Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் மேர்வின் சில்வாவை நெருங்க முடியாத நீதித்துறை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களுக்கு எதிரான அரச அடக்குமுறையின் ஒரு குறியீடாக விளங்குபவர் அமைச்சர் மேர்வின் சில்வா. இந்த நாட்டின் சட்டமியற்றும் உயர்சபை எனப் போற்றப்படும் நாடாளுமன்றத்துக்குள் அவர் நடந்துகொள்ளும் நாகரிகம் பிரசித்தமானது.

காவியுடை தரித்துஇ நாடாளுமன்றப் பிரதிநிதியாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வந்த சங்கைக்குரிய பிக்கு ஒருவரை நாடாளுமன்றத்துக்குள் வைத்தே மேர்வின் சில்வா உட்பட்ட அரசுத் தரப்புக் குழுவினர் சூழ்ந்துகொண்டு அநாகரிகமாக நையப்புடைத்து நடத்திய விதமும்

தமது மர்மஸ்தானம் நசுக்கப்பட்டதால் ஏற்பட்ட கொடூர நோவுக்காக அந்தப் பிக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நேர்ந்த அவலமும்

இந்த இலங்கைத் தீவின் சட்டமியற்றும் சபையின் அங்கத்தவர்களின் "பெருமை' பேசும் விடயங்களாகும்.

அதற்குப் பின்னர் அவ்வப்போது ஊடகங்களையும்இ ஊடகவியலாளர்களையும் அமைச்சர் மேர்வின் தூஷித்து நடந்து கொண்ட விதங்கள் அந்தந்தச் சமயங்களில் அச்சு ஊடகங்களில் மட்டுமல்லாது இலத்திரனியல் ஊடகங்களிலும் காட்சிகளாக மக்கள் முன் நிறுத்தப்பட்டே வந்துள்ளன.

அந்த வகையில் அரச ஊடகமான ரூபவாஹினிக்குள் புகுந்து மேர்வின் தலைமையிலான குண்டர் குழு நடத்திய "அட்டகாசம்' நேரடி ஒளிபரப்பில் அம்பலமானமையும் மக்கள் மனதைவிட்டு அகலாத காட்சியாகும்.

"ரூபவாஹினி'க்குள் மேர்வின் குழு நடந்துகொண்ட மோசமான அராஜகச் செயற்பாட்டை அங்கு எதிர்த்த ஊடகவியலாளர்கள் பின்னர் வரிசைக்கிரமமாக இனந்தெரியாத மர்மக் குழுக்களால் தாக்கப்பட்டுஇ வெட்டப்பட்டுஇ காயப்படுத்தப்பட்டுஇ நையப்புடைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வரிசையில் கடைசியாக "சிரச' படப்பிடிப்பாளருக்கு எதிராக மேர்வின் அணி நடத்திய "திமிர்' அட்டகாசம் பற்றிய நேரடி ஒளிப்பதிவே சந்தர்ப்பவசமாகக் கிட்டியுள்ளது. ஆனாலும்இ அவர் மீது சுமத்தப்பட்டுள்ள "கிரிமினல்' குற்றச்சாட்டுத் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் பொலிஸாரே பின்நிற்கின்றனர்.

இதற்காக நீதிமன்றமே பொலிஸாரைக் கடுமையான வார்த்தைகளால் கடிந்து கொண்டுள்ளது.

இப்போது நீதிமன்றம் தானே விடயங்களை விசாரித்துஇ அறிந்தபின்னர்இ அமைச்சர் மேர்வின் சில்வாவையும் அவரது குண்டர் அணியையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது. அதுவும் அந்த உத்தரவு இவ்விவகாரம் சம்பந்தப்பட்ட பேலியகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விடுக்கப்படவில்லை. மாறாக நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கே வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் அந்த உத்தரவு வழங்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்டது. எனினும் இப்பத்தி எழுதப்படும் இச்சமயம் வரை அமைச்சர் மேர்வினோ அவரது சகாக்களோ கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் ஏதுமில்லை.

ஒரு நாட்டில் ஓர் அமைச்சர் எங்கிருக்கின்றார் என்பதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் பொலிஸ் மா அதிபர் இருக்கின்றாரோ என்னவோ..........?

இவ்வளவு அதிகாரஇ அட்டகாசம் பண்ணும் அமைச்சர் மேர்வின் சில்வா அப்படி ஒன்றும் மக்கள் செல்வாக்கு மிக்கவர் அல்லர். விளக்கமாகச் சொல்வதானால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அரசுத் தரப்பில் போட்டியிட்டுத் தோற்றவர். அரசுத் தரப்பில்இ கொழும்பு மாவட்டத்தில் மூவாயிரம் விருப்பு வாக்குகள் கூடப் பெற முடியாமல் பின்னடைவு கண்டவர். பின்னர் தேசியப் பட்டியல் உறுப்பினராக பின் கதவால் நாடாளுமன்றுக்குள் நுழைந்துஇ அதை வைத்துக்கொண்டு அமைச்சராகிஇ இவ்வளவு திருகுதாளமும் பண்ணிக்கொண்டிருக்கிறார் அவர்.

வெளிப்படையாக அனைவரும் பார்த்திருக்க அப்பட்டமாக பரகசியமாக அராஜகமும் அட்டகாசமும் புரியும் ஓர் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத துப்புக்கெட்ட அரசுத் தலைமைஇ இந்த நாட்டில் ஆட்சி புரிகின்றது என்பதுதான் கேவலத்திலும் கேவலம்; அபத்தத்திலும் அபத்தம்.

அரசுத் தலைமையின் போர் வெறிப் போக்கு ஒருபுறம் என்றால்இ அராஜகப் போக்கு மறுபுறம். அந்த அரச அராஜகப் போக்கின் ஒரு முகமாகவே அமைச்சர் மேர்வின் வெளிப்படுத்தப்படுகின்றார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருப்பது

நீதித்துறையின் உத்தரவு செயற்படுத்தப்பட இயலாமல் இருப்பது

பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இழுக்குத் தரக்கூடிய தொன்றாகும்.

சட்டத்தைத் துச்சமென மதிக்கும் "க(ல்)லாநிதி'களை அமைச்சர்கள் பட்டாளத்தில் வைத்துக்கொண்டு காட்டுத் தர்பார் நடத்தும் ஆட்சி இது என்பதை நிரூபிக்க அமைச்சர் மேர்வினும் அவரைப் பாதுகாக்கும் ஆட்சித் தலைவர்களும் நல்ல ஆதாரங்களாக அமைகின்றனர்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.