Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் சகல முனைகளிலும் தாக்குதல்கள் தீவிரம்

Featured Replies

வன்னியின் சகல முனைகளிலும் கடும் தாக்குதலை ஆக்கிரமிப்பாளர் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவரும் அதே வேளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபாகளை வவுனியாவிலிருந்து செயற்படுமாறு அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

வன்னியில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் அங்கு ஐ.நா அமைப்புகளும் சர்வதேச தொண்டர் அமைப்புகளும் செல்வதை முடிந்த வரை தவிர்க்குமாறு அவற்றுக்கு படைத்தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கிருந்து மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வருவார்களென அரசும் படைத்தரப்பும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்த்த போதும் மக்கள் எவருமே ஆக்கிரமிப்பாளரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவில்லை. மாறாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பான இடங்கைள நோக்கியே மக்கள் செல்கின்றனர்.

க.பொ.த(உயர்தரம்) பரீட்சை நடைபெற்று வருகின்ற போதும் அங்கு தாக்குதல்களை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று அங்கு 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்ற போதும் தாக்குதல்கள் தணியவில்லை.

அதேநேரம், மணலாறு, களமுனைப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு, நெடுங்கேணி ஆகிய பகுதிகளை நோக்கி மாலை 5மணி முதல் மறுநாள் காலை 6மணி வரை கடும் ஷெல் தாக்குதல் நடத்தப்படுகின்றது.

இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மிகவும் உக்கிரமான ஷெல் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வதிவிடங்களிலிருந்து அனைத்து உடமைகளையும் கைவிட்ட நிலையில் இடம் பெயர்ந்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக படையினரல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஷெல் வீச்சுக் காரணமாக நூற்றுக் கணக்கான குடியிருப்புகள், உடமைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், பெருமளவிலான கால் நடைகளும் உயிரிழந்துள்ளன.

இடம் பெயர்ந்த மக்கள் உணவு, மருத்துவதும் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி வீதியோரங்களிலும் காடுகளுக்குள்ளும் தஞ்சமடைந்துள்ளதாகவும் அறியவருகிறது.

பெரும் அவல நிலையை எதிர்கொள்ளும் இடம் பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட நிலையிலுள்ள உடமைகளை மீட்டுபதற்காகவோ அல்லது வீடுகளைச் சென்று பார்வையிடவோ முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.

இதே வேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்கள் மீது தினமும் இலங்கை விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்p வருவதாகவும் தெரியவருகிறன்றது. அத்துடன் ஆட்களற்ற உளவு விமானங்கள் (யூ.ஏ.வீ.) இப்பிரதேசங்களில இரவு நேரங்களல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

நன்றி தினக்குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு

[திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2008, 07:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் படைக்கட்டுமான போர்ப் பயிற்சி இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.

தமிழர் தாயக நிலங்களை வல்வளைப்புச் செய்து தமிழ் மக்களை துயரநிலைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கும் சிறிலங்காப் படைகளிடமிருந்து தாய்நிலத்தை காக்கவும் மீட்கவும் மக்கள் படை தயாராகி கொண்டிருக்கின்றது.

இதன் முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கான மக்கள் கட்டுமானப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள், வணிகர்கள், கூட்டுறவாளர்கள் எனப் பெருமளவான மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் போராளிகள் தாய் மண்ணை காக்கும் பணிக்காக வந்து இணையுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பெருமளவானவர்கள் தம்மை மீள இணைத்து வருகின்றனர்.

சிறிலங்காப் படையினரின் வல்வளைப்பிலிருந்து தாய் மண்ணை காக்கவும் மீட்கவுமாக முன்னாள் போராளிகளை மீள வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அவசரமான வேண்டுகோளினை விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளுக்கு இணங்க பெருமளவான முன்னாள் போராளிகள் வட்ட கோட்டச் செயலகங்களில் தம்மை இணைத்து வருகின்றனர்.

இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நீதி நிர்வாகத்துறைப்

பொறுப்பாளர் பரா ஏற்றி வைக்க, தொடர்ந்து மக்களுக்கன மக்கள் கட்டுமானப் பயிற்சிகள் நடைபெற்றன.

நிகழ்வில் சிறப்புரையினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் நிகழ்த்தினார்.

http://www.puthinam.com/full.php?2bUWtse0d...d43bTU3b026Mm3e

கிளிநொச்சியில் மக்கள் படைக்கட்டுமான பயிற்சி: முதற்கட்டமாக ஆயிரம் பேர் இணைவு

இந்த செய்தியால் மக்களுக்குப் பிரச்சனைதானே வரும்?

இப்படி எல்லாவற்றுக்கும் பிரச்சனை பிரச்சனை என்று நினைத்து தான் இருக்க இடம் இல்லாமல் மரநிழலில் இன்றும் இருக்கின்றோம். மக்களுக்காக தான் விடுதலை போராட்டம். மக்கள் தான் பங்கெடுக்க வேண்டும். இந்த செய்தி வராவிட்டால் மட்டும் சிங்களவன் கொல்வதை நிறுத்தி விடுவானா?என்ன பிரச்சாரம் செய்வார்கள்.அதை முறியடிக்க நாம் தான் வேறு வழி தேட வேண்டும்.

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.