Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் பிரசாரத்தை முறியடித்த வான்புலிகள்: "லக்பிம" வார ஏடு

Featured Replies

சிறிலங்காவின் பிரசாரத்தை முறியடித்த வான்புலிகள்: "லக்பிம" வார ஏடு

[ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 07:59 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

திருகோணமலை மீதான தாக்குதல் போர் தொடர்பான கணிப்பீட்டை முற்றாகவே மாற்றியிருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

திருகோணமலை நகரை பெரும் வெடியோசை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9:10 மணியளவில் அமைதியாக இருந்து அதிர வைத்தது. அதனை தொடர்ந்து வானத்தை நோக்கி சரமாரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வாண வேடிக்கைகள் போன்று வாணம் காட்சியளித்தது.

மணலாறில் உள்ள இராணுவ தலைமையகத்தை கடந்த ஏப்ரல் 21 ஆம் நாள் தாக்கிய பின்னர் வான்புலிகள் நடத்திய தாக்குதல் இதுவாகும்.

வன்னியில் அதிக பிரதேசங்களை படையினர் கைப்பற்றி வருவதனால் வான்புலிகள் செயற்திறன் அற்ற நிலைக்கு தள்ளப்படலாம் என்பது சிறிலங்காவின் தென்பகுதி மக்கள் பலரினது கருத்து.

ஆனால், வான்புலிகளின் இந்த தாக்குதல் பலரையும் ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.

வன்னியில் இருந்து இரு இலகுரக வானூர்திகள் மேல் எழுந்ததை வவுனியாவில் உள்ள ராடர்கள் முதலில் கண்டறிந்திருந்தன.

இந்தியாவினால் வழங்கப்பட்ட ராடருக்கு பொறுப்பான அதிகாரி இந்த தகவலை கொழும்புக்கு தெரிவித்திருந்தார். அதன் பின்னர் வான்படையின் கட்டுப்பாட்டு அறை வேகமாக இயங்கத்தொடங்கியது. முதலில் வன்னிப் பகுதி படைத்தளங்கள் உயர் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் பின்னர் திருகோணமலை தளமும், பொருளாதார முக்கியத்துவம் மிக்க பகுதிகளும் உயர் விழிப்பு நிலைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் வான்புலிகளின் வானூர்திகள் முல்லைத்தீவில் இருந்து கடற்கரை வழியாக திருகோணமலைக்கு சென்றது.

வான்புலிகளின் வானூர்தி வானில் எழுந்த பல நிமிடங்களின் பின்னரே வவுனியாவில் உள்ள தளங்கள் அதனைக் கண்டறிந்துள்ளன.

அதாவது, இந்த தடவையும் வான்புலிகள் தமது முன்னைய உத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மிகவும் தாழ்வாக பறந்த பின்னரே மேல் எழுந்துள்ளனர்.

இதனிடையே வான்புலிகளின் வானூர்திகள் நிலாவெளி பக்கத்தில் இருந்து வந்ததாகவும், கடல்மட்டத்தில் இருந்து சில அடி உயரத்திலேயே அவை பறந்ததாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்சரிக்கையை தொடர்ந்து திருகோணமலை கடற்படை தளத்தில் இருந்த படையினர் வான் எதிர்ப்பு தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் எச்சரிக்கை கிடைக்கப்பெற்ற மூன்று நிமிடங்களில் வானூர்திகள் தளத்தை அண்மித்து விட்டன.

தளத்தை அண்மித்ததும் ஆயிரம் அடிகளுக்கு மேலே எழுந்த வானூர்திகள் குண்டு வீச்சுக்களை உடனடியாகவே தொடங்கின. தளத்தில் இருந்த வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயங்கிய போதும் வான்புலிகளின் குண்டு வீச்சுக்களை நிறுத்த முடியவில்லை.

திருகோணமலை துறைமுகம், கடற்படைத்தளம், சீனன்குடா கடற்படைத்தளம் ஆகியவற்றில் இருந்த வானூர்தி எதிர்ப்பு சாதனங்கள் தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் தாக்குதல்களை நடத்தின.

ஆனால், அதற்கு முன்னரே வான்புலிகள் குண்டு வீச்சுளை நடத்திவிட்டு தளம் திரும்ப தொடங்கிவிட்டனர்.

ஒரு குண்டு கடற்படை தளத்தின் தங்குமிடத்தில் வீழந்து வெடித்திருந்தது, இந்த குண்டே அதிக சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. மற்றைய குண்டு காட்டுப்பகுதியில் வீழந்திருந்தது. தாக்குதல் நடைபெற்ற போது வான்படை மற்றும் கடற்படை பேச்சாளர்களின் தொலைபேசிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

எனவே, ஊடகவியலாளர்கள் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.

அரச தரப்பு இழப்பு தொடர்பாக குறைத்து கூறிய போதும், இந்த தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச புலனாய்வு பிரிவினரின் தகவல்களின் படி வான்புலிகளின் இரு வானூர்திகளின் பிரதான இலக்கு ஜெற்லைனர் எனப்படும் பாரிய துருப்புக்காவி கப்பலாகும்.

இந்த கப்பலே படையினரை யாழ். குடாநாட்டுக்கும் திருகோணமலைக்கும் கொண்டு செல்வதாகும். தாக்குதல் நடைபெற்ற போது தளத்தின் வெளிச்சங்கள் அனைத்தும் அணைக்கப்பட்ட நிலையில் கப்பலின் வெளிச்சங்கள் மட்டும் எரிந்தவாறு இருந்தது. பெருமளவிலான படையினரை கொல்வதே இந்த தாக்குதலின் நோக்கம்.

ஜெற்லைனரில் 3,000 படையினர் பயணம் செய்யவிருந்தனர். அவர்கள் திருகோணமலை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடற்படை தளத்தில் பெரும்தொகையான படையினர் தங்கவில்லை எனில் வான்புலிகள் துருப்புக்காவி கப்பலை தகர்த்திருப்பார்கள்.

இது ஒரு உளவியல் நடவடிக்கை, இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் வங்கி கணக்குகளில் பல மில்லியன் டொலர்களை கொண்டுவரும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இது வான்புலிகள் நடத்திய ஆறாவது வான் தாக்குதலாகும்.

எனினும் தெற்கில் இது ஏழாவது இலக்கு.

ஆனால் ஏழாவது தடவை வான்புலிகள் தாக்கிய போதும் ஏன் அவர்களின் வானூர்திகளை சுட்டுவீழ்த்த முடியவில்லை? வான்படையினர் நடவடிக்கையில் இறங்குவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த இடைவெளியில் வான்புலிகள் வன்னிக்கு பாதுகாப்பாக திரும்பி விடுகின்றனர்.

திருகோணமலை மீதான தாக்குதல் போர் தொடர்பான கணிப்பீட்டை முற்றாகவே மாற்றியிருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.

இதனிடையே திருகோணமலை தளத்தில் இருந்த படையினர் வான்புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துவதில் செய்திறனுடன் செயற்பட்டார்களா என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கொமடோர் தலைமையில் ஐவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த தரையில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் ஏன் ஏவப்படவில்லை என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள வானூர்தி எதிர்ப்பு பொறிமுறைகள் இயங்கிய போதும் ஏன் வான்புலிகளின் வானூர்திகள் சுட்டுவீழ்த்தப்படவில்லை என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.

இராணுவம் வன்னியில் அதிக நிலப்பரப்புக்களை கைப்பற்றி வருவதனால் வான்புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டு விடும் என பலரும் நம்பியிருந்தனர்.

திருகோணமலை வான்பரப்பில் தோன்றியிருந்த மழை முகில் கூட்டமும் வான்புலிகளுக்கு உதவி புரிந்திருந்தது. இது படையினருக்கு பாதகமானது.

மேலும் பாரிய துருப்புக்காவி கப்பலின் செயற்பாடுகள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தகவல்கள் சென்றடைந்தன என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரச படையினாரின் வானூர்தி எதிர்ப்பு பீரங்கி குண்டுகள் வானில் இருந்து நிலத்தில் வீழந்ததனால் பல பொதுமக்கள் காயமடைந்துள்னர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.