Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளினியை விடுதலை செய்யக் கூடாது: தமிழக அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டம் 435ன் படி சிபிஐ புலன் விசாரணை செய்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது. மேலும் நளினி உள்ளிட்ட 3 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி ஆலோசனை குழு முன்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த விண்ணப்பங்களை ஆலோசனை குழு நிராகரித்து முடிவெடுத்துள்ளது. அந்த குழுவில் 7 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரரின் கூற்று தேவையற்ற ஒன்று. மூன்று பேர் இருந்தாலே போதுமானது.

மேலும், அவர்கள் 3 பேரின் மனுக்களை நிராகரித்த ஆலோசனை வாரியம், இதற்கு 3 காரணங்களை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமரை கொலை செய்தது, திட்டமிட்டு கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியது, விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும் குறையாமல் உள்ளது என்று ஆலோசனை வாரியம் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

நளினியின் நன்னடத்தைக்காக அவருடைய சிறை தண்டனை காலத்தில் 545 நாட்களை சிறைத்துறை குறைத்துள்ளது. சிறையில் பட்டப்படிப்பை முடிக்கும் கைதிகளுக்கு தண்டனையை குறைக்கலாம். ஆனால் நளினி ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்திருப்பதால் தண்டனையை குறைக்க முடியாது.

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்கள் தண்டனையை குறைக்கலாம் என்பது நிர்வாக காரணமாக எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அது பொருந்தாது.

மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோட்ஸே உச்சநீதிமன்றத்தில் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்தார். அவர் ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகவே, நளினி உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் நீதிபதி நாகமுத்துவிடம் கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி செப்டம்பர் 17ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நளினியை விடுதலை செய்யக்கூடாது நீதிமன்றில் தமிழக அரசு மனுதாக்கல்

வீரகேசரி நாளேடு 8/29/2008 9:53:07 PM - முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மற்றும் ஜெயகுமார், ரொபர்ட் பயாஸ் ஆகியோரை சிறையிலிருந்து விடுதலைசெய்யக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத் திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஜெயகுமார், ரோபர்ட் பயாஸ் ஆகியோரும் தங்களை விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.நாகமுத்து இந்த மனுக்களை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்துள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435இன் படி சி.பி.ஐ. புலன் விசாரணை செய்த வழக்கில் மாநில அரசு தலையிட முடியாது. மேலும் நளினி உள்ளிட்ட 3 பேரும் தங்களை விடுதலை செய்யக்கோரி ஆலோசனை குழு முன்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்கள்.

இந்த விண்ணப்பங்களை ஆலோசனை குழு நிராகரித்து முடிவெடுத்துள்ளது. அந்த குழுவில் 7 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரரின் கூற்று தேவையற்ற ஒன்று. மூன்று பேர் இருந்தாலே போதுமானது.

மேலும், அவர்கள் 3 பேரின் மனுக்களை நிராகரித்த ஆலோசனை வாரியம், இதற்கு 3 காரணங்களைக் குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பிரதமரைக் கொலை செய்தது, திட்டமிட்டு கொடூரச் சம்பவத்தை நிகழ்த்தியது, விடுதலைப்புலிகள் மீதான உணர்வு இன்னும் குறையாமல் உள்ளது என்று ஆலோசனை வாரியம் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.