு தேசத்தை மீட்டெடுத்த உற்சாகம்...

தீவின் மொத்தப் பரப்பளவே சுமார் முந்நூறு ஏக்கர்தான்... இன்று நம்மூரில் பல அரசியல்வாதிகளுக்கு இதைவிட சொத்து பலமடங்கு அதிகமாக இருக்கலாம்... தீவு முழுக்க சின்னச் சின்ன மரங்கள், முட்புதர்கள், பனைமரங்கள்... இப்படித்தான். கட்டடம் என்று சொல்ல ஒரேயொரு சர்ச்... புனித அந்தோணியார் ஆலயம். நாற்பதுக்கு இருபது சைஸில் ஒரு ஓட்டுக் கட்டிடம்தான். சுண்ணாம்புக் காரை பெயர்ந்த நிலையிலும் அந்தக் கோயில் சுனாமிகளையும், புயல்களையும் கடந்து நிற்பது ஆச்சர்யம்தான்

pg29cqi7.jpg

அந்தோணியாரைப் போலவே ஆட்களே இல்லாத தீவில் நாமும் தனியாக நிற்கிறோம் என்பதை நினைத்தபோதே மனதுக்குள் ஒரு வெறுமை நிறைந்தது... தீவு முழுக்க முடிந்தவரை அலைந்தும் பார்த்தோம். அண்மைக்காலத்தில் மக்கள் பெரிய அளவில் வந்துபோனதற்கான தடயமே இல்லை... ``அந்தோணியார் கோயில் திருவிழாவிற்குக் கூட யாரும் இப்பொழுது வருவதில்லை!'' என்றார் நம்முடன் வந்த மீனவர்...

``தீவைப் போராடிப் பெற்ற இலங்கையும் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகால ஆதிக்கத்தில் ஆக்கபூர்வமாகவோ, இருநாட்டு மீனவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்படியோ ஒரு துரும்பைக்கூட நகர்த்தவில்லை...

pg29dpo1.jpg

நம் தமிழ்நாட்டு மீனவர்களை, எல்லைப் பிரச்னைகளைக் காரணம்காட்டி போட்டுத் தள்ளும் கொலைக்களமாக மட்டுமே கச்சத்தீவைப் பயன்படுத்தி வந்துள்ளது...

இலங்கை வசம் இந்தத் தீவு இருக்கும் வரையில் மீனவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை...'' தன் ஆற்றாமையை எம்மிடம் இறக்கிவைத்தார் உடன் வந்த மற்றொரு மீனவர்...

தீவுக்கு வந்து இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக ஆனது. இனி இலங்கை ரோந்துப் படகுகள் திரும்பி வந்து நம் படகைப் பார்ப்பதற்குள் புறப்பட்டு விட வேண்டும் என்ற அவசரத்துடன் கிளம்பத் தயாரானோம். அதற்குமுன் கச்சத்தீவின் காவல்தெய்வம் புனித அந்தோணியாரை வழிபட்டு வரலாம் என்று கோயிலுக்குள் நுழைந்தோம்...

கருணையே வடிவான கர்த்தர்... யுத்தகளத்தின் தனிமையில்... இதயத்தில் நமக்கும் ரத்தம் கசிந்தது... ஏற்றி வழிபட ஒரு மெழுகுவர்த்தி வாங்காமல் வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு நம்மை குடைந்தெடுத்தது... அப்பொழுதுதான் நம் கண்ணில் பட்டது, பட்டப் பகலில் எரிந்து கொண்டிருக்கும் அந்த அரிக்கேன் விளக்கு... துருப்பிடித்திருந்தாலும் சிம்னி துடைக்கப்பட்டு, சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும் அந்த விளக்கை ஏற்றியது யார்?

``கச்சத்தீவின் பக்கம் படகில் யார் வந்தாலும் அந்தோணியார் ஆலயத்திற்கு வந்து இந்த விளக்கை ஏற்றி விட்டு கோயிலைப் பெருக்கி சுத்தம் செய்து விட்டுச் செல்வது வழக்கமாம்... அப்படிச் செய்தால் காவலுக்கு அந்தோணியார் உடன் வருவார், உயிர் பயம் தேவையில்லை என்பது நம்பிக்கை. அப்படித்தான் யாரோ நாம் வருவதற்கு சற்றுமுன் வந்து சென்றிருக்க வேண்டும்!'' என்றனர் நம்முடன் வந்த மீனவர்கள்...

`போகிற உயிர் போகட்டும். கச்சத்தீவின் இருளைவிரட்ட நம் பங்குக்கு ஒரு சுடரை ஏற்றுவோம்' என்ற இந்த அப்பாவி மீனவ மக்களின் முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது....

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.